இந்த செய்தியை
படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி
பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
Follow Us:
Twitter: www.twitter.com/Pudhiyapodiyan
Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan
Instagram: pudhiya.podiyan
Contact us : oorkodangi@gmail.com
கோவையிலிருந்து ஏறத்தாழ 26 கி.மீ தொலைவிலும், மேட்டுப்பாளையத்திலிருந்து 54 கி.மீ தொலைவிலும், நரசீபுரத்திலிருந்து 2 கி.மீ தொலைவிலும் அமைந்து ஆர்பரித்து கொட்டும் அருவிதான் வைதேகி அருவி.
சிறப்புகள் :
கோவை நரசீபுரம் அருகே அமைந்துள்ள எழில்மிகு அருவிதான் வைதேகி நீர்வீழ்ச்சி. கோவை குற்றாலம் போன்றே இதுவும் மேற்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது.
காஞ்சிமாநதி என அழைக்கப்பட்ட இந்த இடத்தில் 'வைதேகி காத்திருந்தாள்" படம் எடுக்கப்பட்டது. அதன் பிறகு இந்த அருவி வைதேகி நீர்வீழ்ச்சி என அழைக்கப்படுகிறது.
பசுமையான போர்வை போர்த்திய அழகிய அருவிதான் இது. இந்நீர்வீழ்ச்சி சுற்றுலா வருபவர்களுக்கும், மலையேற்றக்காரர்களுக்கும் மிகச்சிறந்த இடமாக உள்ளது.
இது அழகிய காட்சிகளையும், பசுமையான இடங்களையும் கொண்டுள்ளது. நீர்வீழ்ச்சிக்கு செல்ல சிறிது தூரம் வரை வனப்பகுதிக்குள் நடந்து செல்ல வேண்டும்.
அருவிக்கு செல்வதற்கு முன் நடந்து செல்லும் பாதைகளின் ஓரங்களில் காணப்படும் மரம், செடி, கொடிகள் கண்களுக்கு விருந்து.
பாறைகளை உரசிக்கொண்டு வந்து கொட்டும் அருவி இன்னும் இம்மலைக்கு அழகூட்டுகிறது. பறவைகளின் ஓசை, அருவி நீரின் இரைச்சல் ஆகியவை மனதிற்கு இன்னும் சந்தோத்தை கொடுக்கிறது.
இது ஒரு அழகான உல்லாச சுற்றுலாத்தலமாகவும், மலை ஏறுதல் பயிற்சிக்கு ஏற்ற இடமாகவும் விளங்குகிறது.
விடுமுறை நாட்களில் குடும்பத்துடன் சென்று அருவியில் குளித்து மகிழ்ச்சியாக இருக்க ஏற்ற இடமாக இருக்கும்.
எப்படி செல்வது?
கோவையிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.
விமானம் வழியாக :
கோவை விமான நிலையம்.
ரயில் வழியாக :
கோவை ரயில் நிலையம்.
எப்போது செல்வது?
அனைத்து காலங்களிலும் செல்லலாம்.
எங்கு தங்குவது?
கோவையில் பல்வேறு கட்டணங்களுடன் தங்கும் விடுதி வசதிகள் உள்ளன.
பார்க்க வேண்டிய இடங்கள் :
சாகசப் பயணம்.
மலையேற்றம்.
நீர்வீழ்ச்சி.
இதர சுற்றுலாத்தலங்கள்:
மேட்டுப்பாளையம் பிளாக் தண்டர்.
வால்பாறை.
கோவை குற்றாலம்.
ஈஷா யோகா மையம்.
வெள்ளியங்கிரி மலை.
மருதமலை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக