• எங்களை பற்றி
  • எங்களை தொடர்பு கொள்ள
  • தனியுரிமைக்கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • பொறுப்பு துறப்பு
  • விளம்பரம் செய்ய
ஊர்க்கோடாங்கி
  • ஈஸியா கத்துக்கலாம் வாங்க
  • உள்ளூர் முதல் உலகம் வரை
  • அறிந்து கொள்வோம்
  • சமையல் குறிப்புகள்
  • ஆன்மிகமும் - ஜோதிடமும்
  • அமானுஸ்யம்
  • அந்த நாள் ஞாபகம்
    • அருள்தரும் ஆலயங்கள்
    • மேலும் சில ;
      • குட்டிக்கதைகளும் -கட்டுரைத்தொடர்களும்
      • ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
      • ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
      • கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்;
      • வரலாறு;
      • பாட்டி வைத்தியம்

Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

Click here to join our WhatsApp channel

சனி, 14 டிசம்பர், 2019

`ஆசைப்பட்டது லட்ச ரூபாய்; கிடைத்தது ரூ.200'- வேலைக்குச் சேர்ந்த 12 மணி நேரத்தில் சிக்கிய டிரைவர்

ஊர்க்கோடாங்கி சனி, டிசம்பர் 14, 2019

கார் டிரைவர் கார்த்திக்
கார் டிரைவர் கார்த்திக்

சென்னையில் செயல்படும் பிரபல உணவகத்தின் உரிமையாளரிடம் வேலைக்குச் சேர்ந்த 12 மணி நேரத்தில் காரைத் திருடிய வழக்கில் டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை வடபழனி காவல் நிலையத்துக்கு வந்த தொழிலதிபர் வாசுதேவன் ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரை, டிரைவர் கடத்திவிட்டார் என்று கூறினார். உடனே உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். வாசுதேவன் கொடுத்த தகவலின்படி டிரைவரை போலீஸார் தேடிவந்தனர்.
இந்தநிலையில் செல்போன் சிக்னல் மூலம் டிரைவர் இருக்கும் இடத்தை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் டிரைவரைப் பிடித்தனர். பின்னர் காரையும் பறிமுதல் செய்து வடபழனி காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்தனர். டிரைவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னை ராயப்பேட்டை, அவ்வைசண்முகம் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருபவர் வாசுதேவன். 63 வயதாகும் இவர், சென்னை முழுவதும் ஹோட்டல் பிசினஸ் செய்துவருகிறார். `கார் டிரைவர் தேவை' என விளம்பரம் கொடுத்துள்ளார். அதைப்பார்த்த ஒருவர், வாசுதேவனின் வீட்டுக்கு 11-ம் தேதி காலையில் சென்றுள்ளார். அங்கு வாசுதேவனைச் சந்தித்த அந்த நபர், தன்னுடைய பெயர் அன்னராஜ் என்றும் கார் ஓட்டத் தெரியும் என்று கூறியுள்ளார்.
அதை நம்பிய வாசுதேவன், அன்னராஜிடமிருந்து டிரைவிங் லைசென்ஸை வாங்கிக்கொண்டு அவரை வேலைக்குச் சேர்த்துள்ளார். பின்னர் அன்றைய தினம் இரவு 9 மணியளவில் வடபழனிக்கு காரில் சென்றுள்ளார். காரை டிரைவர் அன்னராஜ் ஓட்டியுள்ளார். வடபழனியில் உள்ள மாலுக்குள் சென்ற வாசுதேவன், பொருளை வாங்கிவிட்டு வெளியில் வந்துள்ளார். அப்போது காரோடு அன்னராஜ் மாயமாகியிருந்துள்ளார். உடனே அன்னராஜின் செல்போனுக்கு வாசுதேவன் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என பதில் வந்தது.
இதனால், வடபழனி காவல் நிலையத்தில் 10.30 மணியளவில் வாசுதேவன், புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்தி டிரைவரைப் பிடித்தோம். விசாரணையில் அவரின் பெயர் கார்த்திக் என்றும் நெல்லை மாவட்டம், வானூரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.
 இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர் ``தொழிலதிபரான வாசுதேவனுக்கு சென்னை முழுவதும் ஹோட்டல் கிளைகள் உள்ளன. ஒவ்வொரு கிளைகளுக்கும் சென்று கணக்குப்பார்த்து பணத்தை வசூல் செய்த வாசுதேவன், அதைப் பையில் வைத்துள்ளார். லட்சக்கணக்கான ரூபாய் இருந்த அந்தப் பையை காரில் வைப்பதை டிரைவர் கார்த்திக் பார்த்துள்ளார். இதனால் பணத்தோடு எஸ்கேப் ஆகிவிடலாம் எனக் கார்த்திக் திட்டமிட்டுள்ளார்.
இந்தச் சமயத்தில்தான் வாசுதேவன், அந்தப் பையையும் தன்னுடைய ஐபோனையும் காரிலேயே வைத்துவிட்டு பொருள்கள் வாங்க கடைக்குச் சென்றுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கார்த்திக், அங்கிருந்து காரில் கல்பாக்கத்துக்குச் சென்றுள்ளார். காரிலிருந்த பையைத் திறந்துபார்த்தபோது அதில் வெறும் ரூ.200 மட்டுமே இருந்துள்ளது. பணத்தை பையில் வைத்த வாசுதேவன், கடைக்குச் செல்லும்போது பணத்தை மட்டும் தன்னுடைய பாக்கெட்டில் எடுத்து வைத்துள்ளார்.
அதை கார்த்திக் கவனிக்கவில்லை. அதே நேரத்தில் வாசுதேவன், தன்னுடைய ஐபோனை சைலன்ட் மோடில் காரிலேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளார். காரில் ஐபோன் இருக்கும் தகவலை வாசுதேவன் போலீஸாரிடம் கூறியதும் அந்த செல்போன் சிக்னல் மூலம் கார்த்திக்கைப் பிடித்துவிட்டோம். வேலைக்குச் சேர்ந்து 12 மணி நேரத்தில் காரைத் திருடிய கார்த்திக்கை, புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் கைது செயதுவிட்டோம்" என்றார்.
செல்போன் சிக்னல் மூலம் டிரைவர் இருக்கும் இடத்தை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் டிரைவரைப் பிடித்தனர். பின்னர் காரையும் பறிமுதல் செய்து வடபழனி காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்தனர்.
காரைக் கடத்திய கார்த்திக் நன்றாக மது அருந்தியுள்ளார். காரை விற்று விட்டு எஸ்கேப் ஆக திட்டமிட்டிருந்த கார்த்திக், ஐபோன் சிக்னலால் சிக்கிக்கொண்டார். காவல் நிலையத்தில் போதையில் தெளிந்தபிறகு கார்த்திக், தன்னை மன்னித்துவிடும்படி போலீஸாரிடம் கெஞ்சியுள்ளார். கார்த்திக்கிடம் விசாரித்தபோது தன்னுடைய அப்பா, அம்மா இருவரும் விபத்தில் இறந்துவிட்டதாகவும் சகோதரிக்குத் திருமணமாகிவிட்டதாகவும் கேரளாவில் உள்ள பாதிரியார் ஒருவரின் தயவில் வளர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
கார்த்திக் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும் அவர் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வடபழனி காவல் நிலையத்துக்கு தெரியவந்துள்ளது. கார் டிரைவர் போல வேலைக்குச் சேரும் கார்த்திக், பணம், காரோடு எஸ்கேப் ஆகிவிடுவார் என்று சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

நீங்கள் படிக்க மேலும் சில

  • மாவட்ட வாரியாக பிறப்பு சான்றிதழ் வாங்க
  • நவ கிரஹங்களின் வரலாறு
  • பழமொழியும் அதன் அர்த்தங்களும்
  • யோகாசனம்
  • 63 நாயன்மார்கள்
  • சிவபுராணம் (நிறைவுற்றது)
  • எண் கணித பலன்கள்
  • பொன்னியின் செல்வன்
  • மகாபாரதம் (நிறைவுற்றது)
  • சிவபுராணம் - பாகம் 2 (திருவிளையாடலும், திருவினையும்) (நிறைவுற்றது)
  • 🦎 பல்லி விழும் பலன் – உண்மையில் என்ன நம்பிக்கை?
  • இராமாயணம் (நிறைவுற்றது)
  • ரிலாக்ஸ் ப்ளீஸ்
  • விளம்பரம் செய்ய

இந்த வாரம் அதிகம் படித்தவை

  • ரயிலை போன்று விமானத்தில் சீட்டுக்கு அடியில் படுத்து உறங்கிய பயணி..!
      இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து...
  • பாண்டவர்களை சந்திக்கும் வியாசர்...!
    கி ருஷ்ணர், பாண்டவர்களுக்கு ஆறுதல் கூறிவிட்டு சென்றார். வன வாசத்தில் பாண்டவர்களுக்கு ஓர் நிபந்தனை இருந்தது. அவர்கள் தங்கியிருக்கும் வனத்...
  • நெற்றியில் விபூதி இட்டுக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!
    பசுமாட்டு சாணத்தை எரித்து திருநீறு செய்கின்றார்கள். மாடு அறுகம்புல் போன்ற பலவகையான புல்வகைகளை உண்டு. தனது உடலைத் தேற்றிச் சாணம் போடும...
  • திரௌபதி கேட்கும் நீதி...!
      து ச்சாதனன், திரௌபதியை இழுத்து வந்து சபையில் தள்ளினான். திரௌபதி பாண்டவர்களை பார்த்தாள். பாண்டவர்கள் தலைகுனிந்தனர். துரியோதனன், திரௌபத...
  • 9-ம் வீட்டில் ராகு இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
    கிரகங்களில் ராகுபகவான் யோகக்காரகனாவார். இவரை வணங்கிட யோகம், பதவி, தொழில், வளமான வாழ்வு, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன், வறுமை, நோய் நீக்கம...
  • 11-ம் வீட்டில் சனி இருந்தால் உண்டாகும் பலன்கள்...!!
    நீதி அரசர் என அழைக்கப்படும் சனிபகவான், தவறு செய்பவர்களின் மீது கோபம் கொள்வார். அதே சமயம், நேர்மையான, சரியான விஷயங்கள், பிறருக்கு தீங்கு ஏற...
  • துலாம் ராசியில் வக்ரமாகும் புதனால் அதிக பிரச்சனைகளை சந்திக்கப்போகும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
      ஜோதிட சாஸ்திரத்தில் வியாபாரம், பேச்சு, பகுப்பாய்வு ஆகியவற்றைக் குறிக்கும் புதன் பகவான் துலாம் ராசியின் வக்ர நிலை அடைவது மிகவும் முக்க...
  • பாண்டி ஆட்டம்
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள...
  • மகர ராசியில் செவ்வாய் இருந்தால் கிடைக்கும் பலன்கள் !!
    மகர ராசியின் அதிபதி சனி ஆவார். சனியுடன் செவ்வாய் பகை என்னும் உறவு நிலையில் நின்று அளிக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் பின்வருமாறு : 👉 ...
  • 🏥💳 இந்திய மருத்துவ துறையில் பெரிய மாற்றம் வரப்போகிறதா?
    🏥💳 இந்திய மருத்துவ துறையில் பெரிய மாற்றம் வரப்போகிறதா?
    இருசக்கர வாகனம் முதல் நிதி சேவைகள் வரை பல துறைகளில் வெற்றி கண்டுள்ள Bajaj Group, தற்போது மருத்துவமனை மற்றும் சுகாதார துறையிலும் ...
Subscribe via Email It’s Free


*We Hate Spam!

Intrested in Carnatic Music

Intrested in Carnatic Music

© ஊர்க்கோடாங்கி / பொறுப்பு துறப்பு / சேவை விதிமுறைகள் / தனி யுரிமைக் கொள்கை / விளம்பரம் செய்ய / எங்களை பற்றி

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!