Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 22 ஜனவரி, 2020

இந்தியாவின் தேசிய கீதத்தை சுற்றியிருக்கும் ரகசியங்களும், சர்ச்சைகளும் என்னென்ன தெரியுமா?


Unknown Facts About Our National Anthem
மது இந்தியாவின் முக்கியமான பெருமைமிகு அடையாளங்களில் ஒன்று நமது தேசிய கீதமாகும். நமது தேசிய கீதத்திற்கு என்று சில சிறப்புகள் இருக்கிறது. நமது தேசிய கீதத்திற்கு எவ்வளவு சிறப்புகளும், தனித்துவமும் இருக்கிறதோ அதேஅளவிற்கு அதனை சுற்றி சர்ச்சைகளும், கட்டுக்கதைகளும் உள்ளது. இந்த பதிவில் நமது தேசிய கீதத்தை சுற்றி ரகசியங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.
கட்டுக்கதை
தேசிய கீதம் குறித்து பல்வேறு விதமான கட்டுக்கதைகள் இந்தியாவில் நிலவி வருகிறது. 1911 இல் இந்தியாவுக்கு விஜயம் செய்த நான்காவது ஜார்ஜைப் புகழ்ந்து பேசுவதற்காக ஜன கண மனத்தை ரவீந்திரநாத் தாகூர் எழுதி இயற்றினார் என்ற தவறான கட்டுக்கதை இருந்தது. 1939 மார்ச் 19 தேதியிட்ட ஒரு கடிதத்தில், தாகூர்நான்காவது ஜார்ஜைப் புகழ்ந்து பாடுவதாகக் கருதப்பட்டால் அது அவமானம் என்று கூறி இந்த கட்டுக்கதைக்கு முடிவு வைத்தார்.
சிறந்த தேசிய கீதம்
இந்த செய்தியை நீங்கள் வாட்ஸப்பில் அடிக்கடி பார்த்திருப்பீர்கள். சமீபத்தில், யுனெஸ்கோ எங்கள் கீதத்தை உலகின் 'சிறந்த தேசிய கீதம்' என்று அறிவித்ததாக ஒரு புரளி செய்தி சமூக ஊடகங்களில் வேகமாக பரவியது. உடனடியாக யுனெஸ்கோ தலையிட்டு அத்தகைய அறிவிப்பை மறுத்தது.
முதலில் எங்கு பாடப்பட்டது?
டிசம்பர் 16, 1911 இல் இந்திய தேசிய காங்கிரசின் ஒரு மாநாட்டின் போது தேசிய கீதத்தின் முதல் பாதிப்பு இயற்றப்பட்டது. 1942 செப்டம்பர் 11 ஆம் தேதி ஹாம்பர்க்கில் ஜன கண மன முதன்முதலில் பாடப்பட்டது. 1950 ஜனவரி 24 ஆம் தேதி தான் இந்த பாடல் இந்தியாவின் தேசிய கீதமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இசை மற்றும் மொழிபெயர்ப்பு
நமது தேசிய கீதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பிற்கான இசைக் குறிப்புகளை பெசண்ட் தியோசோபிகல் கல்லூரியின் முதல்வராக இருந்த கவிஞர் ஜேம்ஸ் எச். கசின்ஸின் மனைவி மார்கரெட் அமைத்தார். நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சமஸ்கிருதப்படுத்தப்பட்ட வங்காளத்திலிருந்து உருது-இந்தி வரை தேசிய கீதத்தின் இலவச மொழிபெயர்ப்பை நியமித்தார்.
யார் எழுதியது?
இந்த மொழிபெயர்ப்பை கேப்டன் ஆபிட் அலி எழுதினார், இதற்கு கேப்டன் ராம் சிங் தாக்கூர் இசையமைத்தார். இது சுபா சுக் செயின் என்று அழைக்கப்பட்டது. தேசிய கீதம் பாட யாரையும் கட்டாயப்படுத்தும் சட்ட விதிகள் இதற்கு முன் இருந்தது இல்லை.
அவமரியாதை அல்ல
ஒரு நபர் மரியாதைக்குரிய விதத்தில் எழுந்து நிற்க மட்டுமே தேர்வு செய்தால் அது தேசத்துக்கோ அல்லது கீதத்துக்கோ அவமரியாதை என்று கருதப்படுவதில்லை. சரியாக பாடினால் தேசிய கீதம் பாட 52 விநாடிகள் மட்டுமே தேவைப்படும், 54 விநாடிகள் அல்ல.
பங்களாதேஷ்
ரவீந்திரநாத் தாகூர் அவர்கள் இந்தியாவிற்கு மட்டும்தான் தேசிய கீதம் எழுதி இருக்கிறார் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. ரவீந்திரநாத் தாகூர் பங்களாதேஷின் தேசிய கீதத்தையும் எழுதியுள்ளார்.
போராட்டம்
2005-ல் தேசிய கீதத்தில் இருக்கும் சிந்து என்ற வார்த்தையை நீக்க வேண்டும் என்றும் அதற்குப் பதிலாக காஷ்மீர் என்று வார்த்தையை சேர்க்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தப்பட்டது. ஜூலை 7, 2015 அன்று, ராஜஸ்தான் ஆளுநர் கல்யாண் சிங், ஆதினாயகா என்ற வார்த்தையை மங்கல் என்ற வார்த்தையைக் கொண்டு மாற்றுமாறு கோரிக்கை விடுத்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!