Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

செவ்வாய், 22 அக்டோபர், 2019

2 குழந்தைகளுக்கு மேல் பெற்றால் இந்த மாநிலத்தில் அரசு வேலை இல்லை!!

 


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


சிறு குடும்பங்கள் திட்டத்தின் கீழ் 2021ஆம் ஆண்டில் இருந்து இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு இல்லை என்று அசாம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் அறிவித்துள்ளார்.

அசாம் மாநில முதல்வர் சர்பானந்தா சோனோவால் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்பவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு இல்லை என்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

2021, ஜனவரி 1 ஆம் தேதிக்குப் பின்னர் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெறுபவர்களுக்கு இந்த சட்டம் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த முடிவுடன் மேலும் ஒரு முடிவையும் அரசு எடுத்துள்ளது.

அதாவது நிலங்கள் இல்லாத அசாம் மக்களுக்கு 3 பிகாஸ் அரசு நிலம் வழங்குவது மற்றும் வீடு கட்டுவதற்கு என்று அரை பிகாஸ் நிலம் வழங்குவது என்ற முடிவு எடுத்துள்ளனர்.

2017ஆம் ஆண்டில், சட்டமன்றத்தில் ஒரு சிறப்பு தீர்மானத்தை அசாம் அரசு நிறைவேற்றியது. ''அசாம் மக்கள் தொகை மற்றும் பெண்கள் அதிகாரப் பகிர்வு கொள்கை'' என்ற தீர்மானத்தில், இரண்டு குழந்தைகள் பெறுபவர்கள் மட்டுமே அரசு வேலை வாய்ப்புக்கு தகுதி உடையவர்கள், தற்போது பணியில் இருக்கும் அரசு ஊழியர்களும் இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது அந்த தீர்மானம் அமலுக்கு வந்துள்ளது.

இலவச நிலங்கள் வழங்கப்படும் என்று வெளியான அசாம் முதல்வரின் அலுவலக செய்திக்குறிப்பில், ''இலவசமாக வழங்கப்படும் நிலங்களை 15 ஆண்டுகளுக்கு விற்க முடியாது'' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக