1. Introverts : மற்றவர்களிடம் அதிகம் பழக மாட்டார்கள். தனிமையை ரசிப்பார்கள். அதற்காக மற்றவர்களை அவர்களுக்குப் பிடிக்காது என்று அர்த்தம் இல்லை. அன்பும், பாசமும் இருந்தாலும் வெளிக்காட்ட மாட்டார்கள்.
2. Extroverts : எப்போதும் சகஜமாகப் பழகுவார்கள். ஆட்கள் இருக்கும் சூழலையே விரும்புவார்கள். வெளிப்படையாகத் தங்கள் உணர்வுகளைக் காட்டுவார்கள்.
3. Ambiverts : மேலே கூறிய இருவகையினருக்கும் இடைப்பட்டவர்கள்.
புத்தியின் தன்மை கொண்டு மனிதர்களை
நான்கு வகையாகப் பிரிக்கலாம்.
தைல புத்தி : ஒரு பாத்திர நீரில் எண்ணெயை விட்டால் நீரின் மேல் எண்ணெய் அப்படியே பரவும். அதுபோல கேட்ட விஷயத்தை நன்கு புரிந்து கொண்டு பிறருக்கும் சொல்லித் தெளிய வைப்பார்கள்.
கிரத புத்தி : நெய்யை எடுத்து ஒரு பாத்திர நீரில் போட்டால் அந்த நெய் அப்படியே மிதக்கும். பிறரிடம் கேட்பதை அப்படியே தான் அறிந்து கொள்வர். பிறர் கேட்டால் சொல்லத் தெரியாது.
கம்பள புத்தி : விழாவில் கம்பளம் விரித்து, விழா முடிந்தவுடன் ஒரு உதறு உதறி வைப்பதுபோல வரும்போது ஒன்றும் தெரியாமல் வந்து திரும்பப் போகும்போது உதறிய கம்பளம் போல ஒன்றும் தெரிந்து கொள்ளாமல் போய் விடுவர்.
களிமண் புத்தி : எந்த விஷயமும் இவர்களுக்குப் புத்தியில் ஏறாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக