>>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    திங்கள், 13 ஜூலை, 2020

    வரலாற்றின் துயரமான நிகழ்வுகளின் நினைவுகளாய் எஞ்சியிருக்கும் புகைப்படங்களின் தொகுப்பு!

    samayam tamil

    நம் உலகம் உருவான காலம் முதலே பல வகையான பேரழிவுகளை சந்தித்து வருகிறோம். அதுவும் மனித இனத்தின் தோன்றலுக்கு பிறகு அழிவுகள் அதிகமாகின. அதன் பிறகு மனித இனத்தில் குண்டு வெடிப்புகள், பயங்கரவாத தாக்குதல்கள், இயற்கை பேரழிவுகள் என பல வகைகளில் அழிவுகள் வர துவங்கின.

    அதில் பல அழிவுகள் இன்னும் மக்களால் மறக்கமுடியாத காலத்தால் அழியாத நிகழ்வாக மனித மனங்களில் தங்கிவிட்டன. இப்படியாக பயங்கரமான சோகங்கள் மனித வாழ்க்கையில் நடக்கும்போது அவற்றின் சான்றுகளாக அந்த காலக்கட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் உள்ளன.

    அப்போதைய காலக்கட்டத்தில் நடந்த பேரழிவுகளின் தாக்கத்தை தற்போதைய மக்களுக்கு வெளிப்படுத்தும் விதமாக அந்த புகைப்படங்கள் அமைந்துள்ளன. அப்படிப்பட்ட புகைப்படங்களை பற்றிதான் இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.

    10.ஹீரோஷிமா வெடிக்குண்டு

    samayam tamil
    அணுக்குண்டு வெடிப்பின் போது மனித உடல்கள் ஆவியாகி உருகி நீர் போல ஆவதை நீங்கள் பார்த்ததுண்டா? அப்படி ஒரு கொடூரம் நடந்த இடம்தான் ஜப்பானில் உள்ள ஹீரோஷிமா.
    6 ஆகஸ்ட் 1945 வரலாற்றில் முக்கியமான தினமாகும். அன்றுதான் அந்த குண்டு வெடிப்பு நடந்தது. தங்களுக்கு நிகழ போகும் பயங்கரவாதத்தை அறியாமல் இருந்தனர் ஜப்பானிய மக்கள். அந்த குண்டு வெடிப்பின் கடுமையான வெப்பம் பூமியின் மேற்பரப்பில் உள்ள அனைத்து விஷயங்களையும் அழித்தது. மனிதர்கள் அனைவரும் உருகி நிழல் போல அந்த இடங்களில் படிந்து இருந்தனர்.
    சில நொடிகளில் நன்றாக இருந்த அனைத்தும் நாசமாகி இருந்தன. அப்போது அங்கிருந்த மனிதர்களை சுற்றியுள்ள சுவர், கூரை என அனைத்தும் எரிய துவங்கின.
    அவ்வாறு வெடிக்குண்டு தாக்கியப்பிறகு படிக்கட்டில் அமர்ந்திருந்த ஒரு மனிதன் உருகி ஆவியான பிறகு அவனது தடம் மட்டும் அந்த படிக்கட்டுகளில் எஞ்சியிருந்தது. அது புகைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது.

    09.நியுசிலாந்து வீரர்களின் நினைவு சின்னம்

    samayam tamil முதலாம் உலகபோர் கடுமையாக நடந்து கொண்டிருந்த போது நியுசிலாந்தில் அதிகப்படியான வீரர்கள் போரில் இறந்தனர். இரண்டு வருடங்களுக்கு பிறகு அவர்களுக்கு நியுசிலாந்து நினைவு சின்னம் எழுப்பியது.

    இந்த புகைப்படமானது நினைவு சின்னம் எழுப்ப ஒருவர் குழி தோண்டியபோது எடுக்கப்பட்டது. ஆச்சரியப்படும் விதமாக தங்கள் எதிரிகளுக்கு நினைவு சின்னம் எழுப்பியவர்களும் உலகில் இருக்கின்றனர்.

    08.சுரங்க தொழிலாளிகளின் ஒலி

    samayam tamil 28 டிசம்பர் 1959 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் சசோல்பர்க்கிற்கு வெளியே உள்ள கோல்ப்ரூக் சுரங்கத்தின் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. அதில் ஒரு சுரங்க தொழிலாளி காயமடைந்தார். 

    இதையடுத்து சுரங்கத்தை ஆய்வு செய்ய ஆய்வாளர் அழைக்கப்பட்டார். அவரிடம் முன்பு நடந்த விபத்து குறித்து கூறப்படவில்லை. இரண்டு வாரங்கள் அந்த ஆய்வாளர் சுரங்கத்தை ஆய்வு செய்தார்.

    துருதிருஷ்டவசமாக அவர் சுரங்கத்திற்குள் எந்த பிரச்சனையையும் கண்டறியவில்லை. ஆனால் 21 ஜனவரி 1960 அன்று சுரங்கத்தின் ஒரு பகுதி துண்டு துண்டாக சரிந்து விழுந்தது. அப்போது அங்கே 1000 தொழிலாளர்கள் வேலைப்பார்த்து கொண்டிருந்தனர்.

    அதில் பாதி பேர் தப்பிய பிறகு 435 சுரங்க தொழிலாளிகள் நிலத்தடியில் மாட்டிக்கொண்டனர். அங்கே வந்த மீட்பு பணியாளர்கள் சிக்கியுள்ள சுரங்க தொழிலாளர்களின் ஒலியை கேட்பதற்காக உபகரணங்களை மாட்டிய போது அது புகைப்படமாக எடுக்கப்பட்டது.

    மீட்பு பணிகள் இரண்டு வார காலம் தொடர்ந்தன. ஆனால் பிப்ரவரி 1960 அன்று அனைத்து முயற்சிகளும் நிறுத்தப்பட்டன. அந்த 435 சுரங்க தொழிலாளர்களும் நிலத்தடியிலேயே இறந்தனர். அவர்களின் உடல்கள் இறுதிவரை மேற்பரப்பிற்கு கொண்டு வரப்படவே இல்லை.

    07.பைத்தியத்தால் கொல்லப்பட்டவர்கள்

    samayam tamil 19 நவம்பர் 1978 அன்று ஜிம் ஜோன்ஸ் என்பவர் கயானாவில் 900க்கும் மேற்பட்ட மக்களை கொன்றார். அவர் ஒரு மனநல பாதிக்கப்பட்டவர் ஆவார். கடவுளை காணுவதற்கான ஒரே வழி மரணம் என அவர் கருதினார். அவர் ஒரே நேரத்தில் தன்னை பின்பற்றும் அனைவருக்கும் குடிக்கும் பானத்தில் சயனைடு என்னும் விஷத்தை கலந்து கொடுத்தார் 

    அப்போது இறந்து போன 900க்கும் மேற்பட்டவர்களின் பிணங்கள் ஹெலிகாப்டரில் இருந்து படம் பிடிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு மன நோயாளி சாதரண மனிதனின் மனதில் எவ்வளவு தூரம் ஊடுருவ முடியும் என்பது தெரிகிறது.

    05.விண்கல வெடிப்பு

    samayam tamil
    28 ஜனவரி 1986 அன்று விண்வெளி பயணத்திற்காக விண்வெளி வீரர்கள் தயாராகி கொண்டிருந்தனர். அவர்கள் தயாரான போது எடுத்ததுதான் இடப்பக்கம் உள்ள புகைப்படம். ஆனால் அவர்கள் உயிரோடு வீடு திரும்ப போவதில்லை என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.
    அவர்கள் மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தனர். சேலஞ்சர் என்னும் அந்த விண்கலம் ஏவப்பட்டு 73 வினாடிகளில் வானில் உடைந்து வெடித்து சிதறியது. அதில் சென்ற அனைவரும் இறந்தனர்.

    04.போரின் மூலம் மனிதனை துயரப்படுத்த மட்டுமே முடியும்

    samayam tamil இரண்டாம் உலக போரில் போரிட்டு அங்கு நடந்த பேரழிவிலிருந்த தப்பித்தான் அந்த பெயரிடப்படாத ஜெர்மானிய போர் வீரன். அவன் தப்பித்த உடனே தனது வீட்டிற்கு செல்ல ஆசைப்பட்டான். ஆனால் அவனது ஆசை நிறைவேறவில்லை. 

    அவன் தனது வீட்டிற்கு சென்றபோது வெடித்த தனது வீட்டின் எச்சங்களை தவிர வேறு எதுவும் அங்கே மிஞ்சவில்லை. நேச நாட்டு படைகளின் வான்வழி தாக்குதலால் அவரது முழு குடும்பமும் இறந்திருந்தது.
    துயரத்தோடு அமர்ந்திருக்கும் அந்த சிப்பாயை படத்தில் காணலாம்.

    03.வதை முகாமை சேர்ந்த படையினர்

    samayam tamil யூத மக்களின் படுகொலை பற்றி பலத்தரப்பட்ட மக்களும் அறிந்து இருப்பர். நாஜி படைகளால் வதை முகாம்களில் அவர்கள் வதைக்கப்பட்டு கொல்லப்பட்டனர். ஆனால் அந்த முகாம்களில் நடந்த அட்டூழியங்கள் குறித்து அதிக பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. 

    1945 தொடக்கத்தில் 1.1 யூத மக்கள் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அதே 1945 ஆம் ஆண்டே யூத வதை முகாமை சேர்ந்தவர்கள் போர் கைதிகளாக கைது செய்யப்பட்டனர். அப்படியாக பல்லாயிரம் மக்களை கொலை செய்த அந்த மனிதர்களை படத்தில் காணலாம்.

    02.வேலை செய்யாததற்கான தண்டனை

    samayam tamil வேறு எந்த புகைப்படத்தை விடவும் துயரத்தை அதிகமாக வெளியிடும் புகைப்படமாக இதை பார்க்கலாம். 1904 இல் காங்கோவில் பெல்ஜிய மன்னர் இரண்டாம் லியோபோல்ட்டின் ஆட்சி நடந்துக்கொண்டிருந்தது.
    அப்போது அங்கே இருந்த அடிமை தொழிலாளிகள் ரப்பர் தோட்டத்தில் தினமும் குறிப்பிட்ட அளவு ரப்பரை சேகரிக்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால் அன்று சாலா என்னும் தொழிலாளி அந்த குறிப்பிட்ட அளவு ரப்பரை சேகரிக்க தவறிவிட்டார்.

    அதற்காக அவருக்கு ஒரு மோசமான தண்டனை வழங்கப்பட்டது. அவரது ஐந்து வயது மகளின் கை மற்றும் கால்களை பெல்ஜிய கண்காணிகள் வெட்டினர். பின்னர் மேற்பார்வையாளர்கள் அவரது மகள் மற்றும் மனைவியை கொன்றனர்.

    மகளின் வெட்டப்பட்ட கை, கால்களை சாலா துயரத்தோடு பார்த்துக்கொண்டிருப்பதை படத்தில் காணலாம்.

    01.மோசமாக உயிர் வாழ்ந்தவர்

    samayam tamil


    அமெரிக்காவில் உள்ள அண்டர்சன்வில் சிறைசாலையில் நிகழ்ந்த கொடூரங்களுக்கு சான்றாக இந்த புகைப்படம் உள்ளது. அமெரிக்காவில் உள்ளதிலேயே மிகவும் மோசமான போர் கைதிகளுக்கான சிறைச்சாலையாக இது கூறப்படுகிறது.
    இந்த புகைப்படத்தில் உள்ளவர் ஒரு யூனியன் ராணுவ வீரர் ஆவார். அமெரிக்காவில் உள் நாட்டு யுத்தம் நடந்தபோது கைது செய்யப்பட்டு அவர் பசி பட்டினியால் அவதிப்படுத்தப்பட்டார். ஆனால் அவர் தப்பிக்க முயற்சிக்கவில்லை. இறுதியாக அவர் 1865 மே அன்று விடுவிக்கப்பட்டார்.
    இப்படியாக நாம் பார்த்த ஒவ்வொரு புகைப்படமும் அப்போதைய சமகாலத்தில் நடந்த மனித தன்மையற்ற கொடூரமான நிகழ்வுகளை பதிவு செய்துள்ளன. அந்த படங்களே தற்போதைய தலைமுறையினருக்கு ஆதாரமாக விளங்குகின்றன. இப்படியாக மனித வரலாறு தனது பக்கங்களில் அதிகப்படியான துயரங்களை தாங்கி வந்துள்ளது என தெரிகிறது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக