Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 25 மே, 2020

லக்னத்தில் குரு இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!

குரு என்பவர் தேவர்களின் குருவும், நவகிரகங்களில் ஒருவரும் ஆவார். இவர் சப்தரிஷிகளில் ஒருவரான ஆங்கிரச முனிவரின் மகனாவார். இவருக்கு தாரை என்ற மனைவியும் உண்டு.

இவர் நான்கு வகையான வேதங்களையும், அறுபத்து நான்கு கலைகளையும் அறிந்தவர். எண்ணற்ற யாகங்கள் செய்து தேவர்களின் குருவாக மாறினார்.

அத்துடன் திட்டையில் கோவில் கொண்டுள்ள வசிஷ்டேஸ்வரரை வணங்கி நவகிரக அந்தஸ்து பெற்றார். அதனால் பிரகஸ்பதியின் கிரகமான வியாழன் கிரகம் ராஜகிரகம் என்று அழைக்கப்படுகிறது.

குருவின் வேறு பெயர்கள் :

இவருக்கு அந்தணன், அமைச்சன், அரசன், ஆசான், ஆண்டளப்பான், குரு, சிகிண்டிசன், சீவன், சுரகுரு, தாராபதி, தெய்வமந்திரி, நற்கோள், பிரகஸ்பதி, பீதகன், பொன்னன், மறையோன், வேதன், வேந்தன் என பதினெட்டு பெயர்கள் உள்ளன.

லக்னத்தில் குரு நின்றால் அந்த ஜாதகக்காரருக்கு நன்மைகள் உண்டாகும்.

லக்னத்தில் குரு இருந்தால் என்ன பலன்?

👉 பரந்த மனப்பான்மை உடையவர்கள்.

👉 சிறப்பான பேச்சாற்றல் கொண்டவர்கள்.

👉 இறை நம்பிக்கை உடையவர்கள்.

👉 நேர்மையான குணநலன்களை கொண்டவர்கள்.

👉 பெரிய நபர்களின் நட்புகளை உடையவர்கள்.

👉 தனலாபம் கொண்டவர்கள்.

👉 தன்னம்பிக்கை உடையவர்கள்.

👉 ஆசைகள் இல்லாதவர்கள்.

👉 தேக ஆரோக்கியம் கொண்டவர்கள்.

👉 அழகிய உருவம் உடையவர்கள்.

👉 சட்ட நுணுக்கங்களை அறிந்தவர்கள்.

👉 வாக்குவன்மை உடையவர்கள்.

👉 நெருக்கமானவர்களால் ஏமாற்றம் ஏற்படும்.

👉 பிரபலமானவர்களின் தொடர்புகளை உடையவர்கள்.

👉 மற்றவர்களின் உதவியை எதிர்பார்க்காதவர்கள்.

👉 படிப்படியான முன்னேற்றத்தை கொண்டவர்கள்.

👉 நீண்ட ஆயுளை உடையவர்கள்.

👉 மற்றவர்களுக்கு வழிகாட்டியாக செயல்படக்கூடியவர்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக