Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 27 நவம்பர், 2019

இதைப் பயன்படுத்தி உங்கள் அழகைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!!

 Image result for இதைப் பயன்படுத்தி உங்கள் அழகைப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்!!


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Join Our Telegram Channel

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

சருமம் பொலிவு பெற...!!

நீங்கள் உங்கள் அழகைப் பாதுகாக்க எவ்வளவோ முயற்சி செய்தும், சரியான பலன் கிடைக்கவில்லையா? கவலை வேண்டாம். இயற்கை தந்த பூக்களை வைத்து உங்கள் முகத்தை மிகவும் பொலிவுடனும், பளபளப்புடனும் வைத்துக் கொள்ளலாம். அதற்கான வழிமுறைகளை பற்றி இங்கு காண்போம்.

ரோஜாப்பூ :

ரோஜா இதழ்களைப் பால் சேர்த்து அரைத்து, உதடுகளின் மேல் தடவி வந்தால் உதடுகள் பளபளப்பாக மாறும்.

பன்னீர் ரோஜாவின் இதழ்களுடன், வேப்பிலையை சேர்த்து அரைத்து, அதில் சில துளிகள் எலுமிச்சைச்சாறு கலந்து முகத்தில் தடவி, கண்களுக்கு மேல் பன்னீரில் நனைத்த பஞ்சை வைத்துக் கொண்டு 15 நிமிடங்கள் ஓய்வெடுக்கவும். இது முகத்திலுள்ள பருக்கள், கரும்புள்ளிகள் ஆகியவற்றை நீக்கி, சருமத்தைப் பளபளப்பாக்கும்.

மல்லிகைப்பூ :

மல்லிகைப்பூவுடன், இலவங்கத்தைச் சேர்த்து அரைத்து, அதில் சந்தனம் சேர்த்து, வெதுவெதுப்பான தண்ணீர்விட்டு முகம், கழுத்து, முதுகுப் பகுதிகளில் தடவி, 20 நிமிடங்கள் கழித்துக் குளிர்ந்த தண்ணீரால் கழுவினால் சருமம் பொலிவு பெறும்.

தாமரைப்பூ :

தாமரை இதழ்களை சிறிது பால்விட்டு அரைத்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், சருமத்திற்கு ஒருவித மென்மையைக் கொடுக்கும்.

வாரம் 1 முறையாவது இதை செய்தால், சருமத்தை மென்மையுடன் வைத்துக் கொள்ளலாம்.


மகிழம்பூ :

மகிழம்பூவை சிறிதளவு ஊற வைத்து அரைத்து, தினமும் குளிக்கும்போது இதை பயன்படுத்தினால், வியர்வை நாற்றத்தைப் போக்கலாம். மேலும், சருமப் பிரச்சனைகளை சரி செய்யும்.

சாமந்திப்பூ :

சாமந்திப்பூவின் இதழ்களை மட்டும் உதிர்த்து எடுத்து, ஒரு வாணலியில் தண்ணீரை நன்கு சூடாக்கி அதில் சாமந்திப் பூக்களைப் போட்டு, அடுப்பை அணைத்துவிட்டு மூடி வைத்து விடவும். ஒரு இரவு முழுவதும் அப்படியே வைத்து மறுநாள் காலையில் அந்த தண்ணீரை வடிகட்டி, அதில் முகம் கழுவினால், முகம் பொலிவு பெறும்.

இந்த சாமந்திப்பூவின் தண்ணீரை இரண்டு நாட்களுக்கு ஃப்ரிட்ஜில் வைத்தும் உபயோகப்படுத்தலாம்.

மரிக்கொழுந்து :

மரிக்கொழுந்து சாறுடன், சந்தனத்தை சேர்த்து முகம், கை, கால்களில் தேய்த்து மசாஜ் செய்து 20 நிமிடங்கள் கழித்துக் கழுவினால், சரும நிறம் கூடும்.

செம்பருத்தி :

செம்பருத்தி பூவுடன், பாதாம் பருப்பு சேர்த்து ஊற வைத்து, அரைத்து வெயில்படும் சருமப் பகுதிகளில் எல்லாம் தடவி, அரை மணி நேரம் கழித்து கழுவினால், தோல் மென்மையாக மாறும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக