திங்கள், 22 ஆகஸ்ட், 2022

NPS திட்டம்: மனைவி பெயரில் கணக்கு திறந்தால் மாதம் ரூ.45,000 வரை பெறலாம்!

திங்கள், ஆகஸ்ட் 22, 2022
ஒரு கணவன் அவருக்கு பிறகு அவரது மனைவி பணத்தேவைக்காக பிறரை சார்ந்து இருக்கக்கூடாது என்று நினைத்தாலோ அல்லது தனது மனைவிக்கு நிரந்தரமான ஒரு வருமானம் கிடைக்க வழிவகுக்க வேண்டும் என நினைத்தாலோ அதற்கான சரியான முதலீட்டு திட்டம் புதிய பென்ஷன் சிஸ்டம் (என்பிஎஸ்) திட்டம். 

இந்த என்பிஎஸ் திட்டத்தில் உங்கள் மனைவி பெயரில் கணக்கைத் தொடங்க வேண்டும், 60 வயதை எட்டியதும் அவருக்கு மொத்த தொகை கிடைக்கும். மொத்த தொகை கிடைப்பது மட்டுமின்றி அவர்களும் மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை ஓய்வூதியமாகவும் இந்த திட்டத்தின் மூலம் கிடைக்கிறது. 

இந்த புதிய பென்ஷன் சிஸ்டம் கணக்கில் உங்கள் வசதிக்கேற்ப ஒவ்வொரு மாதமும் அல்லது ஆண்டுதோறும் பணத்தை டெபாசிட் செய்து கொள்ளலாம். இதில் நீங்கள் உங்கள் மனைவியின் பெயரில் வெறும் ரூ.1,000 டெபாசிட் செய்து கூட கணக்கை திறந்து கொள்ளமுடியும். 

இந்த என்பிஎஸ் கணக்கின் அந்நபருக்கு 60 வயது ஆனதும் முதிர்ச்சி அடைந்துவிடும், இதனை நீங்கள் நீட்டிக்க விரும்பினால் புதிய விதிகளின் அடிப்படியில் உங்களால் மனைவியின் 65 வயது வரை கணக்கின் காலத்தை நீட்டிப்பு செய்து கொள்ளலாம்.

உதாரணமாக உங்கள் மனைவிக்கு 30 வயதாக இருந்தால், அவருடைய என்பிஎஸ் கணக்கில் ஒவ்வொரு மாதமும் ரூ.5000 முதலீடு செய்யும்பொழுது, ஆண்டுதோறும் முதலீட்டில் 10 சதவீதம் வருமானம் கிடைத்தால், 60 வயதில் அவர் கணக்கில் மொத்தம் ரூ.1,11,98,471 இருக்கும். இதில் அவர்களுக்கு சுமார் ரூ. 44,79,388 கூடுதலாக கிடைக்கும். 

இது தவிர அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் சுமார் ரூ.45,000 வரை ஓய்வூதியம் கிடைக்கப்பெறும். என்பிஎஸ் என்பது மத்திய அரசின் சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும். இந்தத் திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்யும் பணம் தொழில்முறை நிதி மேலாளரால் நிர்வகிக்கப்படுகிறது. .

இந்த புதிய பென்சன் திட்டத்தில் நீங்கள் செய்யும் முதலீடு முற்றிலும் பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது. இருப்பினும், இந்தத் திட்டத்தின் கீழ் நீங்கள் முதலீடு செய்யும் பணத்தின் வருமானத்திற்கு எவ்வித உத்தரவாதம் இல்லை என்றும் கூறப்படுகிறது.

குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டு செல்லும் போது பெற்றோர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவை.!

திங்கள், ஆகஸ்ட் 22, 2022
தங்கள் குழந்தைகளுடன் நேரத்தை செலவிட பெற்றோர்கள் பெரிதும் விரும்புகிறார்கள். ஆனால் இருவரும் வேலைக்கு சென்றால் தான் குடும்பத்தை நன்றாக நடத்த முடியும் என்ற கட்டாயம் உள்ள இந்த நவீன காலத்தில், குழந்தையை டேகேர் அல்லது வீட்டில் தனியாக விட்டுச் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

உங்களது குழந்தையை நீங்கள் விரும்பியோ, விரும்பாமலோ, வேலை அல்லது ஏதாவது எமெர்ஜென்சி காரணமாக சில மணிநேரங்களாவது வீட்டில் தனியாக விட்டுச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். இது போன்ற தவிர்க்க முடியாத நேரத்தில் அவர்களை வீட்டில் தனியாக இருக்க தயார்படுத்துவது சிறந்தது. நீங்கள் தொலைவில் இருக்கும் போது சுதந்திரமாக செயல்பட, உங்களையே நம்பியிருப்பதைத் தவிர்க்க குழந்தைகளுக்கு உதவும். அதே போல குழந்தைகள் தனியாக வீட்டில் இருக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி அவர்களுக்கு கற்பிப்பது முக்கியம்.

உங்கள் குழந்தைகளை வீட்டில் தனியாக இருக்க விடும் முன் நீங்கள் பின்பற்ற வேண்டிய சில குறிப்புகள் இங்கே...

எமர்ஜென்சிக்கு சில நம்பர்கள்..

ஒரு குழந்தை தனியாக இருக்கும் நேரத்தில் குறைந்தபட்சம் உங்களது மொபைல் நம்பர் உட்பட 3 முதல் 5 அவசரகால தொடர்பு நம்பர்களையாவது மனதளவில் அறிந்து வைத்திருப்பது அவசியம். இதில் பெற்றோர், நெருங்கிய உறவினர் மற்றும் நம்பகமான அண்டை வீட்டாரின் தொலைபேசி எண்கள் இருக்க வேண்டும். தவிர அவசரநிலை ஏற்பட்டால் ஆம்புலன்ஸ், தீயணைப்புப் படை மற்றும் காவல்துறை போன்ற பிற அவசர தொடர்பு எண்களை பற்றியும் குழந்தைகளுக்குச் சொல்லி அவற்றை எழுதிய டைரியை அவர்கள் கைகளுக்கு எட்டும் தூரத்தில் வைக்க வேண்டும். வெளியில் இருந்தாலும் வீட்டிற்கு அடிக்கடி கால் செய்தோ அல்லது அக்கம்பக்கத்தினரை அடிக்கடி கண்காணிக்கவோ கேட்கலாம்.

சில ரூல்ஸ் அவசியம்:

குழந்தைகள் வீட்டில் தனியாக இருக்கும் போது நாள் முழுவதும் டிவி பார்ப்பது அல்லது வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்றவற்றில் ஈடுபட்டால் அதை கட்டுப்படுத்த சில அடிப்படை ரூல்ஸ்களை கடைபிடிக்க வைப்பது மிகவும் முக்கியம். எனவே நீங்கள் சில பேசிக் ரூல்ஸ்களை உருவாக்கி, அதை கடைபிடிப்பது ஏன் அவசியம் என்பதை அவர்களுக்கு முதலில் புரிய வைக்க வேண்டும். குழந்தைகள் டிஜிட்டல் ஸ்கிரீன்களில் நேரத்தை செலவிடுவதை தவிர்க்க கலைபொருட்கள் செய்வது அல்லது புதிர் விளையாட்டுகளில் ஈடுபடும் பழக்கத்தை ஏற்படுத்தி ஊக்குவிக்கலாம்.

பாதுகாப்பு முக்கியம்:

ஒரு குழந்தை வீட்டில் தனியாக இருக்கும் போது அதன் பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. உங்கள் குழந்தை அடுப்பு, தீப்பெட்டி, கத்தி, பிளேடுகள், மருந்துகள் உள்ளிட்ட இன்னும் பல அபாயகரமான பொருட்களை தனியே இருக்கும் போது பயன்படுத்தாமல் பார்த்து கொள்வது அவசியம். தீங்கு விளைவிக்கக்கூடிய பொருட்களை உங்கள் பிள்ளையின் கை மற்றும் பார்வைக்கு எட்டாதவாறு வைப்பது நல்லது. அதே போல தீ, கொள்ளை, மருத்துவ நெருக்கடிகள் அல்லது வேறு ஏதேனும் அவசரகால சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பதை அவர்களுக்கு கற்று கொடுப்பதும் முக்கியம். தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்கும் கருவியை எப்படி பயன்படுத்துவது, முதலுதவி பெட்டியை எவ்வாறு பயன்படுத்துவது உள்ளிட்டவற்றை கற்று கொடுக்க வேண்டும்.

அத்தியாவசிய உணவுகள்..

குழந்தையை தனியாக விட்டு செல்லும் முன் அவர்கள் அணுகுமாறு அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுகள் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். சில பழங்கள், ஆரோக்கியமான தின்பண்டங்கள் அல்லது உணவுகளை அவர்கள் லிதில் எடுத்து சாப்பிடும் வகையில் வைத்து செல்ல வேண்டும். கரண்ட் போகும் சூழலை அவர்கள் சமாளிக்க மின் விளக்குகளையும் அவர்களுக்கு கொடுத்து வைக்க வேண்டும்.

கதவை திறப்பதில் கவனம்..

வீட்டில் யாரும் இல்லாத போது கதவு தட்டும் சத்தம் அல்லது காலிங் பெல் சத்தம் கேட்டால் கதவை திறப்பதற்கு முன், வெளியில் யார் இருக்கிறார்கள், எதற்காக இங்கே வந்திருக்கிறார்கள் என்பதை உங்கள் குழந்தை கேட்டறிந்து பின் கதவை திறப்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள். தெரியாத புது நபர்கள் வந்தால் கட்டாயம் கதவை திறக்கவே கூடாது என்பதை அவர்களுக்கு தெளிவாக புரிய வைக்க வேண்டும்.

வேலையை விட்டுவிட்டு பிசினஸ் தொடங்கப்போகிறீர்களா? இதோ சில டிப்ஸ்!

திங்கள், ஆகஸ்ட் 22, 2022
சொந்த தொழில் செய்வது அல்லது ஒரு நிறுவனத்தில் வேலை செய்வது என ஒவ்வொரு மனிதருக்கும் இரண்டு விதமான ஆப்ஷன்கள் கிடைக்கும்.

முதல் சிலருக்கு ரிஸ்க் இல்லாமல் வாழ வேண்டுமென்றால் ஒரு நிறுவனத்தில் வேலை செய்துவிட்டு வரும் சம்பளத்தில் சிக்கனமாக குடும்பம் நடத்தி கொள்வார்கள். ஆனால் சொந்த தொழில் செய்ய வேண்டும் என்ற கனவு பலரிடத்தில் இருக்கும். 

சொந்த தொழில் செய்தால் தொழிலதிபராகி ஒரு சில ஆண்டுகளில் லட்சாதிபதியாகலாம் என்றும் பலர் நினைப்பதுண்டு. இந்த நிலையில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே சொந்த தொழில் செய்யவேண்டும் என்ற எண்ணம் ஏற்படுபவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம்.

சொந்த தொழில் 

வேலை செய்வதை விட தொழில் செய்வது என்பது கவர்ச்சிகரமானது என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் அதே நேரத்தில் பொருத்தமான தொழில் மற்றும் திட்டமிடல் மிகவும் அவசியம். உங்கள் தொழில் பயணத்தை ஆரம்பிக்கும் முன் சரியான கட்டமைப்பு மற்றும் நிதி அமைப்புகளை நீங்கள் உருவாக்கி கொண்டீர்களா? என்பதை உறுதி செய்து கொண்ட பின்னர் தான் நீங்கள் வேலையை விட்டு வெளியே வந்து சொந்த தொழிலை ஆரம்பிக்க வேண்டும்.

சேவை வணிகம் 

பொதுவாக தயாரிப்பு வணிகத்தைவிட சேவை வணிகம் தொடங்குவது எளிதானது மற்றும் லாபகரமானது ஆகும். நீங்கள் உங்கள் சேவைகளை அதாவது உங்கள் நேரத்தை விற்பனை செய்து பெரும் வருவாய் பெறலாம். தயாரிப்பு வணிகங்கள் மிகவும் மதிப்புடையது மட்டுமன்றி மூலதனமும் அதிகம் ஆகும். எனவே சேவை தொழிலை செய்வது உங்களுக்கு மிகுந்த லாபம் கிடைக்கும் என்பதை முதல் கட்டமாக தெரிந்து கொள்ளுங்கள்.

பொறுமை முக்கியம் 

மேலும் ஒரு தொழிலைத் தொடங்கினால் 3 முதல் 5 ஆண்டுகள் வரை சோதனையான காலமாக இருக்கும். அந்த நேரத்தில் மிகவும் பொறுமையாக நிதானமாக முடிவெடுத்து தொழிலை மென்மேலும் வளர்ப்பது எப்படி என்பதை யோசிக்க வேண்டும். மேலும் நீங்கள் வேலையை விட்டு விட்டு வெளியே வருவதாக இருந்தால் குறைந்தபட்சம் இரண்டு வருடத்திற்கு உங்கள் குடும்பத்தை கவனிக்கும் அளவுக்கு உங்களிடம் வங்கியில் இருப்பு இருக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் எடுத்துக்கொள்ளுங்கள்.

சோதனையான காலகட்டம் 

புதியதாக ஆரம்பிக்கும் தொழிலில் 12 முதல் 24 மாதங்கள் வரை பெரிய அளவில் வெற்றி பெற முடியாது என்பதால் அந்த காலகட்டம் சோதனையானது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

வேலையில் இருக்கும்போதே தொழில்

மேலும் நீங்கள் வேலையை விட்டுவிட்டு வணிகம் செய்வது என்பது முடிவு செய்துவிட்டால் வேலையில் இருக்கும்போதே ஓய்வு நேரத்தில் நீங்கள் வணிகத்தை தொடங்குவது குறித்து கவனத்தை செலுத்த வேண்டும். வேலையை முடித்துவிட்டு மாலை நேரத்தில் மற்றும் வார இறுதி நாட்களில் நீங்கள் ஆரம்பிக்கப் போகும் தொழில் குறித்து ஆய்வு செய்து அதற்காக என்னென்ன முன்னேற்பாடுகள் செய்ய வேண்டும் என்பதையும் முடிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன்பிறகு நீங்கள் தைரியமாக முழு நேர தொழிலதிபர்களாக ஆபத்தில்லாமல் களத்தில் இறங்கலாம்.

கோதுமை கஞ்சி

 அந்த வகையில் நீங்கள் உதாரணத்திற்கு கோதுமை கஞ்சி தயாரிக்கும் தொழிலில் ஈடுபட வேண்டும் என்றால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம். முதலில் கோதுமையை நன்றாக சுத்தம் செய்து தண்ணீரால் கழுவ வேண்டும். அதன் பிறகு அதை 5 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து தண்ணீரிலிருந்து கோதுமையை எடுத்து தண்ணீர் உலரும் வகை காய வைக்க வேண்டும். பின் மாவு மில்லில் அரைத்து கோதுமை கஞ்சி செய்யலாம்.

மூலதனம் எவ்வளவு? 

இந்த தொழில் தொடங்குவதற்கு உங்களுக்கு சொந்த நிலம் இருக்க வேண்டும். ஒருவேளை சொந்த நிலம் இல்லை என்றால் வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம். 500 சதுர அடி நிலம் இந்த தொழில் செய்வதற்குத் தேவைப்படும். வாடகை மற்றும் மூலப்பொருட்கள் ஆகியவை சேர்த்து இந்த தொழிலுக்கு இரண்டு முதல் மூன்று லட்சம் வரை மூலதனம் தேவைப்படும்.

லாபம் எவ்வளவு? 

இந்த தொழிலில் 100% திறமையாக உற்பத்தி செய்தால் ஆண்டுக்கு 600 குவிண்டால் உற்பத்தி செய்யலாம். ஒரு குவிண்டால் ரூ.1200 விலையின்படி இதன் மதிப்பு ரூ.7,19,000 ஆகும். விற்பனை விலை ரூ.8,50,000 ஆகும். எனவே இந்த தொழிலில் ஆண்டு லாபம் ரூ 1 லட்சத்து 16 ஆயிரம் கிடைக்கும்.




மணி அடித்தால் மலைப்பாம்பு நிற்கும், அது என்ன 🤔?

திங்கள், ஆகஸ்ட் 22, 2022
---------------------------------------
கடி ஜோக்ஸ்!!
---------------------------------------
பாபு : அவர் விபத்துன்னா ரொம்ப பயப்படுவார் அதனால கொஞ்சம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை அதிகமாவே இருக்கும்!
கோபு : முன்னெச்சரிக்கைன்னா என்ன செய்வார்?
பாபு : உதாரணத்துக்கு சொல்லணும்னா சலூனுக்கு போகும்போது கூட ஹெல்மெட் போட்டுட்டுத்தான் போவார்னா பாத்துக்கோங்களேன்.
கோபு : 😂😂
---------------------------------------
ரமேஷ் : மச்சி எனக்கும் என் ஆளுக்கும் கல்யாணம் ஃபிக்ஸ் ஆகிடுச்சு டா..
சுரேஷ் : டே மாப்பிள்ள சொல்லவே இல்லை, எப்போ டா..
ரமேஷ் : எனக்கு இந்த மாசம்... அவளுக்கு அடுத்த மாசம்...
சுரேஷ் : 😮😮
---------------------------------------
இது சிரிப்பதற்காக மட்டுமே..!!
---------------------------------------
🌟 தினமும் காலைல வெறும் வயிற்றில் ஏழு எறும்புகளை உயிருடன் பிடித்து பல்லில் படாமல் விழுங்கி வந்தால் உடலில் சர்க்கரை அளவு குறையும். 

🌟 நான் கூறுவதில் உங்களுக்கு சந்தேகம் இருந்தால் வீட்டில் இருக்கும் சர்க்கரையை கீழே கொட்டி விட்டு அதுமேல் எறும்புகளை மேய விடுங்க. சர்க்கரை குறையலனா என்கிட்ட வந்து கேளுங்க.. நாளைக்கு கொழுப்பு குறைக்கிறது எப்படினு சொல்லித் தரேன்..
---------------------------------------
விடுகதைகள்!!
---------------------------------------
🤔 மணி அடித்தால் மலைப்பாம்பு நிற்கும், அது என்ன? 

🚂ரயில் 

🤔 பிடியில்லாத குடையை தொட முடியவில்லை, அது என்ன? 

🌌வானம்

🤔 சிறகில்லாத பறவை தேசமெல்லாம் சுத்தும், அது என்ன? 

💌தபால்
---------------------------------------
இது உண்மை தானே?
---------------------------------------
👉 கடவுள் இருக்கிறார் என்பதை விட CCTV Camera இருக்கு என்கிற பயமே.. பெரும்பாலான தவறுகளை தடுக்கிறது..!

👉 எல்லாம் கடந்துப் போகும் என்றிருக்காமல், எல்லாவற்றையும் கடக்க பழகிக் கொண்டாலே போதும், வாழ்க்கை சிறந்த முன்மாதிரியாக அமைந்து விடும்..!!

அருள்மிகு ஜ்வாலாமுகி திருக்கோயில் காங்ரா ஹிமாச்சல பிரதேசம்

திங்கள், ஆகஸ்ட் 22, 2022
இந்த கோயில் எங்கு உள்ளது?

ஹிமாச்சல பிரதேச மாநிலம், காங்ரா மாவட்டத்தில் உள்ள ஜ்வாலாமுகி என்னும் ஊரில் அருள்மிகு ஜ்வாலாமுகி திருக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு எப்படி செல்வது?

காங்ராவில் இருந்து சுமார் 34 கி.மீ தொலைவில் ஜ்வாலாமுகி என்னும் ஊரில் இத்திருக்கோயில் உள்ளது. ஜ்வாலாமுகியில் இருந்து நடந்து செல்லும் தொலைவில் இக்கோயில் அமைந்துள்ளது.

இந்த கோயிலின் சிறப்புகள் என்ன?

51 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் மற்றும் நவசக்தி பீடங்களில் ஒன்றாகவும் இக்கோயில் கருதப்படுகிறது.

அன்னை ஆதிபராசக்தியானவள் பல்வேறு வடிவங்களில் உலகெங்கும் கோவில்கொண்டு அருள்பாலித்து வருவது நாமறிந்ததே. அவற்றில் சதிதேவியின் உடற்பகுதிகள் வீழ்ந்த 51 இடங்கள் சக்திபீடங்களாக புகழ்பெற்று விளங்குகின்றன.

அவற்றில், அன்னையின் நாக்கு பகுதி விழுந்த இத்தலம் ஒன்பதாவது சக்தி பீடமாக கருதப்படுகிறது.

வேறென்ன சிறப்பு?

ஒவ்வொரு தலங்களிலும் தன்னை ஒவ்வொரு விதமாக வெளிப்படுத்திக் கொள்ளும் அன்னை இங்கு தீச்சுடராகத் தன்னை வெளிப்படுத்துகிறாள். 

இங்குள்ள மிகப் பழமையான பாறை இடுக்குகளிலிருந்து நீலநிற தீ ஜுவாலைகள் இயற்கையாகவே வெளிப்படுகின்றன. ஒன்பது இடங்களில் வெளிப்படும் இந்த ஜுவாலைகளையே தேவியின் வடிவமாக வழிபடுகின்றனர்.

பிரதான தெய்வமாக காளிதேவி வழிபடப்படுகிறாள். சரஸ்வதி, லட்சுமி, அன்னபூரணி உள்ளிட்ட எட்டு பெயர்களில் மற்ற ஜுவாலைகள் வணங்கப்படுகின்றன.

இந்த ஜுவாலைகள் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக எரிந்து கொண்டிருக்கின்றன. இவற்றில் என்ணெயில்லை, திரியில்லை. ஆனால் இத்தீச்சுடர் இந்த பாறை இடுக்குகளிலிருந்து வெளிவரும் ஒருவித வாயுவின் மூலம் எரிவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

என்னென்ன திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது?

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் வரும் நவராத்திரி விழா இக்கோயிலில் மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இக்கோயிலில் தினமும் ஐந்து முறை ஆரத்தி எடுத்து சிறப்பாக பூஜை செய்யப்படுகிறது.

எதற்கெல்லாம் பிரார்த்தனைகள் செய்யப்படுகிறது?

பில்லி, சூன்யம், ஏவல் போன்ற செய்வினைகள் விலகவும், மனதில் வேதனைகள் குறையவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்கின்றனர்.

இத்தலத்தில் என்னென்ன நேர்த்திக்கடன்கள் செலுத்தப்படுகிறது?

இத்தலத்தில் வேண்டுதல்கள் நிறைவேறியதும் பக்தர்கள் பாலும், நீரும் சமர்ப்பித்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

புதன், 17 ஆகஸ்ட், 2022

TV ஸ்க்ரீனை துடைக்கும் போது செய்யவே கூடாத 8 தவறுகள்! மீறினால் நிரந்தர டேமேஜ்!

புதன், ஆகஸ்ட் 17, 2022

நம்மில் பலரும், வீட்டில் உள்ள மற்ற பொருட்களை போலவே ஸ்மார்ட் டிவியையும் சுத்தம் செய்யும் பழக்கத்தினை கொண்டுள்ளோம்.

ஆனால் உங்களுக்கு தெரியுமா? ஸ்மார்ட் டிவியை சுத்தம் செய்யும் போது, நீங்கள் செய்யும் சிறிய தவறு கூட உங்கள் டிவி ஸ்க்ரீனை நிரந்தரமாக சேதப்படுத்தும் என்று?

இன்னும் மோசமான விடயம் என்னவென்றால்?

ஸ்மார்ட் டிவி ஸ்க்ரீனை துடைக்கும் போது தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் செய்யும் தவறு, சில நேரங்களில் உங்கள் டிவியின் உத்தரவாதத்தை கூட ரத்தாகும் சூழ்நிலையை உருவாக்கலாம்நாம் அனைவருமே தூசி, அழுக்கு மற்றும் கசடுகள் இல்லாத டிவி ஸ்க்ரீனை விரும்புகிறோம். ஆனால் அதை சரியாக (சுத்தம்) செய்வது தான் இங்கே முக்கியம்.

அப்படியாக, உங்கள் டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்யும் போது, தெரியாமல் கூட நீங்கள் செய்ய கூடாத 8 விஷயங்கள் இதோ!

01. டவல்கள் (துண்டுகள்) மற்றும் டிஷூக்களை பயன்படுத்தலாமா?

கூடாது! ஏனெனில் பெரும்பாலான டிவி ஸ்க்ரீன்கள் (எல்சிடி, எல்இடி, ஓஎல்இடி ஸ்க்ரீன்கள்) ஆனது ப்ரெஷர் சென்சிடிவ் ஆக இருக்கும் (அதாவது அழுத்தத்திற்கு உணர்திறன் கொண்டதாக இருக்கும்) மற்றும் அவைகளில் மிகவும் எளிதாக கீறல்கள் ஏற்படவும் வாய்ப்புள்ளது.எனவே டிஷூ மற்றும் டவல்களில் உள்ள "இழைகள் கூட" உங்கள் டிவி ஸ்க்ரீனை சேதப்படுத்தலாம். எனவே முடிந்த வரை, அது LCD, OLED, பிளாஸ்மா அல்லது பழைய CRT டிஸ்ப்ளேவாக இருந்தாலும் கூட அதை சுத்தம் செய்ய மைக்ரோஃபைபர் துணியை (Microfiber Cloth) பயன்படுத்தவும்.உங்கள் டிவி ஸ்க்ரீனை சேதப்படுத்தாமல், அதில் உள்ள கைரேகைகள் மற்றும் கறைகளை அகற்ற இந்த வகை துணி மிகவும் பொருத்தமானது.

02. டிவி ஸ்க்ரீனை கொஞ்சம் அழுத்தி தேய்க்கலாமா?

நீங்கள் நம்பினாலும், நம்பாவிட்டாலும் - டிவி ஸ்க்ரீன்கள் உடையக்கூடியவை ஆகும். மிகவும் கடினமாக அழுத்தப்பட்டால் அல்லது தேய்க்கப்பட்டால் அது சேதமடையலாம். எனவே டிவி ஸ்க்ரீனை முடிந்தவரை மெதுவாக துடைப்பதை உறுதி செய்யவும்.

03. டிவி ஸ்க்ரீனில் நேரடியாக ஸ்ப்ரே சொல்யூஷனை அடிக்கலாமா?

கூடவே கூடாது! எந்தவொரு க்ளீனிங் சொல்யூஷனையும் நேரடியாக உங்கள் டிவி ஸ்க்ரீனில் தெளிக்காதீர்கள்.எப்பொழுதும் பஞ்சு இல்லாத துணி அல்லது மைக்ரோஃபைபர் மீது க்ளீனிங் சொல்யூஷனை வைத்து, பின்னர் அதை ஸ்க்ரீனில் வைத்து மெதுவாக துடைக்கவும். க்ளீனிங் சொல்யூஷனை நேரடியாக தெளிப்பதன் மூலம் ஸ்க்ரீனில் நிரந்தர அடையாளங்கள் அல்லது கறைகள் ஏற்படலாம்.

04. தண்ணீர் தொட்டு டிவி ஸ்க்ரீனை துடைக்கலாமா?

தண்ணீர் மட்டும் அல்ல, முடிந்தவரை எல்லா திரவங்களையுமே டிவி ஸ்க்ரீனில் இருந்து விலக்கி வைக்கவும். திரவங்களை பயன்படுத்தி உங்கள் டிவியை சுத்தம் செய்தால் அது டிவியின் உள் பகுதிகளை சேதப்படுத்தலாம்.குறிப்பாக அமோனியா, ஆல்கஹால் அல்லது அசிட்டோன் கொண்ட தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்தவே கூடாது, ஏனெனில் அவைகள் டிவி ஸ்க்ரீனில் உள்ள ஆன்டி-க்ளேர் கோட்டிங்கை (Anti-glare coating) சேதப்படுத்தலாம்.

05. டிவி பார்த்துக்கொண்டே டிவியை சுத்தம் செய்யலாமா?

வேண்டாம்! சுத்தம் செய்யும் போது உங்கள் டிவி ஆஃப் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள், ஏனெனில் இது மின் விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை குறைக்கிறது.அதுமட்டும் இல்லாமல், ஸ்க்ரீன் "கருப்பாக" இருக்கும் போது தான், அதில் உள்ள அழுக்குகளை மற்றும் கோடுகளை கண்டறிய முடியும்; அதை அகற்ற முடியும். மேலும் இருண்ட ஸ்க்ரீனில் தான் தூசிகளும் நன்றாக தெரியும்.

06. வளைத்து வளைத்து எல்லா திசைகளிலும் துடைக்கலாமா?

முடிந்தவரை உங்கள் டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்யும் போது, ஒரு திசையில் இருந்து (செங்குத்தாக அல்லது கிடைமட்டமாக) துடைக்க வேண்டும், பின்னர் அதை எதிர் திசையில் இருந்து செய்ய வேண்டும்.இது வழிமுறை, ஸ்க்ரீனில் எந்த இடமும் பாக்கி இல்லை என்பதை உறுதிப்படுத்த உதவுகிறது மற்றும் சுத்தம் செய்யும் போது ஸ்க்ரீனில் ஏற்படும் கோடுகளை தவிர்க்கவும் உதவுகிறது.

07. ஒரே துணியை வைத்து மீண்டும் மீண்டும் துடைப்பது நல்லதா?

சிலமுறை பயன்பாட்டிற்கு பிறகு, டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்ய நீங்கள் பயன்படுத்தும் துணியை மாற்றுவது நல்லது. ஏனெனில் அதில் தூசிகள் தங்கி விடலாம், அது ஸ்க்ரீன்களில் கோடுகளை, கீறல்களை ஏற்படுத்தலாம்.மேலும் நன்றாக சுத்தம் செய்யும் "திறனையும்" இழக்கலாம். எனவே அவ்வப்போது டிவி ஸ்க்ரீனை துடைக்கும் துணியை மாற்றவும்.

08. ஈரம் காயும் முன்பே டிவியை ஆன் செய்து விடலாமா?

முடிந்தவரை, இப்படி செய்வதை தவிர்க்கவும். உங்கள் டிவி ஸ்க்ரீனை சுத்தம் செய்து முடித்ததும், டிவியை மீண்டும் கனெக்ட் செய்யும் முன், அதன் ஸ்க்ரீன் முழுமையாக உலர வைக்கப்பட வேண்டும்.ஈரமான புள்ளிகள் ஸ்க்ரீனில் அப்பட்டமாக தெரியும், பின்னர் அதுவே கூட ஓரு கறையாக மாறிவிடலாம். பிறகு டிவி ஸ்க்ரீனை துடைத்ததிற்கு புண்ணியமே இல்லாமல் போய் விடும்.

மரத்துடன் திருமணம், அழுகை சடங்கு... உலகம் முழுவதும் திருமணத்தில் அரங்கேறும் 11 வினோத சடங்குகள்

புதன், ஆகஸ்ட் 17, 2022

உலகெங்கிலும் மக்கள் தங்களது மதம், கலாச்சாரம், இனம் ஆகியவற்றை பொறுத்து விதவிதமான திருமண சடங்குகளை பின்பற்றி வருகின்றனர். 

அதில் சில சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்கள் நம்மை மிரளவைப்பதாகவும், ஆச்சர்யப்படுத்துபவையாகவும், சில நம்மை பயப்படுத்தும் வகையிலும் இருக்கலாம். 

உலகம் முழுவதும் தினந்தோறும் நடத்தப்படும் திருமணங்களில் அப்படி என்ன மாதிரியான விநோதமான சடங்குகள் மற்றும் மரபுகள் பின்பற்றப்படுகின்றன என்பதை விரிவாக பார்க்கலாம்...

ஜூட்டா சுபாய் சடங்கு: 

இந்தியத் திருமணங்களில் இது குறும்புத்தனமான சடங்கு ஆகும். திருமணத்தின் போது மணமகனின் காலணியை மணமகளின் சகோதரன் மற்றும் சகோதரிகள் இணைந்து மறைத்துவைத்துவிடுவார்கள்.

காலணியை அவர்களிடம் இருந்து திரும்ப பெற வேண்டும் என்றால் தனது மச்சினன் அல்லது மச்சினிக்கு மணமகன் பணம் கொடுக்க வேண்டும்.

மரத்துடன் திருமணம்: 

செவ்வாய் தோஷம் அல்லது நாக தோஷம் இருக்கும் இந்து மதத்தைச் சேர்ந்த பெண் தனது திருமணத்திற்கு முன்னதாக ஒரு வாழை மரத்தை திருமணம் செய்து கொள்ள வேண்டும். அதன் பின்னர் அந்த மரத்தை வெட்டி விடுவார்கள். 

இது எதற்கு என்றால் தோஷம் உள்ள பெண்ணை மணக்கும் கணவர் இறந்துவிடுவார் என்பதால், வாழை மரத்தை முதலில் மணமகனாக பாவித்தி திருமணம் செய்து வைக்கின்றனர். அந்த மணமகன் இறந்து போனதாக காட்ட, அதனை வெட்டி விடுவது சம்பிரதாயம் ஆகும்.

அழுகை சடங்கு: 

இது நீங்கள் நினைப்பது போல் ஆனந்த கண்ணீர் விடுவது அல்ல, சீனாவில் ஒரு சில பகுதிகளில் திருமணத்திற்கு முன்பு மணமகள் கண்ணீர் விட்டு அழுவது ஒரு சடங்காகவே பின்பற்றப்படுகிறது. இந்த சடங்கின் படி, திருமணத்திற்கு ஒரு மாதத்திற்கு முன்னதாக சீன முறைப்படி துஜியா என அழைக்கப்படும் மணமகள், தினமும் ஒவ்வொரு மணி நேரம் அழ வேண்டும்.

முகம் மற்றும் உடலில் கருப்பு நிறம் பூசுவது: 

ஸ்காட்லாந்தில் ஒரு பாரம்பரியம் உள்ளது, திருமணத்திற்கு முன்னதாக மணமகனும், மகளும் முகம் மற்றும் உடல் பகுதிகளில் கருப்பு நிறம் பூசப்பட்டு, தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இந்த சடங்கு மணமக்களை தீய ஆவிகளிடம் இருந்து காக்கும் என நம்பப்படுகிறது.

எஞ்சிய உணவை சாப்பிடுவது: 

பிரஞ்சு பழக்க வழக்கங்களின்படி, புதுமணத் தம்பதிகளுக்கு திருமணத்தின் போது மீதமான உணவு மற்றும் பானங்களை ஒரு பானையில் போட்டு கலந்து கொடுக்கும் வழக்கம் உள்ளது. இதன் மூலம் முதலிரவை சிறப்பாக கொண்டாடுவதற்கான சக்தி கிடைக்கும் என நம்பப்படுகிறது. தற்போது இந்த வழக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டு மணமக்களுக்கு சாக்லெட் மற்றும் ஷாம்பெயின் வழங்கப்படுகிறது.

3 நாளைக்கு குளிக்க கூடாது: 

மலேசியா, இந்தோனேசியா, போர்னியோவில் பகுதிகளில் வசிக்கும் டிடாங் இன மக்கள், தம்பதிகளை தொடர்ந்து 3 நாட்களுக்கு பாத்ரூமை பயன்படுத்த தடை விதிக்கின்றனர். இதனை தம்பதிகள் கட்டாயம் நிறைவேற்ற வேண்டும் என்பதால், காவல் ஏற்பாடுகள் வேறு தீவிரமாய் இருக்குமாம். இது புதுமண தம்பதிக்கு அதிர்ஷ்டம் மற்றும் குழந்தைப்பேறு கொடுக்க உதவும் என நம்பப்படுகிறது.

மணமகளை முத்தமிடுதல்: 

ஸ்வீடனில் ஒரு விசித்திரமான திருமண பாரம்பரியம் உள்ளது, திருமணத்தில் பங்கேற்கும் அனைத்து இளைஞர்களும், திருமணமாகாத ஆண்களும் மணமகளை முத்தமிட அனுமதி அளிக்கப்படுகிறது.

திருமண நாளில் சிரிக்க தடை:

திருமணம் என்பது வாழ்நாளிலேயே மிகவும் மகிழ்ச்சியான நாளாகும். அன்றைய தினம் மணமகனும், மணப்பெண்ணும் சிரித்த முகத்துடன் இருப்பதை தான் பார்த்திருப்போம், ஆனால் காங்கோவில் உள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தில் திருமண நாளான்று புதுமண தம்பதி சிரிக்க கூடாது என்ற தடை உள்ளது.

பீங்கான் தட்டுக்களை உடைத்து நெறுக்குவது: 

கிரீஸ் நாட்டு திருமணங்களில் நடக்கும் மிகவும் விளையாட்டான சடங்கு இது. கிரீஸ் மக்கள் கொண்டாட்டம் மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் தீய சக்திகளை ஈர்க்கும் என நம்புகின்றன. எனவே திருமண நாளான்று புதுமண தம்பதி பீங்கான் தட்டுக்களை ஆக்ரோஷமாக தூக்கிப்போட்டு உடைக்க வைப்பது வழக்கம். இதனால் தீய சக்திகள் திருமணத்தை கொண்டாட்டமாக நினைக்காது என அவர்கள் நம்புகிறார்கள்.

மணமகனின் கால்களில் அடிப்பது:

 ஃபலாகா, அல்லது பழைய கரும்பு அல்லது உலர்ந்த மீனால் மணமகனின் கால்களை அடிக்கும் சடங்கு ஆகும். இது பொதுவாக மணப்பெண் மாப்பிள்ளை வீட்டிற்கு கிளம்பும் முன்பு செய்யப்படுகிறது.

மணமகள் மீது எச்சில் உழிழ்வது: 

கென்யாவின் மசாய் இனத்தில் திருமணத்தின் போது மணப்பெண்ணின் தந்தையை அவளது தலை மற்றும் மார்பு பகுதியில் எச்சில் துப்பும் சடங்கு பின்பற்றப்படுகிறது. இது பெண்ணின் சகிப்புத் தன்மையை சோதிக்க கூடியது. அதாவது கணவன் வீட்டிற்கு செல்லும் பெண் எக்காரணம் கொண்டு தந்தை வீட்டிற்கு திரும்ப வரக்கூடாது என்பதற்காக செய்யப்படுகிறது.

அம்மா குழந்தைகளிடம் மோசமாக நடந்து கொண்டால் என்ன நடக்கும் தெரியுமா.?

புதன், ஆகஸ்ட் 17, 2022
கருவில் குழந்தையை சுமந்து பெறுவதை விட, தாய்க்கு மிகவும் முக்கியமான கடமை அதனை நல்ல ஆரோக்கியம் மற்றும் பொறுப்புடன் வளர்ப்பது. குறிப்பாக குழந்தைகளிடம் தாய் நடந்து கொள்ளும் முறையே அவர்களுடைய எதிர்கால வாழ்க்கையில், தன்னம்பிக்கை, சுய மதிப்பீடு போன்றவற்றை நிர்ணயிக்கிறது.

குழந்தையின் நம்பிக்கையை ஊட்டி வளர்க்க வேண்டிய தாயே, தேவையில்லாத ஒப்பீடுகளை செய்தும், திட்டியும், தோற்றத்தை குறைவாக மதிப்பிட்டும் பேசுவது குழந்தையின் மனதில் கடுமையான காயங்களை உருவாக்கிறது. அப்படி சின்ன வயதில் இருந்தே தாயால் குறைந்த அளவிலான அன்பு காட்டப்பட்டும், கடுமையாக விமர்சிக்கப்பட்டும் வளர்க்கப்படும் குழந்தைகள் கீழ் காணும் பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

தன்னைத் தானே குறைவாக மதிப்பிடுதல்

பாடி ஷேமிங் (அம்மா தன் உடலைப் பற்றி பேசிய விதம்)

பிறருடன் தன்னை ஒப்பிட்டு பார்ப்பது

மற்ற பெண்களை நம்பவோ அல்லது நெருக்கமாக உணரவோ இயலாமை

காதல் உறவில் நம்பிக்கையின்மை

அமைதியானவராக இருந்தால் மட்டுமே தகுதியானவர் என எண்ணுவது

தன்னம்பிக்கை இழப்பு, பெரிய இலக்குகளை நிர்ணயிக்க தயங்குவது, நம்பிக்கையின்மை என பல பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர்.

குறிப்பாக தாயின் செய்கைகளால் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகளே அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு காரணம் ஆணாதிக்கம் மிக்க சமூகத்தில் பெண்கள் மீதான அடக்குமுறைகள், அவர்கள் மூலமாகவே அடுத்தடுத்த தலைமுறைக்கு கடத்தப்படுவதால் அதிகம் பரவுகிறது.

பிரச்சனையை கண்டறியும் அறிகுறிகள்:

குழந்தைப் பருவத்தில் தாய் ஏற்படுத்திய அவநம்பிக்கை, குழந்தையின் நிகழ்காலத்தை மட்டுமல்ல, எதிர்கால உறவுகளையும் பாதிக்கிறது. மறுபுறம், தாயால் காயப்பட்ட ஒரு பெண், தான் பெற்ற சொந்த அனுபவங்கள் மூலமாக தனது சொந்த குழந்தையுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள உறவு நிலையையே பின்பற்றுவார்கள்.

- குறைந்த சுயமரியாதை

- கோபம், பாசம், காதல் என எந்த உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல் இருப்பது

- அமைதியாக இல்லாமல் எப்போதும் சத்தம் போட்டு கொண்டிருப்பது

- நமக்கு அன்பான பாதுகாப்பான எந்த உறவும் இல்லை என்ற உணர்வை உருவாக்குவது.

நீங்கள் செய்யும் தவறுக்கு எல்லாம் என் அம்மா என்னை சரியாக வளர்க்கவில்லை, மோசமாக நடந்து கொண்டார் என பழியை அவர்கள் மீது போட்டு தப்பித்து கொள்வது எளிதானது. ஆனால் உங்கள் தாய்க்கு குழந்தை பருவத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை சரி செய்வதோடு, அப்படியொரு மோசமான அனுபவத்தை நீங்கள் உங்கள் குழந்தைக்கு கொடுக்காமல் தடுப்பது என்பது சவாலானது.

தாய் அடைந்த காயங்களை குணப்படுத்துவது எப்படி.?

- அம்மாவுடன் ஆலோசிப்பது, அனுமதி கேட்பது போன்ற விஷயங்களை அடிக்கடி செய்யுங்கள்.

- எல்லோருக்கும் கனவில் நினைப்பது போன்ற ‘சூப்பர் மாம்’ கிடைப்பதில்லை, எனவே உங்கள் அம்மா எப்படி இருந்தாலும் அப்படியே அவரை ஏற்றுக்கொள்ளுங்கள்.

- அம்மாவை விட்டு அதிக தூரம் விலகி நிற்காமல் ஆரோக்கியமான இடைவெளியை பராமரியுங்கள்.

நிறைய பெண்கள் தங்களது தேவைக்காக பிறரை நாடியிருப்பதால் சுய மாரியாதை இல்லாமல் போகிறது. எனவே சுய தேவைகளே தாங்களே எவ்வாறு பூர்த்தி செய்து கொள்வது என அம்மாவுக்கு கற்றுக்கொடுங்கள்.

- எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தாய்க்கு நீங்கள் பிள்ளை என்பதை மறக்காதீர்கள். என் அம்மா என்னை பார்க்க வேண்டும், ரசிக்க வேண்டும், நேசிக்க வேண்டும் என நீங்கள் எதையெல்லாம் நினைக்கிறீர்களோ.? அதை ஒரு கடிதமாக எழுதி தாயிடம் கொடுக்கலாம்.

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்