Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 1 மே, 2020

இருக்குற பிரச்சினை போதாதுனு இது வேற... மின்வேலி அமைத்தவர்களுக்கு அபராதம்

 தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகே தோட்டத்தைச் சுற்றிலும் விலங்குகள் வராமல் இருக்க மின்வேலி வைத்ததாக 4 பேரை வனத்துறையினர் கைது செய்து 80 ஆயிரம் அபராதம் விதித்தனர்.


இந்நிலையில் சுந்தர்சிங் தோட்டத்தைச் சுற்றிலும் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்துள்ளதாக வனச்சரக அலுவலகத்திற்கு வந்த ரகசியத் தகவலையடுத்து முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம் துணை இயக்குநர் (பொ) கணேசன் உத்தரவின் பேரில் வனச்சரகர் நெல்லை நாயகம், மற்றும் வேட்டைத்தடுப்புக் காவலர்கள் உள்ளிட்டோர் திடீர் சோதனை செய்தபோது தோட்டத்தைச் சுற்றிலும் சட்டவிரோதமாக மின்வேலி அமைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து குமாரிடம் விசாரித்ததில் சுந்தர் சிங், குமார், ராஜதுரை மகன் குட்டிராஜ், தங்கவேல் மகன் இளையராஜா ஆகியோர் சேர்ந்து ஒரு மாதத்திற்கு முன்பே மின்வேலி அமைத்ததை ஒப்புக் கொண்டனர்.

இதனையடுத்து நான்கு பேரையும் வனத்துறையினர் கைது செய்தனர். மேலும் குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து நான்கு பேருக்கும் மொத்தம் 80 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக