>>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 24 மே, 2022

    மதுரையில் ஆம்லேட், ஃபுல் மீல்ஸுடன் செயல்படும் அம்மா உணவகம்- ஹோட்டல் போல அதிக விலைக்கு செயல்படுவதாக புகார்


    தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில் 2012-ம் ஆண்டில் குறைந்த விலைக்கு உணவு விற்பனை செய்யும் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. முதலில் சென்னையில் திறக்கப்பட்ட அம்மா உணவகம் பிறகு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. ஏழை மக்கள் பலரும் அம்மா உணவகத்தில் தொடர்ந்து உணவு உண்டு தங்கள் பசியைப் போக்கிவருகின்றனர். இந்தநிலையில், கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு அம்மா உணவகம் செயல்படுமா என்று கேள்வி எழுந்த நிலையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்று அரசு அறிவித்தது.

    இருப்பினும், அம்மா உணவகங்கள் முன்புபோல முறையாக செயல்படவில்லை என்று புகார்கள் எழுந்துவருகின்றன. அதேபோல, மதுரையில் உள்ள பல அம்மா உணவகங்களில் ஏற்கனவே பணிபுரிந்த பெண் பணியாளர்கள் பணி நீக்கம் செய்துவிட்டு திமுக ஆதரவுடைய பணியாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும், இதனை சாதகமாக பயன்படுத்தி திமுக கவுன்சிலர்கள் சிலர் அவரவர் பகுதிகளில் உள்ள அம்மா உணவகத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும் கடந்த காலங்களில் சர்ச்சைகள் எழுந்தன.

    News18 India
    Latest News
    ட்ரெண்டிங்
    சினிமா
    மீம்ஸ்
    லைஃப்ஸ்டைல்
    ரெசிபி
    ஆல்பம்
    ஐபிஎல் 2022
    வீடியோ
    Mission Paani
    Live TV
    மொழியைத் தேர்ந்தெடு :
    தமிழ்(Tamil)(12 மேலும் மொழி)
    Englishहिन्दी (Hindi)मराठी (Marathi)ગુજરાતી (Gujarati)ಕನ್ನಡ (Kannada)বাংলা (Bengali)മലയാളം (Malayalam)తెలుగు (Telugu)ਪੰਜਾਬੀ (Punjabi)اردو (Urdu)অসমীয়া (Assamese)ଓଡ଼ିଆ (Odia)
    திரும்பிச் செல்லுங்கள்
    Latest News
    ஐபிஎல் 2022
    தமிழ்நாடு
    கொரோனா
    வெப் ஸ்டோரீஸ்
    பொழுதுபோக்கு
    லைஃப்ஸ்டைல்
    ராசிபலன்
    வேலைவாய்ப்பு
    மீம்ஸ்
    ட்ரெண்டிங்
    இந்தியா
    உலகம்
    குற்றம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    ஆட்டோமொபைல்ஸ்
    ஆன்மிகம்
    வணிகம்
    கல்வி
    சிறப்புக் கட்டுரைகள்
    Explainers
    புகைப்படங்கள்
    வீடியோக்கள்
    எங்களைப் பற்றி
    தொடர்புக்கு
    விதிமுறைகள்
    தள இணைப்புகள்
    தண்ணீர் இயக்கம்
    Netra Suraksha
    HOME
    /
    NEWS
    /
    TAMIL-NADU
    /
    மதுரையில் ஆம்லேட், ஃபுல் மீல்ஸுடன் செயல்படும் அம்மா உணவகம்- ஹோட்டல் போல அதிக விலைக்கு செயல்படுவதாக புகார்
    மதுரையில் ஆம்லேட், ஃபுல் மீல்ஸுடன் செயல்படும் அம்மா உணவகம்- ஹோட்டல் போல அதிக விலைக்கு செயல்படுவதாக புகார்
    மாதிரிப் படம்
    மாதிரிப் படம்
    மதுரையில் அம்மா உணவகங்களில் தனியார் உணவகங்களை போல ஆம்லேட் உள்ளிட்ட உணவுகள் தயாரித்து கூடுகள் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.





    NEWS18 TAMIL
    LAST UPDATED: MAY 23, 2022, 17:32 IST
    VETRIVEL NEWS18 TAMIL NADU
    தமிழ்நாட்டின் முதல்வராக ஜெயலலிதா இருந்த காலத்தில் 2012-ம் ஆண்டில் குறைந்த விலைக்கு உணவு விற்பனை செய்யும் அம்மா உணவகம் திறக்கப்பட்டது. முதலில் சென்னையில் திறக்கப்பட்ட அம்மா உணவகம் பிறகு மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. ஏழை மக்கள் பலரும் அம்மா உணவகத்தில் தொடர்ந்து உணவு உண்டு தங்கள் பசியைப் போக்கிவருகின்றனர். இந்தநிலையில், கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க ஆட்சி அமைந்த பிறகு அம்மா உணவகம் செயல்படுமா என்று கேள்வி எழுந்த நிலையில் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என்று அரசு அறிவித்தது.

    இருப்பினும், அம்மா உணவகங்கள் முன்புபோல முறையாக செயல்படவில்லை என்று புகார்கள் எழுந்துவருகின்றன. அதேபோல, மதுரையில் உள்ள பல அம்மா உணவகங்களில் ஏற்கனவே பணிபுரிந்த பெண் பணியாளர்கள் பணி நீக்கம் செய்துவிட்டு திமுக ஆதரவுடைய பணியாளர்கள் நியமிக்கப்பட்டதாகவும், இதனை சாதகமாக பயன்படுத்தி திமுக கவுன்சிலர்கள் சிலர் அவரவர் பகுதிகளில் உள்ள அம்மா உணவகத்தை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளதாகவும் கடந்த காலங்களில் சர்ச்சைகள் எழுந்தன.

    இந்நிலையில், மதுரை புதூர் பகுதியில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாநகராட்சி அனுமதித்துள்ள 1 ரூபாய்க்கு விற்கப்படும் இட்லி மற்றும் 5 ரூபாய்க்கு விற்கப்படும் பொங்கலுக்கு பதிலாக பூரி, வடை, உப்புமா, சப்பாத்தி, ஆம்லேட் என தனியார் உணவகத்தில் கிடைப்பது போன்று பல்வேறு வகையான உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதேபோல் மதிய வேளைகளிலும் சாதத்துடன் ரசம், மோர், ஆம்லேட் உள்ளிட்டவை விற்கப்பட்டு வருகிறது.

    ஏழை எளியோரின் பசி போக்க செயல்பட்ட அம்மா உணவகத்தை திமுக கவுன்சிலர்கள் சிலர் தங்களுக்கு லாபம் ஈட்டும் உணவகமாக மாற்றியுள்ளதாக புகார் எழுந்துள்ள நிலையில் அது குறித்து உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக