எலுமிச்சை பழத்தில்
ஏராளமான நன்மைகள் இருக்குன்னு பள்ளிக்கூட பாடத்திலேயே படிச்சுருக்கோம் தானே? ஆனா
ராத்திரி நீங்க தூங்கும்போது உங்ககிட்ட ஒரு எலுமிச்சையை வெட்டி வைச்சா என்னல்லாம்
நன்மை நடக்கும் தெரியுமா?

நம்மள்ல கொஞ்சம்பேருக்கு ராத்திரி தூங்கும் போது
மூக்கடைப்பு பிரச்னை இருக்கும். அதனால் தூங்க முடியாமத் தவிப்பாங்க. இவர்கள் ரவு
தூங்கும்போது ஒரு சின்ன துண்டு எலுமிச்சையை பக்கத்தில் வைச்சுட்டு தூங்குனா
மூக்கடைப்பு பறந்திடும். சுவாச பிரச்னையும் சீராகும். அதே மாதிரி எலுமிச்சையில்
வெளிவரும் வாசனையால் மன அழுத்தம் கட்டுப்படும். ஏன்னா உடல் மற்றும் மனம்
அமைதியாகிடும்.

கூடவே இது இரத்த
அழுத்தத்தையும் குறைக்கும். எலுமிச்சை பூச்சிக்கொல்லிங்குறதால இராத்திரி நம்மகிட்ட
பூச்சிகளும் வராது. ராத்திரி பூரா பக்கத்தில் எலுமிச்சையை தாண்டி வரும் காற்றை
சுவாசுக்கிறதால உடலுக்கும் புத்துணர்ச்சி கிடைக்கும்.

இதோட நறுமணம் மூளையில் செரடோனின்ன்னு சொல்லுற
ஹார்மோன் உற்பத்தியை ஜிவ்வுன்னு ஏத்தும். இதனால எதிர்மறை சிந்தனைகள் ஓடி, நேர்மறை
சிந்தனைகள் வளரும்.
அப்புறமென்ன தூங்கப் போகும் போது, எலுமிச்சையை
வெட்டிக்கோங்க…பக்கத்துலயே வைச்சுக்கோங்க!
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக