செவ்வாய், 4 ஜூன், 2019

கனவு பலன்கள்.!


Image result for கனவு பலன்கள்.! 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:


 குங்குமத்தை கனவில் கண்டால் மங்களகரமான நிகழ்ச்சி நடக்கும் என்பதைக் குறிக்கிறது.

 குரங்கை கனவில் கண்டால் விரோதிகளின் வருகையால் துன்பங்கள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

 குயிலைக் கனவில் கண்டால் நல்ல வாழ்க்கைத்துணை அமையும் என்பதைக் குறிக்கிறது.

 குழந்தைகளை கனவில் கண்டால் சந்தோஷமும், மகிழ்ச்சியும் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

 கொக்கை கனவில் கண்டால் வயலில் விளைச்சல் அதிகரிக்கும் என்பதைக் குறிக்கும்.

 கோட்டையை கனவில் கண்டால் நாம் எடுக்கும் முயற்சிகளில் எளிதில் வெற்றி கிடைக்கும். மேலும் புகழ் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

 கோவில் கோபுரத்தை கனவில் கண்டால் பாவங்கள் நீங்கி விட்டது என்பதை சுட்டிக் காட்டுகிறது.

 சங்கை கனவில் கண்டால் துன்பங்கள் விலகி, செல்வமும், சுகவாழ்வும் உண்டாகும் என்பதைக் குறிக்கும்.

 சாக்கடையை கனவில் கண்டால் நல்ல செயல்களால் இன்பம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

 சாவியை கனவில் கண்டால், திருமணப் பேச்சுவார்த்தை சுமூகமாக முடியும்.

 சித்திரத்தை கண்டால் மனநிறைவு உண்டாகும்.

 சிலையை கனவில் பார்த்தால் புகழ் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

 சுறாமீன் கனவில் வந்தால் நண்பர்களின் வீட்டிற்கு விருந்துக்கு செல்வோம் என்பதைக் குறிக்கிறது.

 சேலையை கனவில் கண்டால் புத்திரர் வருகையை சுட்டிக் காட்டுகிறது.

 தந்தையைக் கனவில் கண்டால் கஷ்டங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் என்பதைக் குறிக்கிறது.

 தானியத்தை கனவில் கண்டால் செல்வம் பெருகும் என்பதைக் குறிக்கிறது.

 திண்பண்டக் கடையை கனவில் கண்டால் குழந்தை பாக்கியம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

 தீபத்தை கனவில் கண்டால் உடல்நலம் மேம்படும் என்பதைக் குறிக்கிறது.

 துடைப்பத்தைக் கனவில் கண்டால் மனக்கஷ்டம் நீங்கும் என்பதைக் குறிக்கிறது.

 தெப்பத்தை கனவில் கண்டால் எடுக்கும் முயற்சிகள் கைக்கூடும்.

 தேகத்தில் கொப்புளங்கள் இருப்பதாக கனவு கண்டால் தனலாபம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.

 தேங்காய் மரத்தில் இருந்து விழுவது போல் கனவு கண்டால் குழந்தைகளால் பிரச்னைகள் ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

 தேவர்களை கனவில் காண்பது மேன்மையை உண்டாக்கும்.

 தேள் கொட்டுவதாக கனவு கண்டால் காரிய சித்தி ஏற்படும்.

 தேனைப் பருகுவதாக கனவு கண்டால் தன இலாபம் உண்டாகும்.

 தேனீக்கள் பூக்கொண்டு வருவது போலவும், கூடு கட்டுவது போலவும் கனவு கண்டால் நல்லது நடக்கும்.

 தையலத்தை கனவில் காண்பது சுப சகுனம் அல்ல.

 தொட்டியில் குழந்தை இருப்பது போன்று கனவு காண்பது குடும்பத்தில் இன்பம் பெருகுவதைக் குறிக்கிறது.

 தோல் விற்கும் வியாபாரியை கனவில் காண்பது பெரியோர்களின் நட்பு கிடைப்பதைக் குறிக்கிறது.

 தோட்டத்தில் பூக்கள், பழங்கள் இருப்பது போன்று கனவு காண்பது குடும்ப அபிவிருத்தி ஏற்படும் என்பதைக் குறிக்கிறது.

 தோப்பினுள் இலை, காய் மற்றும் கனிகளை பறிப்பதாக கனவு காண்பது வியாதிகள் வருவதை முன்கூட்டியே தெரிவிக்கிறது.

 தோரணம் கட்டிய வீட்டின் வாயிற்படிகளை கனவில் காண்பது மிகுந்த இன்பம் ஏற்படுவதைக் குறிக்கும்.

தோட்டத்தில் இளங்காளைகள் இருப்பதாக கனவு வந்தால் குழந்தைகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் விலகும்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  

உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 

மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 

உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Follow and Join with US

தினமும் எங்கள் வாசகர்கள் மற்றும் நண்பர்கள் பல்வேறு செய்திகளை பெறுகின்றனர் நீங்களும் இணைத்து எங்களை வழி நடத்துங்கள்