Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

திங்கள், 18 மே, 2020

கொரோனா தடுப்பு மருந்து தயாரித்த பிரிட்டிஷ் - மனிதர்களுக்கு பயன்படுத்த தயார் நிலை


கொரோனா தடுப்பு மருந்து தயாரித்த பிரிட்டிஷ் - மனிதர்களுக்கு பயன்படுத்த தயார் நிலை
உலகம் முழுவதும் பல ஆராய்ச்சி நிறுவனங்கள் மருத்துவர்கள், ஆராய்ச்சியாளர்கள், இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து மற்றும் மருந்து ஆகியவை கண்டுபிடிக்க இரவு பகல் பாராமல் உழைத்து கொண்டு இருக்கிறார்கள். இதில் கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இருக்கின்றன. இந்தியாவிலும் பல இடங்களில் இதற்கான வேலைகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமுள்ளன. அதில் முக்கியமாக இத்தாலி, இந்தியாவிலுள்ள புனேவில் உள்ள ஒரு நிறுவனம், அமெரிக்காவை சேர்ந்த ஒரு நிறுவனம், இங்கிலாந்தை சேர்ந்த ஒரு நிறுவனம் என பல நிறுவனங்கள் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்று ஏற்கனவே பார்த்துள்ளோம். இப்பொழுது பிரிட்டிஷ் நிறுவனமான புகையிலை தயாரிப்பில் முன்னணியில் உள்ள ஒரு நிறுவனம் இந்த வைரஸ்க்கு ஒரு தடுப்பு மருந்து தயாரித்து உள்ளதாகவும், இந்த வைரஸிற்கு எதிரான ப்ரோட்டின் அவர்களிடம் உள்ளதாகவும் கூறியிருக்கிறார்கள். இந்த மருந்தானது டோபாக்கோ இலை மூலம் தயாரித்து உள்ளதாகவும் கூறி இருக்கிறார்கள்.


இந்த பிரிட்டிஷ் அமெரிக்கன் நிறுவனமானது உலகத்தில் பல நிறுவனங்களின் எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. ஏனென்றால் இது சிகரெட் தயாரிப்பில் முன்னணியில் உள்ள நிறுவனமாகும். இவர்கள் இப்பொழுது இந்த வைரஸ் தடுப்பு மருந்து கண்டு பிடித்ததாகக் கூறுவது பலரிடமும் ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது. உலகத்தில் உள்ள பல ஆராய்ச்சியாளர்களும், நூற்றுக்கும் மேற்பட்ட ஆராய்ச்சி நிறுவனங்களும் இந்த நோய்க்கு எதிரான தடுப்பு மருந்தை தீவிரமாக கண்டுபிடித்து வருகின்றனர். அதில் பலரும் கிட்டத்தட்ட முக்கால்வாசி வேலைகளை முடித்து விட்டதாக கூறுகின்றனர். ஒருசிலர் விரைவில் இந்த மருந்து தயாரிப்பு நிலைக்கு வந்துவிடும் என்றும் கூறியிருக்கின்றனர். இப்படியிருக்க இப்பொழுது இந்த நிறுவனமும் தங்களது மருந்து தயாராக இருக்கிறது என்று கூறி இருக்கின்றனர்.

இந்த நிறுவனத்தைப் பொறுத்தவரை மற்ற தடுப்பு மருந்துகளை விட இதைத் தயாரிப்பதற்கு குறுகிய காலமே போதுமானது என்று கூறியிருக்கிறார்கள். மற்ற மருந்துகள் தயாரிக்க எடுக்கும் நேரங்களை விட குறைந்த நேரங்களில் இந்த மருந்தை தயாரித்து விடலாம் என்று கூறி இருக்கிறார்கள். பல மாதங்கள் தேவைப்படும் வேலைகளுக்கு சில வாரங்களே எங்களுக்குப் போதும் என்று இவர்கள் கூறியிருக்கிறார்கள். ஆறுமாதம் தேவைப்படும் வேலைக்கு கிட்டத்தட்ட ஆறு வாரங்கள் போதும் என்று இவர்கள் கூறியிருக்கிறார்கள். ஒரு வாரத்தில் கிட்டத்தட்ட பத்து லட்சம் முதல் முப்பது லட்சம் மருந்துகள் தயாரித்து விடலாம் என்று இவர்கள் கூறியிருக்கிறார்கள்.

இந்த நிறுவனமானது இவர்கள் ஆராய்ச்சியின் ஆதாரங்கள் அனைத்து விதமான தயாரிப்பு வழிமுறைகள் போன்றவைகளை இப்பொழுது அமெரிக்காவிலுள்ள ஃபுட் அண்ட் அட்மினிஸ்ட்ரேஷன் அமைப்பிடம் சமர்ப்பித்து உள்ளனர் அவர்களின் அங்கீகாரத்திற்காக காத்துக் கொண்டு உள்ளனர் அமெரிக்க அரசு இவர்களின் ஆராய்ச்சியை இவர்களின் மருந்தையும் சோதித்து விட்டு அவர்களுக்கு அனுமதி அளித்தவுடன் தயாரிப்பை தொடங்கிவிடலாம் என்று கூறியிருக்கிறார்கள். மேலும் உலகத்தில் உள்ள மற்ற நிறுவனங்களிடமும் தயாரிப்பிற்கு உதவி செய்ய வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். இவர்கள் ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் தங்களது வேலையை ஆரம்பித்து விடுவோம் என்று நம்பிக்கை கூறியிருக்கிறார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!