Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 3 நவம்பர், 2020

ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டதா? உடனே இதைப் பண்ணுங்க!

உங்களது எஸ்பிஐ ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டால் உடனடியாக அதை எவ்வாறு பிளாக் செய்வது மற்றும் புதிய கார்டு பெறுவது எப்படி என்று பார்க்கலாம்.

 

என்னதான் பாதுகாப்பு அம்சங்கள் பலப்படுத்தப்பட்டு வந்தாலும் ஏடிஎம் கொள்ளைகளும் பண மோசடிகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. நமக்கே தெரியாமல் நமது ஏடிஎம் கார்டு விவரங்களைத் திருடி பணத்தை எடுப்பது போன்ற சம்பவங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. எனவே ஏடிஎம் கார்டு தொலைந்துவிட்டாலோ அல்லது திருடப்பட்டுவிட்டாலோ உடனே அதிலிருந்து பணம் திருடப்படுவதை எவ்வாறு தடுப்பது என்ற சந்தேகம் இருக்கும். அதேபோல, புதிய ஏடிஎம் கார்டு வாங்குவதற்கு என்ன செய்ய வேண்டும், யாரை அணுக வேண்டும் போன்ற கேள்விகளும் இருக்கும்.

உங்களது எஸ்பிஐ வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் எண்ணிலிருந்து 1800 112 211 அல்லது 1800 425 3800 என்ற டோல் பிரீ எண்ணுக்கு அழைத்து நீங்கள் உங்களது தொலைந்துபோன அல்லது திருடுபோன ஏடிஎம் கார்டை பிளாக் செய்யலாம். அதேபோல, 1800 425 3800 என்ற எண்ணிலேயே புதிய ஏடிஎம் கார்டுக்கும் நீங்கள் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலமாகவும் நீங்கள் மிக எளிதாக புதிய கார்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.

அதற்கான எளிய வழிகள் இதோ...

>> sbicard.com. வலைதளத்தைப் பார்வையிடவும்.

>> ‘Request’ என்ற வசதியை கிளிக் செய்து அதில், ’Reissue/Replace Card’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.

>> உங்களது ஏடிஎம் கார்டு நம்பரை அதில் தேர்வு செய்து ’Submit’ கொடுக்கவும்.

மொபைல் ஆப் மூலமாக விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்...

>> உங்களது ஸ்மார்ட்போனில் உள்ள sbicard mobile app செயலியில் லாகின் செய்யவும்.

>> ’Menu tab’ என்பதை கிளிக் செய்து 'Service Request' என்பதைத் தேர்வுசெய்யவும்.

>> 'Reissue/Replace Card' கிளிக் செய்து உங்களது ஏடிஎம் கார்டு எண்ணைப் பதிவிட்டு 'Submit' கொடுக்கவும்.

புதிய கார்டு வாங்குவதற்கு ஜிஎஸ்டியுடன் சேர்த்து நீங்கள் 100 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். அதேபோல, புதிய கார்டுக்கு விண்ணப்பித்த ஏழு வேலை நாட்களுக்குள் புதிய ஏடிஎம் கார்டு உங்களுக்கு வந்து சேரும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக