Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

சனி, 28 செப்டம்பர், 2019

இன்றைய நிலை..??

Image result for ?
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


ஒரு கிராமத்தில் நடுத்தர வயது கொண்ட பாலன் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் இளமை பருவத்தில் இருந்தே துன்பத்தில் இருக்கும் பலருக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார்.

பிறகு வயது முதிர்ச்சியின் காரணமாக அவரால் யாருக்கும் உதவி செய்ய முடியாமல் போனது. அதற்காக அவர் தினமும், தன்னால் எதுவும் இந்நிலையில் யாருக்கும் உதவி செய்ய முடியவில்லையே என நினைத்து வருந்திக் கொண்டு இருந்தார்.

யாருக்கும் உதவி செய்ய முடியவில்லையே என மனம் வருந்தி எப்போதும் அழுது கொண்டே இருப்பார். அவர் மன வருத்தத்துடன் அழுதுக் கொண்டே இருந்ததால் அவருடைய கண்களில் சிறிது பார்வை குறைபாடு ஏற்பட தொடங்கியது.

அவரிடம் பணம் இல்லாத காரணத்தால் மருத்துவரையும் அணுகவில்லை. ஒரு முறை அவருடைய கிராமத்தில் இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. அதை அறிந்த அவர் அந்த முகாமிற்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர் பாலனிடம், ஐயா நான் சொல்வதை செய்தால் உங்களுடைய பிரச்சனையை நான் சரி செய்கிறேன் என்று கூறினார்.

அதற்கு பாலன் நான் என்ன செய்ய வேண்டும்? என்று கேட்டார். இனிமேல் நீங்கள் எக்காரணத்திற்கும் அழக்கூடாது என்று மருத்துவர் கூறினார்.

அதற்கு பாலன், பிறர் படும் இன்னல்களை கண்டு என்னால் உதவ முடியவில்லை என எண்ணி அவர்களுக்காக நான் அழுகிறேன்.

மற்றவர்கள் படும் துன்பத்தை கண்டு உதவவும் முடியவில்லை. அழுகவும் கூடாது என்றால், அந்தப் பார்வை இருப்பதை காட்டிலும் இல்லாமல் போகட்டும் என்றார். அந்தி சாயும் பொழுது வந்து விட்டது நான் புறப்படுகிறேன் என்று கூறிவிட்டு பாலன் முகாமில் இருந்து கிளம்பினார்.

பாலனின் பதில்கள் மருத்துவருக்கு வியப்பையே அளித்தது. ஆனால் இன்றைய நிலையோ..???? நாடு எவ்வளவு தான் முன்னேறினாலும், பணத்திற்காகவும் அடிப்படைத் தேவைகளுக்காகவும் கஷ்டப்படும் மக்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள். அவர்களுக்கு உதவி செய்யும் மனப்பான்மை இங்கு யாருக்கு உள்ளது?

நீதி :

மிகவும் தேவைப்படும் நேரத்தில் ஒருவருக்கு செய்யப்படும் உதவி சிறியதாக இருந்தாலும், அது உலகத்தை விடப் பெரியதாக மதிக்கப்படும். வாழ்வில் தேடித் தேடி நாம் சேகரித்து வைக்க வேண்டியது பணத்தை அல்ல, மனித உறவுகளை!.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக