• எங்களை பற்றி
  • எங்களை தொடர்பு கொள்ள
  • தனியுரிமைக்கொள்கை
  • சேவை விதிமுறைகள்
  • பொறுப்பு துறப்பு
  • விளம்பரம் செய்ய
ஊர்க்கோடாங்கி
  • ஈஸியா கத்துக்கலாம் வாங்க
  • உள்ளூர் முதல் உலகம் வரை
  • அறிந்து கொள்வோம்
  • சமையல் குறிப்புகள்
  • ஆன்மிகமும் - ஜோதிடமும்
  • அமானுஸ்யம்
  • அந்த நாள் ஞாபகம்
    • அருள்தரும் ஆலயங்கள்
    • மேலும் சில ;
      • குட்டிக்கதைகளும் -கட்டுரைத்தொடர்களும்
      • ஆட்டோமொபைலும் - பங்குச்சந்தையும்
      • ஆரோக்கியமும் - அழகுக்குறிப்பும்
      • கேஜெட்டுகளும் - தொழில்நுட்பங்களும்;
      • வரலாறு;
      • பாட்டி வைத்தியம்

Learn Carnatic Music in Online

Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our WhatsApp channel

சனி, 14 டிசம்பர், 2019

`ஆசைப்பட்டது லட்ச ரூபாய்; கிடைத்தது ரூ.200'- வேலைக்குச் சேர்ந்த 12 மணி நேரத்தில் சிக்கிய டிரைவர்

ஊர்க்கோடாங்கி சனி, டிசம்பர் 14, 2019

கார் டிரைவர் கார்த்திக்
கார் டிரைவர் கார்த்திக்

சென்னையில் செயல்படும் பிரபல உணவகத்தின் உரிமையாளரிடம் வேலைக்குச் சேர்ந்த 12 மணி நேரத்தில் காரைத் திருடிய வழக்கில் டிரைவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னை வடபழனி காவல் நிலையத்துக்கு வந்த தொழிலதிபர் வாசுதேவன் ரூ.8 லட்சம் மதிப்புள்ள காரை, டிரைவர் கடத்திவிட்டார் என்று கூறினார். உடனே உதவி கமிஷனர் ஆரோக்கிய பிரகாசம் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் விசாரணை நடத்தினர். வாசுதேவன் கொடுத்த தகவலின்படி டிரைவரை போலீஸார் தேடிவந்தனர்.
இந்தநிலையில் செல்போன் சிக்னல் மூலம் டிரைவர் இருக்கும் இடத்தை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் டிரைவரைப் பிடித்தனர். பின்னர் காரையும் பறிமுதல் செய்து வடபழனி காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்தனர். டிரைவரிடம் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், ``சென்னை ராயப்பேட்டை, அவ்வைசண்முகம் சாலையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்துவருபவர் வாசுதேவன். 63 வயதாகும் இவர், சென்னை முழுவதும் ஹோட்டல் பிசினஸ் செய்துவருகிறார். `கார் டிரைவர் தேவை' என விளம்பரம் கொடுத்துள்ளார். அதைப்பார்த்த ஒருவர், வாசுதேவனின் வீட்டுக்கு 11-ம் தேதி காலையில் சென்றுள்ளார். அங்கு வாசுதேவனைச் சந்தித்த அந்த நபர், தன்னுடைய பெயர் அன்னராஜ் என்றும் கார் ஓட்டத் தெரியும் என்று கூறியுள்ளார்.
அதை நம்பிய வாசுதேவன், அன்னராஜிடமிருந்து டிரைவிங் லைசென்ஸை வாங்கிக்கொண்டு அவரை வேலைக்குச் சேர்த்துள்ளார். பின்னர் அன்றைய தினம் இரவு 9 மணியளவில் வடபழனிக்கு காரில் சென்றுள்ளார். காரை டிரைவர் அன்னராஜ் ஓட்டியுள்ளார். வடபழனியில் உள்ள மாலுக்குள் சென்ற வாசுதேவன், பொருளை வாங்கிவிட்டு வெளியில் வந்துள்ளார். அப்போது காரோடு அன்னராஜ் மாயமாகியிருந்துள்ளார். உடனே அன்னராஜின் செல்போனுக்கு வாசுதேவன் தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் என பதில் வந்தது.
இதனால், வடபழனி காவல் நிலையத்தில் 10.30 மணியளவில் வாசுதேவன், புகார் கொடுத்தார். அதன்பேரில் விசாரணை நடத்தி டிரைவரைப் பிடித்தோம். விசாரணையில் அவரின் பெயர் கார்த்திக் என்றும் நெல்லை மாவட்டம், வானூரைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது. இதையடுத்து கார்த்திக்கைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம்" என்றனர்.
 இதுகுறித்து நம்மிடம் பேசிய போலீஸ் உயரதிகாரி ஒருவர் ``தொழிலதிபரான வாசுதேவனுக்கு சென்னை முழுவதும் ஹோட்டல் கிளைகள் உள்ளன. ஒவ்வொரு கிளைகளுக்கும் சென்று கணக்குப்பார்த்து பணத்தை வசூல் செய்த வாசுதேவன், அதைப் பையில் வைத்துள்ளார். லட்சக்கணக்கான ரூபாய் இருந்த அந்தப் பையை காரில் வைப்பதை டிரைவர் கார்த்திக் பார்த்துள்ளார். இதனால் பணத்தோடு எஸ்கேப் ஆகிவிடலாம் எனக் கார்த்திக் திட்டமிட்டுள்ளார்.
இந்தச் சமயத்தில்தான் வாசுதேவன், அந்தப் பையையும் தன்னுடைய ஐபோனையும் காரிலேயே வைத்துவிட்டு பொருள்கள் வாங்க கடைக்குச் சென்றுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய கார்த்திக், அங்கிருந்து காரில் கல்பாக்கத்துக்குச் சென்றுள்ளார். காரிலிருந்த பையைத் திறந்துபார்த்தபோது அதில் வெறும் ரூ.200 மட்டுமே இருந்துள்ளது. பணத்தை பையில் வைத்த வாசுதேவன், கடைக்குச் செல்லும்போது பணத்தை மட்டும் தன்னுடைய பாக்கெட்டில் எடுத்து வைத்துள்ளார்.
அதை கார்த்திக் கவனிக்கவில்லை. அதே நேரத்தில் வாசுதேவன், தன்னுடைய ஐபோனை சைலன்ட் மோடில் காரிலேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளார். காரில் ஐபோன் இருக்கும் தகவலை வாசுதேவன் போலீஸாரிடம் கூறியதும் அந்த செல்போன் சிக்னல் மூலம் கார்த்திக்கைப் பிடித்துவிட்டோம். வேலைக்குச் சேர்ந்து 12 மணி நேரத்தில் காரைத் திருடிய கார்த்திக்கை, புகார் கொடுத்த 3 மணி நேரத்தில் கைது செயதுவிட்டோம்" என்றார்.
செல்போன் சிக்னல் மூலம் டிரைவர் இருக்கும் இடத்தை போலீஸார் கண்டறிந்தனர். இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் டிரைவரைப் பிடித்தனர். பின்னர் காரையும் பறிமுதல் செய்து வடபழனி காவல் நிலையத்துக்குக் கொண்டு வந்தனர்.
காரைக் கடத்திய கார்த்திக் நன்றாக மது அருந்தியுள்ளார். காரை விற்று விட்டு எஸ்கேப் ஆக திட்டமிட்டிருந்த கார்த்திக், ஐபோன் சிக்னலால் சிக்கிக்கொண்டார். காவல் நிலையத்தில் போதையில் தெளிந்தபிறகு கார்த்திக், தன்னை மன்னித்துவிடும்படி போலீஸாரிடம் கெஞ்சியுள்ளார். கார்த்திக்கிடம் விசாரித்தபோது தன்னுடைய அப்பா, அம்மா இருவரும் விபத்தில் இறந்துவிட்டதாகவும் சகோதரிக்குத் திருமணமாகிவிட்டதாகவும் கேரளாவில் உள்ள பாதிரியார் ஒருவரின் தயவில் வளர்ந்ததாகவும் கூறியுள்ளார்.
கார்த்திக் கைது செய்யப்பட்ட தகவல் வெளியானதும் அவர் குறித்து அதிர்ச்சி தகவல்கள் வடபழனி காவல் நிலையத்துக்கு தெரியவந்துள்ளது. கார் டிரைவர் போல வேலைக்குச் சேரும் கார்த்திக், பணம், காரோடு எஸ்கேப் ஆகிவிடுவார் என்று சிலர் தகவல் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக போலீஸார் விசாரித்துவருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

இதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)

நீங்கள் படிக்க மேலும் சில

  • 12 ராசிகளுக்குமான 2024 ஆங்கில புத்தாண்டு ராசிபலன்கள்
  • மாவட்ட வாரியாக பிறப்பு சான்றிதழ் வாங்க
  • நவ கிரஹங்களின் வரலாறு
  • பழமொழியும் அதன் அர்த்தங்களும்
  • யோகாசனம்
  • 63 நாயன்மார்கள்
  • சிவபுராணம் (நிறைவுற்றது)
  • எண் கணித பலன்கள்
  • பொன்னியின் செல்வன்
  • மகாபாரதம் (நிறைவுற்றது)
  • சிவபுராணம் - பாகம் 2 (திருவிளையாடலும், திருவினையும்) (நிறைவுற்றது)
  • பல்லி விழும் பலன்கள்
  • இராமாயணம் (நிறைவுற்றது)
  • ரிலாக்ஸ் ப்ளீஸ்
  • விளம்பரம் செய்ய

இந்த வாரம் அதிகம் படித்தவை

  • பூத் ஸ்லிப் இன்னும் கிடைக்கவில்லையா? கவலைப்பட வேண்டாம் — வீட்டிலிருந்தபடியே இரண்டு நிமிடங்களில் டவுன்லோடு செய்யலாம்!
    பூத் ஸ்லிப் இன்னும் கிடைக்கவில்லையா? கவலைப்பட வேண்டாம் — வீட்டிலிருந்தபடியே இரண்டு நிமிடங்களில் டவுன்லோடு செய்யலாம்!
    தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இந்த நாளில் வாக்களிக்க செல்லும் ஒவ்வொருவருக்கும் ...
  • ஞானாம்பிகை அம்பாள் உடனுறை காளாத்தீஸ்வரர் திருக்கோயில், தேனி
    ஞானாம்பிகை அம்பாள் உடனுறை காளாத்தீஸ்வரர் திருக்கோயில், தேனி
    தென்காளஹஸ்தியில் அமைந்துள்ள ஞானாம்பிகை அம்பாள் உடனுறை காளாத்தீஸ்வரர் திருக்கோயில் , தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் பஸ் நிலையத்த...
  • Quick Share-ல் இப்போது "Tap செய்தாலே போதும்!" — Android-இன் NameDrop Moment வந்தாச்சு! ✨
    Quick Share-ல் இப்போது "Tap செய்தாலே போதும்!" — Android-இன் NameDrop Moment வந்தாச்சு! ✨
    Apple NameDrop பார்த்து நாமெல்லாம் "Android-லயும் இப்படி வந்தா நல்லா இருக்கும்னு" நினைச்சது நினைவிருக்கா? அந்த நாள் வந...
  • 🚆 ரயில் பெட்டிகளில் இருக்கும் மஞ்சள் சாய்வு கோடுகள் – இதன் ரகசியம் என்ன தெரியுமா?
    🚆 ரயில் பெட்டிகளில் இருக்கும் மஞ்சள் சாய்வு கோடுகள் – இதன் ரகசியம் என்ன தெரியுமா?
    இந்தியாவில் ரயில் பயணம் என்பது சாதாரண விஷயம் இல்லை — அது ஒரு அனுபவம். சிறிய குழந்தை முதல் பெரியவர் வரை, வாழ்க்கையில் ஒருமுறையாவத...
  • மூளையைப் பாதிக்கும் (மந்தமாக்கும்) 10 பழக்கங்கள்:-
    மூளையைப் பாதிக்கும் (மந்தமாக்கும்) 10 பழக்கங்கள்:-
    1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளை...
  • 2 நிமிஷத்தில் கத்தியை எளிதாக கூர்மைப்படுத்துவது எப்படி?
    2 நிமிஷத்தில் கத்தியை எளிதாக கூர்மைப்படுத்துவது எப்படி?
    காய்கறிகள் வெட்டும்போது கத்தி மொக்கையாக இருப்பது எரிச்சலூட்டும் விஷயம் தானே? கடையில் கத்தி கூர்மைப்படுத்தும் இடம் தேடி அலைய வேண்...
  • மூட் அவுட்? அதிலிருந்து வெளிவர உங்களுக்கு வழிகள் இருக்கே!
    மூட் அவுட்? அதிலிருந்து வெளிவர உங்களுக்கு வழிகள் இருக்கே!
    இன்றைய வேகமான உலகில், இந்தியா மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல இளைஞர்கள் "மூட் அவுட்" (Mood Out) என்ற மனநிலையை சந்திக்க...
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
    வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
    வாழ்க்கையில் நாம் வெற்றி பெற, நம் திறமைகளை அடையாளம் கண்டு ஊக்குவிக்கும் உறவுகளும் நட்புகளும் மிக அவசியம்.  திறமை இருந்தும் அதை வ...
  • வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்புகிறீர்களா? விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    வெளிநாடு சென்று வேலை செய்ய விரும்புகிறீர்களா? விண்ணப்பிப்பது எப்படி என்று பார்க்கலாம்.
    வெளிநாட்டில் வேலை செய்ய விரும்பும் தமிழர்களுக்கு வழிகாட்டுகிறது தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம். ஆண்டுதோறும் ஆ...
  • பாண்டவர்களின் அஞ்ஞாத வாசம்...!
    பாண்டவர்கள், தங்களது பன்னிரண்டு காலம் வனவாசம் முடிவடையும் நிலை வந்ததால் அடுத்து அஞ்ஞாத வாசத்தை எப்படி மேற்கொள்வது என்பதை பற்றி கலந்து ஆலோசி...
Subscribe via Email It’s Free


*We Hate Spam!

Intrested in Carnatic Music

Intrested in Carnatic Music

© ஊர்க்கோடாங்கி / பொறுப்பு துறப்பு / சேவை விதிமுறைகள் / தனி யுரிமைக் கொள்கை / விளம்பரம் செய்ய / எங்களை பற்றி

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!