Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 17 அக்டோபர், 2020

சீனாவை கழட்டிவிட்ட நேபாளம்: இந்தியாவுக்கு ஆதரவா?

நேபாளத்தின் ராணுவ அமைச்சர் திடீரென மாற்றப்பட்டிருப்பது இந்திய ஆதரவு நிலைப்பாட்டை எடுக்கிறதா என சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

சில மாதங்களுக்கு முன்பு நேபாளம் தனது புதிய அரசியல் வரைபடத்தை வெளியிட்டிருந்தது. இதில் இந்திய எல்லைக்குள் உள்ள லிபுலேக், கலாபனி உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கப்பட்டிருந்தது. இதற்கு இந்திய தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.


மேலும், ராமர் நேபாளத்தில் பிறந்தவர் எனவும் அந்நாட்டின் பிரதமர் கே.பி.ஒலி கருத்து தெரிவித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். இதுபோன்ற பிரச்சினைகளால் இந்தியா-நேபாளம் இடையேயான உறவில் விரிசல் விழுந்தது. நேபாளம் சீனாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்தது. இதற்கிடையே இந்தியா-சீனா இடையே எல்லைப் பிரச்சினை நீடித்து வந்தது.


நேபாள எல்லையை ஆக்கிரமித்து சீனா சில கட்டிடங்களை கட்டியுள்ளதாக அண்மையில் நேபாள அதிகாரிகள் சோதனை மேற்கொண்டபோது தெரியவந்தது. இதையடுத்து அந்நாட்டின் இளைஞர்கள், எதிர்க்கட்சிகள் என பலரும் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சீனாவை வெளியேற்ற வலியுறுத்தி போராட்டங்கள் வலுத்தன.


இந்நிலையில், நேபாள அமைச்சரவையை அந்நாட்டு பிரதமர் கே.பி.ஒலி மாற்றியுள்ளார். இதில், ராணுவ அமைச்சர் பதவியில் இருந்து இஷ்வொர் பொகரெல் நீக்கப்பட்டுள்ளார். இவர் சீன ஆதரவு நிலைப்பாடு கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீனாவுக்கு ஆதரவளிப்பது மட்டுமல்லாமல் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாடு எடுத்தவர்தான் இஷ்வொர் பொக்ரெல். இந்திய ராணுவ தலைவர் மனோஜ் முகுந்த் நரவனே அடுத்த மாதம் நேபாளத்திற்கு பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த சூழலில் ராணுவ அமைச்சர் மாற்றப்பட்டிருப்பது, நேபாளம் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டு இந்தியாவுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க இருக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!