>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

    அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில்- வேலூர்

     Image result for அருள்மிகு ஜலகண்டேஸ்வரர் திருக்கோவில்- வேலூர்

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



    சகல திருஷ்டிகளையும் நீக்கி பக்தர்களை காத்தருளும் ஜலகண்டேஸ்வரர் கோவில் வேலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி ஆகிய முத்தேவியரும் அருளும் தலம்.

    மூலவர் : ஜலகண்டேஸ்வரர்

    உற்சவர் : சோமாஸ்கந்தர், சந்திரசேகரர்

    அம்மன்ஃதாயார் : அகிலாண்டேஸ்வரி

    தல விருட்சம் : வன்னி

    தீர்த்தம் : கங்காபாலாறு, தாமரை புஷ்கரிணி

    ஆகமம்ஃபூஜை : சிவாகமம்

    பழமை : 1000-2000 வருடங்களுக்கு முன்

    புராண பெயர் : வேலங்காடு

    மாவட்டம் : வேலூர்

    தல வரலாறு :

    அக்காலத்தில் சப்தரிஷிகளில் ஒருவரான அத்திரி இத்தலத்தில் லிங்கம் ஒன்றை வைத்து வழிபட்டார். காலப்போக்கில், லிங்கம் இருந்த பகுதியானது வேலமரக் காடாக மாறியது. லிங்கத்தையும் புற்று மூடிவிட்டது. அதன்பிறகு பொம்மி என்னும் சிற்றரசர் இப்பகுதியை ஆண்டு வந்தார், அவரது கனவில் சிவன் தோன்றி, தான் புற்றால் மூடப்பட்டுள்ள லிங்கமாக உள்ளதை சுட்டிக்காட்டி கோவில் எழுப்பும்படி கூறினார். பொம்மியும் பயபக்தியுடன் சிவனின் கட்டளைக்கு உட்பட்டு கோவில் எழுப்பினார். இந்த சிவலிங்கத்திற்கு கீழே தண்ணீர் இருப்பதாகச் கூறப்படுகிறது. எனவே இங்குள்ள சிவனுக்கு 'ஜலகண்டேஸ்வரர்" என்று பெயர் ஏற்பட்டது.

    தல சிறப்பு :

    பிரம்மா, திருமால் இருவரின் ஆணவத்தை அடக்குவதற்காக சிவன், ஜோதி சொரூபனாக காட்சி தந்த நாள் கார்த்திகை. இந்நாளில் மும்மூர்த்திகளும் ஒன்றாக காட்சி தந்ததன் அடிப்படையில், இங்கு மும்மூர்த்திகளும் ஒரே பல்லக்கில் அருள்பாலிக்கின்றனர்.

    மும்மூர்த்திகளைப் போல முப்பெரும் தேவியரையும் இங்கு தரிசிக்கலாம். இங்குள்ள நந்தியின் முன்பு, பக்தர்கள் தங்கள் பிரார்த்தனை நிறைவேற, தீபம் ஏற்றாத அகல்விளக்கை வைப்பது வித்தியாசமான பிரார்த்தனை.

    அம்பாள் அகிலாண்டேஸ்வரி சன்னதி எதிரில், அணையா நவசக்தி ஜோதி தீபம் இருக்கிறது. அம்பிகை தீபத்தின் வடிவில் நவசக்திகளாக அருளுகிறாள்.

    இத்தலத்து சிவன் பத்ம விமானத்தின் கீழ் அருள்பாலிக்கிறார். சிவன் சன்னதியின் பின்புறம் திருப்பதி அமைப்பில் வேங்கடேசப்பெருமாள் காட்சி தருகிறார்.

    மன்னர் பொம்மி, சிவனுக்கு கோவில் எழுப்பியபோது சுற்றிலும் ஒரு பிரம்மாண்டமான கோட்டையைக் கட்டினார். கோட்டையைச் சுற்றி தண்ணீர் நிறைந்த பெரிய அகழி இருக்கிறது. பிரகாரத்தில் கலை அழகு மிளிரும் கல்யாண மண்டபம் இருக்கிறது.

    பிராத்தனை :

    நீண்ட ஆயுளுடன் வாழவும். திருமணத்தடை நீங்கவும், திருஷ்டிகள் விலகவும் பக்தர்கள் இங்கு பிரார்த்தனை செய்து சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக