🌿 காய்கறிகள், கீரைகள் போன்ற பல விதைகளை விதைக்கும்போது சிலவற்றை முக்கியமாக கவனிக்க வேண்டும். அதைப் பற்றி இங்கு காண்போம்.
🌿 மண் இறுகி உள்ள நிலத்தில் விதைப்பை தவிர்க்க வேண்டும். மண்ணின் தன்மைக்கேற்ப பலன் கொடுக்கும் விதைகளை விதைக்க வேண்டும்.
🌿 விதைக்கும்போது விதைகளை மிக மிக அருகில் விதைக்கக்கூடாது.
🌿 மேலும், ஆழமாக விதைகளை விதைக்கக்கூடாது. விதை மண்ணில் மூடி இருந்தால் போதும்.
🌿 விதைத்தப்பின் நீரை அதிகமாக ஊற்றக்கூடாது. விதை மக்கிதான் முளைக்கும் அதிக ஈரம் இருந்தால் முளைக்காது.
🌿 கீரை விதையை தூவிவிட்டு மண்ணை கிளறி விட வேண்டும். பின் மெதுவாக மண்ணை அழுத்தி விட வேண்டும்.
🌿 இதன் மூலம் விதையும், மண்ணும் ஒட்டும் முளைப்பு நன்றாக இருக்கும். மண்ணில் கீரை விதை விதைத்த பின் நீரை தெளித்து விட வேண்டும்.
🌿 தொட்டியாக இருந்தால் அதன் ஓரத்தில் நீர் ஊற்ற வேண்டும். நிழலில் வைக்கக்கூடாது.
🌿 மண்ணில் வளர்வதை விட தொட்டியில் நாட்டு விதைகளின் வளர்ச்சி குறைவாக தான் இருக்கும்.
🌿 நாட்டு விதையை விதைக்கும் முன் பஞ்சகாவியாவில் இரண்டு மணி நேரம் ஊற வைத்து, பின் காய வைத்து விதைத்தால் வளர்ச்சி நன்றாக இருக்கும்.
🌿 தக்காளி, கத்தரி, மிளகாய் விதைகளை கண்டிப்பாக நாற்று விட்டு தான் பின் எடுத்து நடவு செய்ய வேண்டும். கீரை விதை விதைக்கும் முறையில் இதனை விதைக்க வேண்டும்.
🌿 விதைகளை நாட்டு மாட்டு கோமியத்தில் ஊற வைத்து பின் அதனை காய வைத்து சுரைக்குடுவையில் வைத்து எத்தனை வருடம் வேண்டுமாலும் சேமிக்கலாம்.
🌿 மண்ணில் மாட்டு சாணியை கலந்த பின் விதைத்தால் விதை விரைவாக மக்கி முளைக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக