Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

வியாழன், 28 மார்ச், 2019

ஹிந்தி உயிரெழுத்துக்கள் - इ மற்றும் ई


இது ஹிந்தியில் மூன்றாவது உயிர் எழுத்து ஆகும். இதை தமிழில் உள்ள 'இ' போன்றே உச்சரிக்க வேண்டும்.
இதை எழுதுவதும் மிக எளிது. இதை எவ்வாறு எழுத வேண்டும் என்பது கீழே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. 


மேலிருந்து சிறிதாக ஒரு கோடு போட்டு அதிலிருந்த்து 'ஆங்கிலத்தின் S' போல போட்டு, இறுதியில் சுழித்து விட வேண்டும்.
மேலிருந்து போடும் கோடு சிறு கோடு மையத்தில் போடாமல் வலப்புறமிருந்து போட்டால்
அழகாக இருக்கும்.
இப்போது
-ஐ உபயோகித்து சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
आइना -ஆஇனா - முகம் பார்க்கும் கண்ணாடி
மேலே உள்ள ஹிந்தி வார்த்தையில்
என்னும் எழுத்தை உங்களால் அடையாளம் காண முடிகிறதா. நல்லது... இந்த வார்த்தையில் என்னும் உயிரெழுத்து வார்த்தையின் நடுவில் வந்திருப்பதைக் கவனித்தீர்களா? நான் முன்பே சொன்னது போல தமிழ் உயிரெழுத்துக்களைப் போல் அல்லாமல் ஹிந்தி உயிரழுத்துக்கள் வார்த்தைகளின் நடுவிலும் இறுதியிலும் வரும். இங்கு என்னும் உயிரெழுத்து வர்த்தையின் நடுவில் இடம்பெற்றுள்ளது.

इमली - இம்லீ - புளி
इमारत - இமாரத் - கட்டிடம்
இந்த வார்த்தைகளின் ஆரம்பத்தில்
இருப்பது தெரிகிறதல்லவா..

என்னும் உயிரெழுத்து மற்ற மெய் எழுத்துக்களோடு சேரும்போது ि என்னும் மாத்ரா, அதாவது குறியீடு சேர்க்க வேண்டும். இந்தக் குறியீடு சேர்க்கும்போது முக்கியம், இதனை மெய் எழுத்தின் முற்பகுதியில் அதாவது இடதுபுறம்தான் சேர்க்க வேண்டும்.
+=  +ि =कि
+=  + ि=मि
+=  + ि=रि
+= + ि=सि
இந்த
மாத்ரா ि வை எவ்வாறு எழுதுவது என்பது கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது. 

உயிர்மெய் எழுத்தில் '
மாத்ரா- ि' வரும் சில வார்த்தைகளைப் பார்ப்போம்
किताब - கிதாப் - புத்தகம்.
மேற்கண்ட வார்த்தையின் ஆரம்பத்தில் '
மாத்ரா- ि' - வை அடையாளம் காண முடிகிறதல்லவா. முன்பு கூறியது போலவே, என்னும் மெய் எழுத்தின் இடது புறம் ' மாத்ரா- ि' இடப்பட்டுள்ளதல்லவா. ஒரு மெய் எழுத்தின் இடப்புறம் ि என்ற குறியீடு இருந்தால் அதனோடு என்னும் உயிரெழுத்து சேர்ந்துள்ளது என்று அடையாளம் கண்டு கொள்ளுங்கள்.
नारियल - நாரியல் - தேங்காய்
मंदिर - மந்திர் - கோயில்
मिनट - மினட் - நிமிடம்


ஹிந்தியின் அடுத்த உயிரெழுத்து
ஆகும். இதன் உச்சரிப்பு தமிழில் உள்ள 'ஈ' போன்றதே ஆகும்.
இதனை எழுதுவதும் மிக எளிதானதே.
இன் மேலே வலப்புறம் ஒரு கொக்கி போல போட்டால் அது ஆகிவிடும். நினைவிருக்கட்டும். -இல் கொக்கி போல போட்ட பிறகுதான் மேல்கோடு போட வேண்டும். பொதுவாக ஹிந்தியில் எல்லா எழுத்திலும், எழுத்தின் மற்ற பாகங்களை எழுதிய பிறகு இறுதியில்தான் மேற்கோடு போடப்படும். வார்த்தைகள், வாக்கியங்கள் எழுதும் போது, ஒவ்வொரு வார்த்தையும் எழுதி முடிந்த பிறகு அந்த வார்த்தைக்கு மொத்தமாக மேற்கோடு போடப்பட வேண்டும். ஒவ்வொரு எழுத்துக்கும் தனித்தனியாக மேற்கோடு போடக்கூடாது.
இந்தக் கோடு ஒவ்வொரு எழுத்தையும் மற்ற எழுத்துக்களுடன் இணைப்பதற்கே போடப்படுகிறது.
- ஐ எவ்வாறு எழுத வேண்டும் என்பது கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.


நன்றாக எழுதும் வரை சில முறை எழுதிப் பாருங்கள்.
இப்போது
என்னும் எழுத்தை உபயோகித்து சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
ईख- ஈக் - கரும்பு
ईंट - ஈண்ட் - செங்கல்
ईद - ஈத் - ஈத் பண்டிகை(பக்ரீத்)
मिटाई - மிடாஈ/ மிடாயீ - மிட்டாய்
ஆனது மற்ற மெய் எழுத்துக்களுடன் சேரும் போது அதனோடு '' என்ற குறியீடு சேர்க்க வேண்டும். இந்தக் குறியீடானது மெய் எழுத்தின் வலது புறம் சேர்க்க வேண்டும்.
உயிர்மெய் எழுத்தில் '
மாத்ரா - ' எவ்வாறு எழுத வேண்டும் என்பது கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.

உயிர்மெய் எழுத்தில் '
மாத்ரா - ' உள்ளவாறு சில வார்த்தைகளைப் பார்ப்போம்.
पानी - பானீ - தண்ணீர்
चाबी - சாபீ - சாவி
कंघी - கந்தீ - சீப்பு
दादी - தாதீ - பாட்டி
மேற்கண்ட வார்த்தைகளின் இறுதியில் உள்ள - ஐ அதாவது மாத்ரா - வை உங்களால் அடையாளம் காண முடிகிறதல்லவா!
அடுத்த எழுத்துக்களை இனி வரும் பதிவுகளில் பார்ப்போம்


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!