Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

சொர்க்கம்...!

Image result for சொர்க்கம்

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

ஒரு காலத்தில் இந்திரஜித் என்ற ஒரு மாமன்னன் இருந்தார். அவர் ஆட்சி காலத்தில் மக்கள் போற்றும் வண்ணம் தான, தர்மங்கள் செய்து, சிறப்பாக அரசாண்டு, நேரே சொர்க்கத்திற்கு சென்றார்.

சொர்க்கபுரியின் இன்பத்தில் திளைத்துக் கொண்டிருந்த அவரை ஒரு நாள் சொர்க்கத்தின் தலை கூப்பிடுவதாக தேவதூதன் வந்து சொன்னான். மன்னன் சென்று என்னவென்று கேட்டபோது உனக்கு சொர்க்க வாசம் முடிந்து விட்டது. பூலோகத்திற்கு நாளை கிளம்பத் தயாராக இரு என்று கட்டளை போட்டது.

அதற்கு மன்னன் ஏன் என்று கேட்டார். நீ செய்த நல்ல காரியங்களை நினைவில் வைத்திருக்க யாருமே பூலோகத்தில் உயிருடன் இல்லை. இன்றுடன் அந்த கணக்குத் தீர்ந்து விடும். ஆகவே கிளம்பும் வழியைப் பார் என்று தலை கூறியது.

இதற்குத் தீர்வே இல்லையா? என்று மன்னன் முறையிட்டார். 'தலை" முகவாயைச் சொறிந்து கொண்டு யோசித்தது. பிறகு மன்னா, நீ கீழே போய் உனது நற்காரியங்களால் இன்னும் பலன் பெறும் ஒரு ஜீவனையாவது கண்டு பிடித்தால் உனக்கு சொர்க்கம் நீடிக்கப்படும் என்று சொன்னது. மன்னனும் கிளம்பிப் பூலோகம் வந்தார்.

பல நூறு ஆண்டுகள் கடந்து விட்டிருந்தன. அவர் வாழ்ந்த இடமே தலைகீழாக மாறிப் போயிருந்தது. மக்களில் யாரையும் அவரால் அடையாளம் கண்டுபிடிக்க முடியவில்லை. மனதைத் தேற்றி நம்பிக்கையோடும், விடாமுயற்சியாகவும் தேடி இருப்பதிலேயே வயதான ஒரு மனிதரை சந்தித்தார்.

அவரிடம் ஐயா! உமக்கு இந்திரஜித் என்று இந்தப் பகுதியை அரசாண்ட மன்னனைப் பற்றித் தெரியுமா? என்று ஆர்வத்துடனும், மிகுந்த எதிர்பார்ப்புடனும் கேட்டார். வயோதிகர் இடுங்கிய கண்களால் அவரை மேலும், கீழும் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கி விட்டார்.

வேண்டுமானால் என்னை விட வயதான ஆந்தை ஒன்று பக்கத்து மரப்பொந்தில் தூங்கிக் கொண்டிருக்கிறது. இரவில் அது விழித்த பின் அதனிடம் போய்க் கேள் என்று சொல்லி விட்டார். வேறு வழியில்லாமல் இரவு வரை கோவில் நிழலில் உட்கார்ந்திருந்து விட்டு இரவு ஆந்தையை தேடிப்பார்த்தார்.

தலையை முதுகுப் பக்கம் வைத்து ஒரு இரையைக் குறி வைத்துக் கொண்டிருந்த ஆந்தையிடம் இந்திரஜித் மன்னனைப் பற்றி கேட்டார். இரையைத் தப்ப விட்ட எரிச்சலில் ஆந்தை எனக்குத் தெரியாது. இங்கே ஒரு நாரை தினமும் காலைப் பொழுதில் இருக்கும். வேண்டுமானால் அதைக்கண்டு பிடித்துக் கேள் என்று சொல்லி விட்டுத் தன் வேலையைப் பார்க்கப் போய் விட்டது.

பிறகு அவரும் காலையில் அலைந்து திரிந்து நாரையைக் கண்டு பிடித்தார். அதனிடம் கேட்டபோது எனக்கு நினைவில்லை. ஆனால் பக்கத்து ஏரியில் ஒரு ஆமை இருக்கிறது. அதற்கு நினைவிருக்க வாய்ப்பிருக்கிறது என்று நம்பிக்கையை வளர்த்தி விட்டது.

மன்னனும் ஏரியைத் தேடி சென்றார். அங்கே ஆமையை பார்த்து, இந்திரஜித் மன்னனைப் பற்றிக் கேட்டார். ஆமை உடனே ஆமாம். அவரால்தான் இந்த ஏரியும் இருக்கிறது, இங்கு இருக்கும் உயிரினங்களும் உயிர் வாழ்கின்றன என்று சொன்னது.

அப்போது மன்னன் நானேதான் அந்த இந்திரஜித் மன்னன் எனக்கு இந்த ஏரியை ஏற்படுத்தியதாக நினைவில்லையே. நீ ஏதோ தப்பாகச் சொல்கிறாய் என்று நம்பிக்கை இழந்து போய் ஆமையிடம் கேட்டார். அதற்கு ஆமை, நீ அரசாண்ட போது மக்களுக்குத் தினமும் ஏராளமான பசுக்களைத் தானமாக வழங்கினாய். மக்கள் அவற்றையெல்லாம் இந்தப் பகுதியில் புல் தரை மேய விட்டார்கள். மாடுகள் தினமும் அலைந்து திரிந்து தன் கொம்புகளால் மண்ணைக் கிளப்பி விட்டதால் இந்தப் பகுதி நாளடைவில் பள்ளமாகிவிட்டது.

மழை பெய்து நீர் பிடித்ததால் இங்கு ஏரி உருவானது. இந்தப் பகுதியின் செழிப்பிற்கே இந்த ஏரிதான் காரணம். அதைக் கேட்டுத்தான் நான் இங்கே குடியேறினேன். இன்னமும் பல உயிரினங்களும் வாழ்கின்றன. வாழப் போகின்றன என்றது. உடனே தூரத்தில் சொர்க்கபுரியில் இருந்து மன்னனை அழைத்துச் செல்ல விமானம் வந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக