Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

லக்னத்தில் செவ்வாய் இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

🌟 செவ்வாய் கிரகத்தை பலரும் கடவுளாக வணங்குகின்றனர். அவ்வாறு வணங்கினால் தைரியமும், அரச சபையில் பேசும் ஆற்றலும் மற்றும் போரில் வெற்றியும் கிடைக்கும்.

🌟 இவருக்கு சக்திதரன், குமாரன், மகாகாயன், மங்கலன், தனப்பிரதன், லோகிதாங்கன், ரத்தாயதேஷணன், ரத்தர்ணன், ஹோமகுண்டலி, ரோகநாசனை, ரக்தவஸ்ரன் என்ற பிற பெயர்களும் உண்டு.

🌟 ஜாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் அமைந்திருந்தால் அங்காரகன் கடன் தொல்லையின்றி, பூமியையும், செல்வத்தையும், வாகன யோகம் மற்றும் புகழையும் அள்ளிக்கொடுப்பார்.

🌟 லக்னத்தில் செவ்வாய் நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு பொருட்சேர்க்கை உண்டாகும்.

லக்னத்தில் செவ்வாய் இருந்தால் என்ன பலன்?

👉 முன்கோபம் உடையவர்கள்.

👉 சுயநலமான சிந்தனைகளை கொண்டவர்கள்.

👉 பிடிவாத குணம் உடையவர்கள்.

👉 தற்புகழ்ச்சிக்கு மயங்கக்கூடியவர்கள்.

👉 விடாமுயற்சியை உடையவர்கள்.

👉 சிலருக்கு அடிக்கடி உடலில் காயங்கள் ஏற்படும்.

👉 வம்பு வழக்குகளில் விருப்பம் கொண்டவர்கள்.

👉 சலனபுத்தி கொண்டவராக இருக்கக்கூடியவர்கள்.

👉 எதிலும் தைரியத்துடன் செயல்படக்கூடியவர்கள்.

👉 சிறு விஷயங்களுக்கு கோபப்படும் குணம் கொண்டவர்கள்.

👉 சூடான உணவுகளை விரும்பி உண்ணக்கூடியவர்கள்.

👉 சிறிய விஷயத்தை பெரியதாக எடுத்து கொள்ளும் தன்மை கொண்டவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக