Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 4 மார்ச், 2020

இந்த 5 விஷயங்களை நினைவில் வைத்தால், கொரோனா வைரஸ் உங்கள் அருகே கூட வராது!

இந்த 5 விஷயங்களை நினைவில் வைத்தால், கொரோனா வைரஸ் உங்கள் அருகே கூட வராது!
வற்றைப் பின்பற்றினால் கொரோனா வைரஸ் உங்களைச் அண்டாது...
கொரோனா வைரஸ் குறித்து உங்கள் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் செவ்வாய்க்கிழமை முதல் நிறைய தகவல்கள் வந்துள்ளன. கொரோனா வைரஸைத் தவிர்ப்பதற்கான வழிகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகத்தைச் சேர்ந்த அனைவரும் அறிவுறுத்துகின்றனர்.
எனவே எளிய மற்றும் எளிதான வழிகளை நாங்கள் உங்களுக்கு கூறப்போகிறோம். நீங்கள் அதைப் பின்தொடர்ந்தால், கொரோனா வைரஸ் உங்கள் அருகே கூட வராது. 
1. முதலில் சுத்தமாக இருக்க வேண்டும், அடிக்கடி கை கழுவ வேண்டும், குளிக்க வேண்டும். கைகளின் பின்பக்கத்தை கண்டிப்பாக கழுவ வேண்டும். நக இடுக்குகளை கழுவ வேண்டும்.
2. இந்த வைரஸ் நீர் குமிழிகள் மூலம் பரவும். அதனால் தும்மல், இருமல் உள்ளவர்கள் அருகே செல்ல கூடாது. உங்களுக்கு தும்மல், இருமல் இருந்தால், முகத்தை மாஸ்க் கொண்டு மூடுவது நல்லது. என்95 மாஸ்க்கை பயன்படுத்த வேண்டும்.
3. வெவ்வால்களை தொடுவது, விலங்குகள் உடன் விளையாடுவது, சரணாலயங்களுக்கு செல்வது, ட்ரெக்கிங் செல்வதை சில நாட்களுக்கு தவிர்க்கலாம். அதிக அளவு தாடி, முடி வைத்து இருந்தால் அதையும் சுத்தமாக கழுவ அறிவுறுத்தப்பட்டுள்ளது.
4.  மெட்ரோ மற்றும் பேருந்துகளில் சிறப்பு கவனம் செலுத்துங்கள். நீங்கள் மெட்ரோ மற்றும் பேருந்துகளில் பயணம் செய்கிறீர்கள் என்றால், உங்கள் முகத்தில் முகமூடியை வைக்க முயற்சி செய்யுங்கள். உங்களிடம் முகமூடி இல்லையென்றால், குளிர் மற்றும் இருமல் உள்ளவர்களுடன் இடைவெளியைக் குறைக்க முயற்சிக்கவும்.
5. உங்கள் கண்கள், மூக்கு மற்றும் வாயைத் தொடுவதைத் தவிர்க்கவும். 
6. மாலுக்கோ, சினிமாவுக்கோ செல்லாமல் இருப்பது நல்லது. நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் சினிமா ஹால் அல்லது மாலுக்கும் வருகிறார்கள். அவர்களில் யாராவது கொரோனா வைரஸ் உள்ளதா என்பதை அறிவது கடினம். கொரோனா வைரஸைத் தவிர்க்க, இந்த நேரத்தில் மால் மற்றும் சினிமா ஹாலுக்குச் செல்லாமல் இருப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக