Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 4 மே, 2019

இறைவன் இறைவி கனவில் கண்டால் அதன் பலன்கள்


இறைவன் இறைவி கனவில் கண்டால் அதன் பலன்கள் க்கான பட முடிவு


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
இப்பொழுதே இணைந்துகொள்



திருமால்:- திருமாலை அல்லது ஸ்ரீ மந் நாராயணரை எந்த வடிவில் கண்டாலும் செல்வச் செழிப்பு ஏற்படும். மகாலட்சுமியின் அருள் கிடைக்கும். எதிரிகள் கூட வீழ்வார்கள். கருடன் மீது திருமால் வருவது போலக் கனவு கண்டால் வழக்குகள் சாதகம் ஆகும்.

ஏசுநாதர் அல்லது மகான்கள்:- ஏசுநாதர் அல்லது மகான்களைக் கனவில் கண்டால் மனதில் அமைதி உண்டாகும். புகழ் உண்டாகும். ஆனால், அதே சமயத்தில் ஏசுநாதரை சிலுவையில் அறைவது போலக் கனவு கண்டால் பெரும் துன்பம் வந்து சேரும். எனினும், இறுதியில் அது வெற்றி ஆகும்.

கடவுளை சிலைகளாகக் கண்டால்:- ஏதாவது ஒரு குறிப்பிட்ட கடவுள், விக்கிரக வடிவில் அடிக்கடி கனவில் வந்தால் உடனே அந்தக் கடவுள் இருக்கும் ஸ்தலம் நோக்கிப் புறப்பட்டு தரிசனம் செய்து வருவது நல்லது. ஒரு கடவுளின் சிலை ஆனது மண்ணில் புதைக்கப்படுவது போலக் கனவு கண்டால், உங்களது தெய்வ பக்தி குறைந்து விட்டது என்று அர்த்தம். மற்றபடி பெரிய கெடுதல் வராது.
கோபுரம் :-ஏதேனும் ஸ்தலத்தின் கோபுரத்தை நீங்கள் கனவில் கண்டால் காரியங்கள் சித்தியாகும், அதைவிட உங்கள் பாவங்கள் தொலைந்தது என்று தான் அர்த்தம்.

பாழ் அடைந்த கோயில் மண்டபம்:-பாழ் அடைந்த கோயில் மண்டபத்தை கனவில் கண்டால் பயணங்களால் தீமை வந்து சேரும் என்று அர்த்தம் கொள்ள வேண்டும்.

கோயில் மணி:-கோயில் மணியை கனவில் கண்டால் நீங்கள் நினைக்கும் காரியம் சித்தியாகும் என்று பொருள்.அது போல கோயில் மணி அடிப்பது அல்லது அடிக்கப்படுவது போலக் கனவைக் கண்டால் பொருள் வரவு உண்டு.கோயில் மணி அறுந்து விழுவது போலக் கனவு கண்டால் பொருள் நஷ்டம், இடையூறுகள் கூட ஏற்படும்.கோயில் மணியை நீங்கள் அடிக்கச் செல்லும் சமயத்தில் அதன் மேல் பாம்பு இருக்கக் கண்டால் அது சர்ப்ப தோஷம் ஆகும். உங்களுக்கு வர வேண்டிய நன்மைகளை எல்லாம் அந்தத் தோஷம் தடுத்துக் கொண்டு உள்ளதாகப் பொருள். காலஹஸ்த்தி சென்று பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்..

ஐயனார்:-ஊர் காவல் தெய்வமான ஐயனாரைக் கனவில் கண்டால் சகல பாக்கியங்களும் ஏற்படும்.

நவக்கிரகங்கள்:-நவக்கிரகங்கள் ஒன்பதையும் சிலைகளாகக் கனவில் கண்டால் உடனே அருகில் உள்ள கோயிலுக்குச் சென்று அவற்றை ஒன்பது முறை சுற்றி வர வேண்டும். இல்லையேல் கண்ட சில தினங்களில் தீமை வந்து சேரும்.
கோயில் மண்டபம்:-கோயில் மண்டபத்தை கனவில் கண்டால் தொலை தூரப் பயணங்களால் நன்மைகள் ஏற்படும்.

விநாயகர் / யானை :-விநாயகரைக் கனவில் கண்டால் அதை விட வேறு என்ன பெருமை வேண்டும்? உங்கள் எல்லாப் பிரச்சனையும் தீர்ந்து விட்டது என்று தான் பொருள். யானையைக் கனவில் கண்டாலும் நல்லது தான். யானை துரத்துவது போலக் கனவைக் கண்டால் நீங்கள் விநாயகருக்கு நேர்த்திக் கடன் எதையோ பாக்கி வைத்து உள்ளீர்கள் என்று அர்த்தம். பிள்ளையாரை அருகம்புல் சாற்றி பரிகாரம் செய்து கொள்ளுங்கள். இல்லையேல் விதியால் அங்கும், இங்கும் அலைக்கழிக்கப் படலாம். யானை துதிக்கையால் ஆசிர்வாதம் செய்வதைப் போலக் கனவு கண்டால், நீங்கள் செயல்படுத்தும் அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.

முருகன்:-முருகப் பெருமானை கனவில் கண்டால் உங்களது அனைத்து தோஷங்களும் நீங்கும். குளித்து எழுந்தவுடன் முருகனை தரிசிப்பது போலக் கனவு கண்டாலும் இதே பலன் தான். எல்லாம் நன்மையாகவே வாழ்வில் நடக்கும்.

குங்குமம்:-குங்குமத்தை பூசுவது போலக் கனவு கண்டால் அம்பாளின் அனுக்கிரகம் உண்டு. குங்குமம் சிந்திச் சிதறுவது போலக் கனவு கண்டால் நல்லதல்ல. அம்பாளுக்கு குங்கும அர்ச்சனை செய்தால் தீமை நடக்காது. 

திருநீறு:-திருநீறு பூசுவது போலக் கனவு கண்டால் ஞானம் பிறக்கும். திருநீறு கை தவறி விழுவது போலக் கனவு கண்டால் மருத்துவச் செலவுகள் ஏற்படும்.
 
எந்த கடவுள் சிலையைப் பார்த்தாலும்:-எந்தக் கடவுள் சிலையைப் பார்த்தாலும் அதனை வணங்கி பூஜை செய்து கொண்டு இருப்பதைப் போலக் கண்டாலும் நன்மை தான் ஏற்படும்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.


2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்
  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.


4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.




5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக