Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 16 டிசம்பர், 2020

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி- முழு விவரம் இங்கே!

கவிஞர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி- முழு விவரம் இங்கே!

கொரோனா ஊரடங்குக்கு பிறகு கிட்டதட்ட 7 மாதங்களுக்குப் பிறகு திரையரங்குகள் திறக்கப்பட்டுள்ளன. படப்பிடிப்புகள் முழுவீச்சில் நடந்து வருகிறது. முன்னணி பிரபலங்கள் பலர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள ஆரம்பித்துள்ளனர். 

இந்நிலையில் இன்று காலை முதலே படுவேகமாக பரவி வரும் ஒரு செய்தியானது கோலிவுட் (kollywood) வட்டாரத்தை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது. தமிழ் திரையுலகின் முன்னணி பாடலாசிரியரும் கவிஞருமான கவிப்பேரரசு வைரமுத்து (Vairamuthu) இன்று காலை திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டத்தை அடுத்து அவரது குடும்பத்தினர் உடனடியாக அவரை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். இருதய நோய் பிரச்சனை காரணமாக வைரமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் வைரமுத்து தரப்பிலிருந்து விளக்கம் அளித்துள்ள அவருடைய உதவியாளர், அவர் வழக்கமான சோதனைகளுக்காக மட்டுமே மருத்துவமனை வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

வைரமுத்து சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஏழு முறை பெற்றுள்ளார். நிழல்கள் (1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலைப் பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார். முன்பு இளையராஜாவுடனும், பின்னர் ஏ. ஆர். ரகுமானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.


 குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக கூகிளில் இருந்து எடுத்து வழங்கப்படுபவையே 
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக