>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 4 அக்டோபர், 2019

    இளநரையை விரட்ட எளிமையான குறிப்புகள்..

     



    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    சின்ன குழந்தைகள் முதல் டீன் ஏஜ் வயதினர் வரை அனைவரும் சந்திக்கும் இளநரைப் பிரச்சனைக்கு செயற்கை முறையில் அணுகாமல் இயற்கை முறையில் நிரந்தரமாக தீர்வு உண்டு.



    Hair treatment: இளநரையை விரட்ட எளிமையான குறிப்புகள்..
    கூந்தல் பிரச்சனை இன்று அனைத்து வயதினருக்கும் தலையாய பிரச்சனையாக இருக்கிறது. எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்பதற்கேற்ப கூந்தல் வைத்தியம் ஒன்றையும் விடாமல் செய்துபார்க்கிறார்கள் அனைத்து வயதினரும். குறிப்பாக டீன் ஏஜ் வயதினரிடம் இளநரை தாக்கம் அதிகமாகவே இருக்கிறது.

    கூந்தலில் பிரச்சனை
    கூந்தல் வளர்வதில் பிரச்சனை,கூந்தல் அடர்த்தியில் பிரச்சனை,கூந்தல் உதிர்வதில் பிரச்சனை, கூந்தல் பொலி வில் பிரச்சனை, கூந்தல் அழகில் பிரச்சனை, கூந்தல் வறண்டு போவதில் பிரச்சனை, கூந்தல் அழுக்கடைந்து பொடுகுகள் அதிகமாவது பிரச்சனை, இளநரை இப்படி பிரச்சனைக்கு மேல் பிரச்சனை என்று கூந்தல் பரா மரிப்பில் இத்தனையும் கடந்துதான் ஆரோக்கியமான கூந்தலைப் பெற முடியும்.

    இளநரை
    அந்தக்காலத்தில் அறுபது வயது ஆகும் பாட்டியின் காதோரம் இலேசாக வெள்ளி மின்னல் போல் எட்டி பார்க் கும் இளநரை அவரது பெண்மைக்கு அழகாகவே இருக்கும். இப்போது ஐந்துவயது கூட நிரம்பாத குழந்தைக்கு சாதாரணமாக இளநரை தோன்றுகிறது.

    வயது பாலினம் பேதமில்லாமல் ஆண்குழந்தைகளும் இளநரை பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். இந்த இளநரை யைக் கண்டு பயப்பட வேண்டியதில்லை. தொடக்கத்திலேயே இதைக் கவனித்து உரிய பராமரிப்பு மேற் கொண்டால் இளநரையின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.


    இளநரைக்கு காரணம்
    இளநரைக்கான தீர்வு இதுமட்டும்தான் என்று இதுவரையில் கண்டறியப்படவில்லை. ஆனால் அப்படி அவை வரும் பட்சத்தில் அதைத் தடுக்க பல வழிமுறைகளை நம் முன்னோர்கள் கையாண்டிருக்கிறார்கள்.

    உடம்பில் வாதம், பித்தம், கபம் மூன்றும் சரியான அளவில் இருக்கும் பட்சத்தில் உடலில் எவ்விதமான நோய் களும் அண்டாது என்பது சித்தர்களின் வாக்கு. இம்மூன்றில் ஒன்றான பித்தம் அதிகரிக்கும் போது தலைமுடி நரைக்க தோன்றும். இதனோடு மரபு வழியிலும், உணவு பழக்கமும், உரிய பராமரிப்பின்மையும் கூட இள நரைக்கு காரணங் கள் என்று சொல்லலாம்.

    இளநரையை ஆரம்பத்திலேயே கண்டறிந்து எளிய முறையில் உரிய பராமரிப்பின் மூலம் வராமல் தடுக் கலாம். என்னவெல்லாம் செய்தால் இளநரையைத் தடுக்கலாம் என்று பார்க்கலாமா?

    இளநரை எட்டிப் பார்த்தவர்களும், இளநரை அதிகரித்து வருபவர்களும் கொடுத்திருக்கும் குறிப்புகளை உரிய முறையில் கடைப் பிடித்தால் இளநரை அதிகமாகாமல் பார்த்துக்கொள்வதோடு கூந்தலைக் கருமையாக வும் வைத்துக்கொள்ளலாம்.

    கூந்தல் பராமரிப்பு
    கூந்தலை முதலில் சிக்கில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். அவசர அவசரமாக தலை சீவாமல் கூந்தலை சிக்கில்லாமல் வைத்திருப்பது முக்கியம்.

    வாரத்துக்கு இரண்டு நாள்கள் தலைக்கு குளிப்பதைக் கட்டாயமாக்கி கொண்டால் கூந்தலில் அழுக்கு படியாது. கூந்தலின் வறட்சியைத் தடுத்துவிடும் என்பதால் தலைமுடி வளர்ச்சியும் உதிர்தலும் கட்டுப்படும்.வறண்ட கூந் தல் பொலிவிழக்கும் போது இளநரையின் வேகம் வீரியமாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    எண்ணெய்க் குளியல்
    வாரம் ஒருமுறை இல்லையென்றாலும் மாதம் இருமுறையாவது தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பதை வழக் கமாக்கி கொள்ள வேண்டும். நல்லெண்ணெய் குளியல் இல்லையென்றாலும் சுத்தமான தேங்காயெண் ணெயை இலேசாக சூடு செய்து தலையில் சூடு பறக்க தேய்த்தால் உஷ்ணம் குறையும். கூந்தலுக்கான ஊட் டம் கிடைக்கப்பெறுவதால் இளநரையின் தாக்கம் இருக்காது.

    இரசாயனம் வேண்டாம்
    இளநரை எட்டிப்பார்க்க தொடங்கியதுமே முடிக்கு இராசயனம் கலந்த ஷாம்பு, சோப்பு (சிலர் பயன்படுத் துவார்கள்) ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். சீயக்காயை நேரடியாக கடைகளில் வாங்கி சரிபாதியாக வெந்தயம் கலந்து செம்பருத்தி பூ செம்பருத்தி இலை, கறிவேப்பிலை, மருதாணி இலை ஆகியவற்றைக் காய வைத்து சேர்த்து அரைத்து சாதம் வடித்த கஞ்சியில் கரைத்து தலைக்குத் தேய்த்து குளித்துவந்தால் ஒரே மாதத் தில் இளநரையின் நிறம் மாறத்தொடங்கும்.

    தவிர்க்க இயலாதவர்கள் கெமிக்கல் அதிகமில்லாத தரமான ஷாம்புவை அவசரத்துக்கு பயன்படுத்தலாம். ஒரு முறை சீயக்காய்ப் பொடியும் மறுமுறை ஷாம்புவும் என்று மாறி மாறி தேய்த்து குளிப்பதும் இளநரையை ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். கண்டிப்பாக சீயக்காய் அல்லது தரமான ஷாம்பு என்பதில் உறுதியாக இருங்கள்.

    இவையெல்லாம் எல்லோருமே கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டியவை. இளநரையின் தாக்கம் அதிகம் இருப்பவர்கள் மேற் சொன்னவற்றுடன் சேர்த்து இதையும் கடைப்பிடிக்க வேண்டும்.

    பீட்ரூட் சாறு
    ஃப்ரெஷ்ஷான பீட்ரூட்டை தோல் சீவி மிக்ஸியில் நீர் விடாமல் அரைத்து அதன் சாறை பிழிந்து வைக்கவும். எண்ணெய் படியாத கூந்தலில் அடிப்பகுதியிலிருந்து வேர்ப்பகுதி நுனிப்பகுதிவரை சாறை நன்றாக தடவி அரைமணி நேரம் கழித்து குளிக்கவும்.

    வாரம் மூன்று முறை செய்துவந்தால் ஒரே மாதத்தில் இளநரை சிவந்து வருவதை பார்க்கலாம். நாளடைவில் இவை கருமையாக மாறத்தொடங்கும். காலையில் அலுவலகத்துக்கு செல்லும் போது கூட பீட்ரூட் சாறை கூந் தலின் மீது பூசி செல்லலாம். இவை பிசுக்கை உண்டாக்காது.

    இயற்கை சாயம்
    மருதாணி இலை,மஞ்சள் கரிசலாங்கண்ணி- தலா ஒரு கைப்பிடி அளவு, பெரிய நெல்லிக்காய் 4 (சிறு துண்டு களாக), கறிவேப்பிலை- இரண்டு கைப்பிடி அளவு, செம்பருத்தி பூ -2, செம்பருத்தி இலை 10, பசும்பால், கற் றாழை நுங்கு - 1 தேக்கரண்டி, எலுமிச்சைச்சாறு- 1 டீஸ்பூன், வெந்தயப்பொடி - 1 டீஸ்பூன், சேர்த்து மைய அரைக்கவும்.

    முன் தினம் இரவு இவற்றை சற்று இட்லி மாவு பதத்துக்கு கெட்டியாக அரைத்து இரும்பு பாத்திரத்தில் வைத்து அவ்வப்போது கிளறி மூடி, வைத்திருந்து மறுநாள் காலை முடியின் வேர்க்கால்கள் முதல் நுனிவரை நன்றாக தடவி தேய்த்து ஒரு மணி நேரம் கழித்து குளிர்ந்த நீரால் அலசவேண்டும்.

    நேரம் கிடைக்கும் போது வாரம் ஒரு முறை இப்படி செய்துவந்தால் இளநரை நிச்சயம் மறையும் என்பதோடு கூந்தலில் கருமை அதிகரிக்கும். வளர்ச்சி கூடும். இளநரை பிரச்சனை சிறிது சிறிதாக காணாமல் போகும்.

    இளநரை சிவப்பாக
    அதிகரிக்கும் இளநரையை உடனே போக்க மருதாணி கைகொடுக்கும். ஆனால் மிக மிக பக்குவமாக பயன் படுத்த வேண்டும். இல்லையென்றால் கூந்தலில் சிவப்பு குடிகொள்ளும். மருதாணியுடன் கறிவேப்பிலை சம மாக எடுத்து அரைத்து இளநரை உள்ள பகுதிகளில் மட்டும் மிக பொறுமையாக ( அடுத்தவரை வைத்து) முடியில் பரப்பி சரியாக பத்து நிமிடத்தில் கூந்தலை அலசி விடுங்கள். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் நாளடைவில் இளநரையைத் தேடுவீர்கள்.

    மேற்கண்ட குறிப்புகள் நிச்சயம் இளநரையிலிருந்து உங்களை விடுபட வைக்கும். இவை தவிர பொதுவாக உங் கள் கூந்தலைப் பராமரித்து இளநரையைத் தடுக்க...உணவில் இருக்கும் கறிவேப்பிலையை வீணடிக்க கூடாது. முடிந்தால் தினமும் பத்து கறிவேப்பிலைகளை நன்றாக மென்று சாப்பிடுங்கள்.

    இவை தவிர பழங்கள், காய்கறிகள், கீரைகளை அதிகம் எடுத்துகொள்ள வேண்டும்.கறிவேப்பிலை, நெல்லிக் காய், மருதாணியை ச் சம அளவு எடுத்து அரைத்து வடையாகத் தட்டி நிழலில் காய வைத்து, தேங்காய் எண் ணெயில் கலந்து தினமும் தேய்த்துவரலாம். இவை நாள்பட இளநரையைப் போக்கும். இளநரை வராமலும் தடுக்கும். கூந்தலை கருமையாக வைத்திருக்கும்.

    ஆரம்பம் முதலே சரியான சிகிச்சை மேற்கொண்டால் இளநரையைத் தடுத்துவிடலாம். பக்கவிளைவில்லாத இந்த வைத்தியத்தியத்தை விட சிறந்த தீர்வு வேறெதுவும் இல்லை. இதையெல்லாம் செய்து பாருங்கள். இளநரையா எனக்கா என்று ஐம்பது வயதிலும் தேடுவீர்கள்.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக