
இறைவர் திருப்பெயர் : ஞானபரமேஸ்வரர்
இறைவியார் திருப்பெயர் : ஞானாம்பிகை, பெரியநாயகி
தல மரம் : பலாசு, வில்வம்
தீர்த்தம் : ஞானதீர்த்தம், சந்திர தீர்த்தம்
வழிபட்டோர் : நான்கு வேதங்கள், ஆபத்தம்ப முனிவர்
தேவாரப் பாடல்கள் : திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர்
தல வரலாறு:
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக
அருள்பாலிக்கிறார்
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 159 வது தேவாரத்தலம் ஆகும். இது
ஒரு மாடக்கோவிலாகும்.
சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக
இருந்த ஊர், தமிழில் "நால்வேதியூர்' என்று வழங்க தொடங்கி "நாலூர்' என்று
மருவி இருக்கலாம். வேதங்களில் சிறப்புற்று விளங்க இத்தலம் வந்து பூஜித்தால்
சிறந்து விளங்கலாம் என்பது நம்பிக்கை. நான்கு மயானங்களில் இதுவும் ஒன்று
மற்ற மூன்றும்
1. கச்சி மயானம்,
2. கடவூர் மயானம்.
3. காழி மயானம் என்பவை.
ஆபத்தம்ப முனிவர் பூசித்தது. நான்கு
வேதங்களும் வழிபட்ட சிறப்பினது. இலிங்கத்தின் திருமுடியில் சில வேளைகளில் பாம்பு
ஊர்வதாகக் கூறுகின்றனர். இது பற்றிய குறிப்பு தேவாரத்திலும் உள்ளது. அதற்கு
ஞானசம்பந்தரின் பதிகத்தின் முதல் பாடலில் வரும் "பாலூரும் மலைப்பாம்பும்
பனிமதியும் மத்தமும் மேலூரும் செஞ்சடையான்" என்னும் இவ்வூர்த் தேவாரப்
பகுதியைக் காட்டுவர்.
சோழர்காலத்து ஏகதளக் கற்றளியாகிய இக்கோயில் மிக்க கலையழகுடையது. சோழர் காலக்
கலைப்பணியைச் சேர்ந்தது. முதல் ஆதித்தன் காலத்துத் திருப்பணியைப் பெற்றது.
கருவறை சதுரமானது.சிகரம் உருண்டைவடிவுடையது. தூண்களும் போதிகைகளும் சிற்ப அழகு
உடையவை. சோழர் காலத்தில் சதுர்வேதி மங்கலமாக இருந்த ஊர், தமிழில்
"நால்வேதியூர்' என்று வழங்க தொடங்கி "நாலூர்' என்று மருவி இருக்கலாம்.
வேதங்களில் சிறப்புற்று விளங்க இத்தலம் வந்து பூஜித்தால் சிறந்து விளங்கலாம்
என்பது நம்பிக்கை.
கோவில் அமைப்பு:
சோழர் காலத்து கட்டிடக் கலைப்பாணியில்
அமைந்த இககோவில் கிழக்கு நோக்கி ஒரு முகப்பு வாயிலுடன் அமைந்துள்ளது. முகப்பு
வாயிலுக்கு வெளியே நந்தி மண்டபமும், பலிபீடமும் உள்ளன. கோவிலுக்கு வெளியே
ஞானதீர்த்தம் உள்ளது. வாயில் வழி உள் நுழைந்தால் வெளிப் பிரகாரம் உள்ளது.
பிரகாரம் சுற்றி வரும்போது மேற்குச் சுற்றில் அமிர்தகடேஸ்வரர், சட்டநாதர்,
ஏகாம்பரேஸ்வரர், ஸ்ரீவீழிஅழகர் ஆகிய சிவலிங்கத் திருமேனிகள் வரிசையாக உள்ளன.
அதையடுத்து நாகாராஜா, சண்டிகேஸ்வரி, புதிய தட்சிணாமூர்த்தி, ஆத்மலிங்கம்
ஆகியவற்றைக் காணலாம். வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானின் சந்நிதியும் இப்பிரகாரத்தில்
உள்ளது. வடக்குப் பிரகாரத்தில் கோஷ்டத்தில் விஷ்ணு துர்க்கையைக் காணலாம். நவக்கிரக
சந்நிதியும் வெளிப் பிரகாரத்தில் உள்ளது.
பிரகாரச் சுற்று முடிந்து கருவறை மண்டப வாயில் வழி உள்ளே நுழைந்தால் மூலவர்
கருவறையில் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். இறைவன் கருவறை விமானம் உருண்டை
வடிவத்திலுள்ளது. அம்பாள் தெற்கு நோக்கி தரிசனம் தருகிறாள்.
சிறப்புக்கள் :
திருமணத்தடை நீங்க, கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கவும் இத்தல இறைவனை பிரார்த்தனை செய்கின்றனர்.
போன்:
9486767962, 7502056284
அமைவிடம் மாநிலம் :
தமிழ் நாடு கும்பகோணம் - குடவாசல் சாலை வழியில் திருச்சேறை என்ற பாடல் பெற்ற
தலத்தை அடுத்து வருவது நாலூர் என்ற ஊர். நாலூர் தாண்டி குடவாசல் செல்லும் வழியில்
உள்ள அத்திக்கடை பாலத்திற்கு முன்னால் இடதுபுறம் பிரியும் சாலையில் சிறிது தூரம்
சென்றால் நாலூர் மயானம் என்ற இத்தலம் இருக்கிறது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் 9 மணி வரையில் மட்டும் திறந்திருக்கும்.
இங்கு மூலவர் கஜப்பிரஷ்ட விமானத்தின்கீழ் அருள்பாலிக்கிறார். இது ஒரு மாடக்கோவிலாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.
அருள்தரும் ஆலயங்கள்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக