Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 2 ஜூலை, 2019

பப்ஜி விளையாடியதைத் தடுத்த அண்ணனைக் குத்திக் கொன்ற 15வயது தம்பி.!

 பலன் இல்லாத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார் 
 
 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

 
உலகளவில் பப்ஜி விளையாட்டு அதிக வரவேற்பு பெற்றுள்ளது, குறிப்பாக இந்தியாவில் பப்ஜி செயலிகளை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். மேலும் அன்மையில் பப்ஜி லைட் வெளியிடப்பட்டு முன்பதிவு தொடங்கியது.

பப்ஜி லைட் வெர்ஷன்
குறிப்பாக பப்ஜி லைட் வெர்ஷன் இதற்கு முன்பு ஹாங்காங், தைவான், பிரேசில் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் வெளியிடப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது டென்சென்ட் நிறுவனம் இந்திய கேமிங் சந்தையிலும் தனது பப்ஜி லைட் வெர்ஷனை அறிமுகம் செய்து வரும் ஜீலை 4-ம் தேதி முதல் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்படும் எனத் தெரிவித்துள்ளது.

கத்தரிக்கோலால் குத்திக் கொன்றார்
இந்நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் பப்ஜி விளையாடியதைத் தடுத்தற்காக உடன்பிறந்த அண்ணனை 15 வயது சிறுவன் கடந்த ஜீன் 29-ம் தேதி கத்தரிக்கோலால் குத்திக் கொன்றார்

முஹம்மது ஷேக் கடுமையாகத் திட்டியுள்ளார்
அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தின் பிவான்டி பகுதியைச் சேர்ந்தவர் முஹம்மது ஷேக்(19). இவருடைய 15-வயது தம்பி எந்நேரமும் தனது செல்போனை எடுத்து பப்ஜி கேம்ஸ் விளையாடுவதைக் கண்டு ஆத்திரமடைந்த முஹம்மது ஷேக் கடுமையாகத் திட்டியுள்ளார்.

சுவரின்மீது மோதி காயப்படுத்தினான்
இதனால் ஆத்திரமடைந்த சிறுவன் உடன்பிறந்த அண்ணன் என்றும் பாராமல் முஹம்மது ஷேக் மீது பாய்ந்தான். அவரை தாக்கி தலையைப் பிடித்து சுவரின்மீது மோதி காயப்படுத்தினான்.

பலன் இல்லாத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்
பின்பு இதிலும் ஆத்திரம் தணியாமல் வீட்டிலிருந்த கத்தரிக்கோலை எடுத்து சரமாரியாகக் குத்தினான், இதில் பலத்த காயமடைந்த முஹம்மதுவை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றும் பலன் இல்லாத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.

 விசாரித்து வருகின்றனர்
இந்த சம்பவம் தொடர்பாக பிடிப்பட்ட சிறுவனைச் சீர்திருத்தப் பள்ளிக்கு அனுப்பிய போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!