இந்தியாவில் சமீபகாலமாக செல்போன் ஆப்கள் மூலம் டாக்ஸி புக் செய்வது அதிக அளவில் நடந்த வருகிறது. மக்கள் தங்களுக்கு வசதியாக இருப்பதாலும், தங்கள் பயணத்தை குறைந்த செலவில் மேற்கொள்ள முடிவதாலும் அதிக அளவில் மக்கள் இந்த சேவையை தேர்ந்தெடுக்கின்றனர்.
அதன் படி அம்மாநில அமைச்சர் ஜெயின் திட்டங்களை வகுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் "கேப்ஸ்களை இன்று மக்கள் பெரும் அளவில் பயன்படுத்தி வருகின்றனர். டில்லியில் முக்கிய போக்கவரத்து வாகனமாக செல்போன் ஆப்ஸ் மூலம் செயல்படும் ஆப்கள் மாறிவிட்டது. அதனால் அதற்கான விதிகளை அவசரக காலமாக எடுக்க வேண்டிய சூழ்நிலையில் அரசு உள்ளது" என கூறினார்.
இந்த விதிகளின் படி டில்லியில் நடத்தப்படும் கேப் சர்வீஸ்கள் கட்டாயம் அரசிடம் லைசன்ஸ் பெற்று இருக்க வேண்டும். மேலும் அவர்கள் 24x7 வாடிக்கையாளர் சேவை மையத்ததையும் வைத்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் கேப்ஸ் சர்வீஸில் ஈடுபடும் வாகனங்களில் கட்டாயம் ஜிபிஎஸ் வசதி பொருத்தப்பட்டிருக்க வேண்டும் எனவும், அதே போல அந்த அந்த ஜிபிஎஸ் தகவல்கள் போக்குவரத்து துறையுடன் பகிரப்பட வேண்டும் எனவும், டில்லியில் பதிவு செய்யப்பட்ட கார்களை கேப் சர்வீஸிற்கு பயன்படுத்தலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல ஒருவருக்கான கேப் உறுதி செய்யப்பட்டு கடைசி நிமிடத்தில் கேன்சல் செய்யப்பட்டால் அவருக்கு நஷ்ட ஈடாக கேப் நிறுவனம் ரூ 25 ஆயிரம் வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக