Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

திங்கள், 19 ஏப்ரல், 2021

ஊருக்கு போகணுமா? பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!

 

நாளை முதல் தமிழ்நாட்டில் ஊரடங்கு அறிவிப்புகள் அமலுக்கு வரவுள்ள நிலையில் போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரும் நிலையில் பயணிகளுக்கு போக்குவரத்துக் கழகம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. “கொரோனா நோய்த்தொற்று பரவுவதை தடுக்க மத்திய அரசு வழிகாட்டுதலின்படி தமிழ்நாடு அரசின் சார்பில் ஊரடங்கு உத்தரவு கட்டுப்பாடுகளுடன் தளர்வுகளும் அமலில் இருந்து வருகிறது. நோய் பரவல் நிலை தற்போது அதிகரித்து வருகின்ற நிலையில் அதனை கட்டுப்படுத்த என்ற வகையில் நாளை செவ்வாய்க்கிழமை முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த ஊரடங்கு உத்தரவில் இரவு நேரங்களில் வெளிமாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்து சேவையும் இயங்கிட அனுமதி இல்லை. மேலும் பகல் நேரங்களில் இயக்கப்படுகின்ற பேருந்து சேவைகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்தல் கூட்ட நெரிசலை தவிர்த்து உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை தவறாமல் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு விதித்துள்ள இரவுநேர ஊரடங்கை கருத்தில் கொண்டு பொதுமக்களுக்கு வசதியாக சென்னையிலிருந்து குறுகிய மற்றும் தொலைதூர ஊர்களுக்கும் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படுகின்ற பேருந்துகளானது அதிகாலை 4 மணி தொடங்கி இரவு 8 மணிக்குள்ளாக சென்று சேரும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


மேலும் அரசு விடுமுறையான ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் அன்றைய தினம் பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது. இந்த வசதியினை பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு உரிய வழிமுறைகளை பின்பற்றி பாதுகாப்பா முறையில் பயணம் செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விரைவு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் தங்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு பயண தேதியை மாற்றி அமைத்துக் கொள்ள ஏதுவாக அருகே உள்ள பேருந்து நிலைய கட்டுப்பாட்டு அலுவலகத்தை அணுகி தகுந்த மாற்று ஏற்பாடு செய்து கொள்ளலாம்.

அப்படி இல்லாத பட்சத்தில் அக்கட்டணத் தொகையானது திருப்பி வழங்கப்படும் தளவழி முன்பதிவு செய்த பயணிகள் தளவழி மூலமாக பயண கட்டணத்தை திரும்பப் பெற வசதி செய்யப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள ஞாயிற்றுக் கிழமைகளில் முன்பதிவு செய்துள்ள பயணிகளுக்கு மேற்குறிப்பிட்ட நடைமுறையே பின்பற்றப்படும்.


மாநகர் போக்குவரத்துக் கழகத்தை பொருத்தமட்டில் பயணிகள் நின்றுகொண்டு பயணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதால் முக்கிய வழித்தடங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் அரசு விதித்துள்ள இரவு ஊரடங்கினைப் பற்றி 4 மணி தொடங்கி 10 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக