துவரம்
பருப்பில் பலவித சமையல்களை செய்திருப்போம். துவரைக்காய் சமையல் பல பேருக்கு
புதிதாக இருக்கும். காய்ந்து, தோலுரித்த துவரம் விதைகளிலிருந்து துவரம் பருப்பு
எடுக்கப்படுகிறது. அதே துவரையை காயாக இருக்கும்போது உரித்து அதன் பச்சையான விதைகளை
எடுத்தும் சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

மானாவாரி விவசாயம் நடக்கும் வட்டாரங்களில்
துவரை முற்றி வரும்போது செடியிலிருந்து பறித்து சில நாட்களுக்கு சமையலுக்கு
பயன்படுத்திக்கொள்வார்கள் விவசாயிகள். இப்போது நகரங்களிலும் டிசம்பர் மாதத்தின்
ஆரம்ப நாட்களில் துவரைக்காய் மார்க்கெட்டுகளில் கிடைக்கிறது. சரி துவரைக்காயில்
ஒரு ருசியான ரெசிபியைப் பார்ப்போமா?
தேவையானவை
துவரைக்காய் – கால் கிலோ
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
பூண்டு – 4 பற்கள்
தேங்காய் – 4 பெரிய துண்டுகள்
சோம்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு
தேவையானவை
துவரைக்காய் – கால் கிலோ
பெரிய வெங்காயம் – 1
தக்காளி – 2
பூண்டு – 4 பற்கள்
தேங்காய் – 4 பெரிய துண்டுகள்
சோம்பு – 1 டீஸ்பூன்
எண்ணெய் – தேவையான அளவு
மிளகாய் தூள் – 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் – அரை டீஸ்பூன்
கருவேப்பிலை – ஒரு கொத்து
உப்பு – தேவையான அளவு

எப்படி செய்வது?
துவரைக்காயிலிருந்து கொட்டைகளை உதிர்த்து வைத்துக்கொள்ளவும். வெங்காயம், தக்காளியைப் பொடியாக நறுக்கவும். தேங்காயுடன் பூண்டு சேர்த்து மைய அரைத்துக்கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் விட்டு, சோம்பு போட்டு தாளிக்கவும். அடுத்து வெங்காயத்தைப் போட்டு வதக்கி, தக்காளியைப் போட்டு கூழாகும்வரை வதக்கவும். இதில் உதிர்த்த துவரைக்கொட்டைகளைப் போட்டு வதக்கி, உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் போட்டு கொட்டைகள் வேகும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேகவிடுங்கள். கொட்டைகள் வெந்ததும் அரைத்து வைத்திருக்கும் தேங்காய் விழுதைச் சேர்த்து ஒரு கொதி வந்ததும் கருவேப்பிலைப் போட்டு குழம்பை அடுப்பிலிருந்து இறக்குங்கள்.இந்த குருமாவை இட்லி, தோசை, சாதத்துடன் கலந்து சாப்பிடலாம்.

குறிப்பு :
·
தேங்காய்
விழுதைச் சேர்த்து அதிக நேரம் கொதிக்கவிட்டால் குழம்பு பிரிந்து போய், குழம்பின்
ருசியே மாறிவிடும். அதனால் சரியாக ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
·
துவரைக்காயுடன்
கேரட், பீன்ஸ், உருளைக்கிழங்கு சேர்த்தும் குருமா செய்யலாம். பட்டாணி போட்ட குருமா
போன்றே இதன் சுவையும் இருக்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக