Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 30 ஜூலை, 2019

பாகிஸ்தானில் குடியிருப்பு பகுதியில் வீழுந்த ராணுவ விமானம் – 15 பேர் உயிரிழப்பு!


 

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



ராவல்பிண்டியில் குடியிருப்பு பகுதியில் வீழுந்த ராணுவ விமானம் – 15 பேர் உயிரிழப்பு!

பாகிஸ்தான் – ராவல்பிண்டி நகரில் குடியிருப்பு பகுதியொன்றில் சிறிய ரக ராணுவ விமானம் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழ்ந்துள்ளதாக மீட்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த விமானத்தில் பயணித்த ஐந்து பேரும், பொதுமக்கள் 10 பேரும் உயிரிழந்ததாக செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் இந்தச் சம்பவத்தில் 12 பேர் காயமடைந்துள்ளனர்.

அந்த விமானம் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்தில் சிக்கியதாகவும், விமானம் கீழே விழுந்ததும் தீப்பற்றி எரிந்ததாகவும் பாகிஸ்தான் ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். அந்த தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியுள்ளது.

பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகில் இருக்கும் ராவல்பிண்டி நகரில் ராணுவத் தலைமையகம் அமைந்துள்ளது. இந்த விபத்துக்கான காரணம் இதுவரை என்னவென்று தெளிவாக தெரிவிக்கப்படவில்லை.

விபத்து இடம்பெற்ற பகுதியில் பொது மக்கள் சூழ்ந்துகொண்டனர். அதில் சிலர் அழுது கொண்டிருக்கின்றனர் என ஏ.எஃப்.பி செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் எடுக்கப்பட்ட ஔிப்படங்களில் சில வீடுகளில் கரும்புகை படிந்துள்ளதையும், சில வீடுகள் இடிந்துள்ளமையும் தெரியவந்துள்ளது.

ஏ.எஃப்.பியின் செய்தியாளர் ஒருவர் ‘அந்த பகுதியில் உள்ள இடிபாடுகளில் இருந்து புகை இன்னும் வௌிவந்துக் கொண்டிருப்பதாகவும், வீட்டின் கூரை ஒன்றின் மீது விமானத்தின் பகுதியொன்று இருப்பதாகவும்’ தெரிவித்துள்ளார்.

2010 ஆம் ஆண்டு தனியார் விமான சேவை நிறுவனமான எயா ப்ளூவின் விமானம் ஒன்று இஸ்லாமாபாத்துக்கு அருகில் விபத்துக்குள்ளானதில் விமானத்தில் இருந்த 150 பேர் உயிரிழந்தனர். அதுவே பாகிஸ்தான் வரலாற்றில் இதுவரை நடைபெற்ற மோசமான விமான விபத்தாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  
உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன. மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  
உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக