டைனாசர்கள்
உருவத்தில் ஏன் பெரிதாக இருந்தன ?
"ரியோஜோசாரஸ்"
என்ற டைனாசர் உச்சியிலிருந்து வால் நுணி வரை 10மீட்டர்
வளர்ந்து காணப்பட்ட ஒரு ராட்சஸ உயிரினம் ஆகும். அதன் அதீத உயரம் உயர்ந்த மர
உச்சிகளையும் எளிதில் எட்டி உணவு சுவைக்க உதவியது. இவைகளின் இந்த அசாத்திய
வளர்ச்சிக்கு அந்த காலத்தில் காணப்பட்ட தாவர இனங்களும் காரணமாக அமைந்தன. அப்போது
உலகம் முழுவதும் மரங்கள், செடிகள் போன்றவை நிறைந்து இருந்தன. டைனாசர்கள் நாள் முழுவதும் அவற்றை
அருந்திக்கொண்டே இருந்ததனால், தாவரங்களிடம்
இருந்து பெற்ற உபரி சத்துக்கள் அவைகளை அவ்வாறு வளர செய்தன.
டைனாசர்களின் பெரிய
உருவம் அவற்றின் தற்காப்பிற்கும் உதவியது. சமகாலத்தில்
வாழ்ந்த ஊர்வனங்களாகிய "ருட்டி-டியான்" மற்றும் பெரும் முதலைகளுடன்
சண்டையிட்டு தன்னை காத்துக்கொள்ள டைனாசர்களின் பெரும் உருவம் பயன்பெற்றது.
இவ்வுலகில் வாழ்ந்த மிக பெரிய டைனாசர் எது ?
இதுவரை கண்டறியப்பட்ட டைனாசர்களிலேயே மிகவும்
பெரிதாக அறியப்படுவது "அர்ஜென்டினோசாரஸ்" ஆகும். அர்ஜென்டினாவில்
வாழ்ந்த இந்த டைனாசரின் பெயருக்கு பொருள் "வெள்ளி பல்லி" .இந்த ராட்சஸ
உருவம் பெற்ற டைனாசரை பற்றி போதுமான தகவல்கள் இல்லையென்றாலும், இவை
தென் அமெரிக்கா துணைக்கண்டத்தில் 97ல்
இருந்து 94 கோடி ஆண்டு முன்பு
"மத்திய க்ரெடாஷியஸ்" காலத்தில் வாழ்ந்தன என்று அனுமானிக்கப்படுகிறது.
உச்சியிலிருந்து வால் வரை சுமார்40 மீட்டர் வளர்ந்த
இந்த டைனாசர்கள், சிறிய தலை மற்றும் மூளையையே பெற்றிருந்தன.
பரிணாம உயிரியல் வல்லுநர்களின் கூற்றுப்படி, "அர்ஜென்டினோசாரஸின்"
குட்டிகள் நாள் ஒன்றுக்கு சுமார் 100 பவுண்டு
எடை கூடின. வளர்ந்த டைனாசரின் எடையோ சுமார் 100 டன்
இருந்திருக்கும் என அவர்கள் கணிக்கிறார்கள்.
டைனாசர்களில்
பறப்பவை எவை ?
"டீரோடாக்டில்"
எனப்படுபவை பறக்கும் வல்லமை பெற்றிருந்தன. பார்ப்பதற்கு இவை "டீரோசாரஸ்"
வகை டைனாசர்கள் போல் தோன்றினாலும், உண்மையில்
இவைகள், டைனாசர்
இனத்தை சேர்ந்தவை அல்ல என்பதே உண்மை. டைனாசர்கள் வாழ்ந்த சமகாலத்தில் இவைகளும்
இருந்ததால், பறக்கும்
ஊர்வனங்களாகிய "டீரோடாக்டில்" டைனாசர்களாகவே பாவிக்கப்பட்டன.
முன்சரித்திர காலத்தில் வாழ்ந்த விலங்கான "ஆர்கியோப்டெரிக்ஸ்" பறக்கும்
டைனாசராக கருதப்பட்டது. பறவைகள் போல் சிறகும், மரக்கிளையில்
தொத்திக்கொள்ள ஏதுவாக முன்னங்கால்களும் இவைகள் பெற்றிருந்தன. இதே போல
"ஆங்கியார்னிஸ்" ம் சிறகுகளுடன் காணப்பட்டன. ஆயினும் அச்சிறகுகள் கொண்டு
அவைகள் பறந்தனவா அல்லது லேசாக காற்றில் மிதந்தனவா என்று விஞ்ஞானிகள் ஐயம்
தெரிவிக்கிறார்கள்.
நீந்த தெரிந்த டைனாசர்கள் எவை ?
நிலத்தில் டைனாசர்கள் வாழ்ந்த அதே காலகட்டத்தில், கடலில்
நீர்வாழ் ஊர்வனங்களும் கோலோச்சின. இவைகள் டைனாசர்கள் இனத்தை சார்ந்தவை அல்ல.
"ப்ளெசியோசார்ஸ்", "நாதோசார்ஸ்", "மோசாசார்ஸ்",மற்றும்
"இச்சைதோசார்ஸ்" என்று இவைகள் வகைப்பட்டன. உடலில் துடுப்புகளுடன்
மீன்களை வேட்டையாடிய "ப்ளெசியோசார்ஸ்" நீர்வாழ் ஊர்வன இனத்திற்கு
எடுத்துகாட்டாக விளங்கியது. டைனாசர்கள் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்த மற்றொரு
நீர்வாழ் ஊர்வனம் முதலைகள் ஆகும். சில டைனாசர்கள் நீந்த கூடியவைகளாக இருந்தன என்று
புதிய ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. முழுதும் நீர்வாழ் உயிரினமாக இல்லாமல், இறை
தேடும் முயற்சியில் சில டைனாசர்கள் நீந்த பழகியிருக்கக்கூடும் என்பது
ஆராய்ச்சியாளர்களின் நம்பிக்கை ஆகும். உதாரணத்திற்கு "பார்யோனிக்ஸ்"
என்ற டைனாசரின் எச்சத்தில் மீன்களின் எச்சமும் காணப்பட்டன.
"ப்ளெசியோசார்ஸ்"
பல்லிகளை ஒத்த உருவம் கொண்ட "ப்ளெசியோசார்ஸ்" இரண்டு வகை பட்டன. பாம்புகள் போல நீண்ட கழுத்துடன் ஒன்றும், உடலை விட பெரிய தலையுடன் உறுதியான தாடை மற்றும் சிறிய அளவு கழுத்தும் கொண்ட ஒன்றும் என இரு வகையில் அவைகள் வாழ்ந்தன. இவைகள் "க்ரோனோசார்ஸ்" மற்றும் "எலாஸ்மோசார்ஸ்" என்றும் அழைக்கபட்டன.
பல்லிகளை ஒத்த உருவம் கொண்ட "ப்ளெசியோசார்ஸ்" இரண்டு வகை பட்டன. பாம்புகள் போல நீண்ட கழுத்துடன் ஒன்றும், உடலை விட பெரிய தலையுடன் உறுதியான தாடை மற்றும் சிறிய அளவு கழுத்தும் கொண்ட ஒன்றும் என இரு வகையில் அவைகள் வாழ்ந்தன. இவைகள் "க்ரோனோசார்ஸ்" மற்றும் "எலாஸ்மோசார்ஸ்" என்றும் அழைக்கபட்டன.
"நாதோசார்ஸ்"
மீன் உண்டு வாழ்ந்த
"நாதோசார்ஸ்" நான்கு எலும்பு கூடுகள் கொண்டவை ஆகும்.
"ட்ரையாசிக்" காலத்தை சேர்ந்த இவைகள் நீர் மற்றும் நிலம் இரண்டிலும்
வாழ்ந்தன. ஆனால் உண்மையில் நன்கு நீந்தக்கூடிய இவைகள் டைனாசர் அல்ல என்பதே
உண்மையாகும். உடல் மற்றும் கழுத்து நீளமாகவும், அகன்ற
பாதங்களும் இவை பெற்றிருந்தன."நாத்தாசாரிடே" குடும்பத்தை சேர்ந்த இவை
"நாதோசார்ஸ்", "லாரியோசார்ஸ்"
மற்றும் "செரெசியோசார்ஸ்" என்று
வகைப்பட்டன.
"மோசாசார்ஸ்" (மோ- சா- சார்ஸ் என உச்சரிக்கவும் )
இவை ( ஹாலாந்தில் உள்ள "மெயூஸ்" நதிக்கரையில் முதன்முதலாக காணப்பட்டதால் "மெயூஸ் பல்லிகள்" என்ற பெயர் பெற்றன ) பெரிய உருவம் கொண்ட மாமிச உண்ணிகள் ஆகும். டைனாசர் இனத்தை சாராத இவைகள் கடைசி "க்ரெடேஷியஸ்" காலத்தில் வாழ்ந்து வந்தன. திறமையாக நீந்த கூடிய "மோசாசார்ஸ்" நீண்ட உடலில் துடுப்புகள் போன்ற நான்கு எலும்பு கூடுகள் பெற்றிருந்தன. அத்துடன் பெரிய தலைப்பகுதியும், நிறைய பற்களுடன் அமைந்த பெரிய தாடையும் பெற்றிருந்தன. மீன்கள், ஆமைகள் ,ஒட்டுமீன்கள் போன்றவைகளை "மோசாசார்ஸ்" வேட்டையாடி உண்டன. வடக்கு அட்லான்டிக்கில் வாழ்ந்த சில "மோசாசார்ஸ்" 33 அடி உருவமும் கூரிய பற்களும் பெற்றவைகளாக இருந்தன. இவைகள் "மோசாசார்ஸ்" , "ப்ளாட்டிகார்பஸ்" "டைலோசார்ஸ்", "ப்ளெசியோசார்ஸ்", "க்ளிடாஸ்டஸ்", "ப்ளியோப்ளாட்டகார்ப்பஸ்" மற்றும் "க்ளாபிடென்ஸ்" (மீன்களை நசுக்கி உண்ண தட்டையான பற்கள் கொண்டவை) என்று வகைப்பட்டன. "அரேநிசாரஸ்" எனும் கடலோரம் வாழ்ந்த டைனாசரின் எச்சத்தில் அவைகள் நீந்த ஏதுவாக உறுதியான எலும்புக்கூடுகள் காணப்பட்டன என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கிறார்கள்.
முதன்முதலில்
கண்டறியபட்ட டைனாசர் எது ?
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக
பல டைனாசர்களின் எச்சங்கள் இதுவரை மக்களால் கண்டறிய
பட்டுள்ளது.
சீன மொழியில் "சாங் க்யூ" என்பவரால் எழுதபட்டுள்ள "வூசெங் சீசுவாங்" எனும் நூலில் "ட்ராகன்" எலும்புகள் 2000 ஆண்டுகள் முன்பு கண்டறியபபட்டது என்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. ஆயினும் அது டைனாசரின் எலும்பு என்பது தான் சாத்தியக்கூறு.
அதன் பின்பு 1676 ஆண்டில்
"ரெவெரெண்ட் ப்ளாட்" என்பவர் இங்கிலாந்தில் ஒரு பெரிய தொடை எலும்பை
கண்டுபிடித்தார். அப்போது அந்த எலும்பு ஏதோ ஒரு அரக்கனின் எலும்பு என்று
கருதப்பட்டாலும், அதுவும்
டைனாசரின் எலும்பே ஆகும். இது பற்றிய ஓர் அறிக்கை 1763 யில்
ஆர்.ப்ரூக்ஸ் என்பவரால் வெளியிடப்பட்டது.
முதன்முதலில் 1824 ம்
ஆண்டு,
"மெகாலோசாரஸ்" எனும் டைனாசரின் எச்சங்கள்
"வில்லியம் பக்லாண்டு" எனும் ஆங்கில எச்ச ஆராய்ச்சியாளரால்
விஞ்ஞானபூர்வமாக விளக்கப்பட்டது. 1819 ம்
ஆண்டில் அவர் இந்த டைனாசரின் எச்சங்களை கண்டுபிடித்து 1824 ல்
"மெகாலோசாரஸ்" எனும் பெயரிட்டார். இது தான் முறைப்படி
விஞ்ஞானபூர்வமாக விளக்கப்பட்ட முதல் டைனாசர் ஆகும் (இதற்கு முன்பு டைனாசர் என்ற
சொல்லே வழக்கத்தில் இல்லை )
அழிந்துபோன
கடைசி டைனாசர் எது ?
சுமார் 175 கோடி ஆண்டுகள் டைனாசர்கள் இவ்வுலகில் வாழ்ந்தன. 65 கோடி ஆண்டுகள் முன்பு அந்த இனம் அழிந்து போனது. ஆயினும் எல்லா டைனாசர்களும் ஒரே காலத்தில் அழிந்துவிடவில்லை. டைனாசர்கள் அழிந்து கொண்டிருந்த காலத்தில் "டைரானோசாரஸ் ரெக்ஸ்" மற்றும் "ட்ரைசெராடாப்ஸ்" போன்ற நமக்கு நன்கு பரிச்சயமுள்ள டைனாசர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருந்தன. "ஆங்கிலோசாரஸ்" மற்றும் "ராப்டர்" வகையை சேர்ந்த சில டைனாசர்களும் அப்போது வாழ்ந்தன.
அந்த காலகட்டத்தில்
பெரும்பாலான டைனாசர்கள் ஒழிந்து விட்டன. கடைசி டைனாசர் அழிந்து போன காலத்திற்கு பல
கோடி ஆண்டுகள் முன்பே "ப்ராகியோசாரஸ்" மற்றும் "ஸ்டீகோசாரஸ்"
போன்ற டைனாசர்கள் அழிந்து போயிருந்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக