>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    செவ்வாய், 10 செப்டம்பர், 2019

    கடவுளின் தரிசனம்..!

     Image result for கடவுளின் தரிசனம்..!

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com



      சோழபுரம் என்ற நாட்டு மன்னன் கடவுளின் தரிசனம் கிடைக்கவேண்டி பலகாலமாக தவம் இருந்தார். அவருடைய தவத்தின் பயனாக மன்னனுக்கு கடவுளும் தரிசனம் கொடுத்தார். அப்போது மன்னன் பெரும் மகிழ்ச்சி அடைந்தார்.

    அவர் முன் தோன்றிய கடவுள், என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் கூறினார். மன்னனும் தன்னுடைய விருப்பத்தை கடவுளிடம் வரமாக கேட்டார். எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ? அதேபோல, ராணியாருக்கும், மந்திரி மற்றும் அரச குடும்பத்தினருக்கும், நாட்டின் பிரஜைகள் என அனைவருக்கும் நீங்கள் காட்சி தரவேண்டும் என்ற வரத்தை கேட்டார்.

    அதற்கு கடவுள், இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும். இருந்தாலும் நீ வரத்தை கேட்டுவிட்டதால் நான் அதற்கு சம்மதிக்கிறேன். நீ வேண்டும் வரத்தினை உனக்கு தருகிறேன். அதோ தெரிகிறதே ஒரு உயர்ந்த மலை அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா.

    நான் அவர்களுக்கு காட்சி தருகின்றேன் என்று சொல்லிவிட்டு கடவுள் மறைந்தார். மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு தெரியப்படுத்தினார். உடனே அரச குடும்பத்தினரும், மக்களும் மன்னனுடன் மலையை நோக்கி புறப்பட்டார்கள்.

    அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினார்கள். சிறிது உயரம் சென்றவுடன். அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன. உடனே, மக்களில் நிறைய பேர் செம்பை மடியில் கட்டிக்கொண்டும், சிலர் பாறைகளை உடைத்து தலையில் வைத்துக் கொள்ளவும் ஆரம்பித்தனர்.

    மன்னன் அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது. இதெல்லாம் அதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை. அதைப் போட்டுவிட்டு அனைவரும் வாருங்கள் என்று உரக்க சப்தமிட்டார். அதற்கு அவர்கள், மன்னா இப்பொழுது இதுதான் தேவை கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது என்று ஒட்டுமொத்தமாக ஒலி எழுப்பி கூறினார்கள்.

    எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக்கொண்டு மன்னன் மலையேற துவங்கினார். மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் அங்கே சிறிது சிறிதாக வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன. அதை பார்த்த மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று மூட்டைகட்ட ஆரம்பித்தனர்.

    மன்னன் மறுபடியும் மக்களுக்கு விலைமதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்கப்போகின்றது. அதற்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன என்று உரைத்தான். அதற்கு அவர்கள், மன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட வெள்ளிக்கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே மக்கள் முடிந்த அளவு அள்ள துவங்கினர்.

    உங்கள் தலையெழுத்து என்று கூறிவிட்டு மன்னன் மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தார். இப்பொழுது சிறிதுதொலைவில் தங்கமலை தென்பட்டது. அதைப் பார்த்ததும் ராஜகுடும்பத்தினரில் பாதிபேர் அங்கே சென்றுவிட்டனர். இப்போது மீதி இருந்தவர்கள் ராணியும், மந்திரியும், தளபதியும், மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே.

    சரி வாருங்கள், செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக்கொண்டு முக்கால் வாசி மலையை கடந்தனர். பிறகு அங்கே வைரமலை தென்பட்டது. அதைப்பார்த்த ராணி முதற்கொண்டு அங்கே இருந்தவர்கள் ஓடிவிட, மலையின் உச்சியில் தன்னந்தனியாக மன்னன் நின்று கொண்டிருந்தார். அங்கே இருந்த கடவுள் மன்னனிடம் எங்கே உன் மக்கள்? என்றார்.

    மன்னன் தலை குனிந்தவராக, அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது. கடவுளே, என்னை மன்னியுங்கள் என்றார் மன்னன். அதற்கு கடவுள் நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும்.

    ஆசைகள் என்ற சேற்றை பூசிக்கொண்ட சிலர் செல்வம், சொத்து என்ற செம்பு, வெள்ளி, தங்கம், வைரம் போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர். இவற்றையெல்லாம் கடந்த நிலையில் இருப்பவரே எம்மை அடைவர் என்று சொல்லி கடவுள் மறைந்தார்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக