>>
  • சாம்பிராணி அல்லது தூபம் தரும் பலன்கள் என்ன என்று தெரியுமா?
  • >>
  • குலதெய்வ சாபத்தை கண்டறிவது எப்படி? அதற்கு பரிகாரம் என்ன தெரியுமா ?
  • >>
  • இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • இனிப்பு மற்றும் கா‌ர கொழுக்கட்டை செய்வது எப்படி?
  • >>
  • இராகு-கேது தோஷங்களை நீக்கும் தென் காளஹஸ்தி – கத்திரிநத்தம் காளஹஸ்தீஸ்வரர் கோயில்
  • >>
  • 06-05-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 10 வகை பாயாசம்
  • >>
  • திருக்கொடியலூர் ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் கோவில், திருவாரூர்
  • >>
  • 28-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ஆயுள்விருத்தி தரும் பரங்கிப்பேட்டை ஆதிமூலேஸ்வரர் திருக்கோயில்...!
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 10 அக்டோபர், 2019

    லலிதா ஜுவல்லரி: தப்பியோடிய சுரேஷ் நீதிமன்றத்தில் சரண்!

     


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

    Follow Us:

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    தமிழ்நாட்டையே உலுக்கிய லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவத்தில் தேடப்பட்டுவந்த சுரேஷ் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.


    திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்துக்கு அருகேயுள்ள லலிதா ஜுவல்லரியின் சுவரை துளையிட்டு 28 கிலோ எடையுள்ள தங்க, வைர நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த விவாகரத்தில் காவல்துறையின் கவனம் வட மாநிலத்தவர்கள் பக்கம் திரும்பிய போது திருவாரூரில் மணிகண்டன் என்பரை காவல்துறையினர் கைது செய்து அவரிடமிருந்த லலிதா ஜுவல்லர்ஸுக்கு சொந்தமான 4.5 கிலோ எடையுள்ள நகைகளை மீட்டனர். அப்போது அவருடன் இரு சக்கர வாகனத்தில் சென்ற சீராதோப்பு சுரேஷ் என்பவர் காவல்துறையினரிடம் சிக்காமல் தப்பிச் சென்றார்.

    மணிகண்டனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்திவந்த அதே சமயம் சுரேஷை தேடும் பணிகளும் நடைபெற்றது. சுரேஷின் தாயார் கனகவல்லியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று திருவண்ணாமலை, செங்கம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுரேஷ் சரணடைந்தார். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டுவரும் நிலையில் காவல்துறையின் கையில் சிக்காமல் சீராதோப்பு சுரேஷ் நீதிமன்றத்தில் சரனடைந்துள்ளார்.

    இந்த கொள்ளைச் சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது திருவாரூர் முருகன் என்று காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் பல்வேறு கொள்ளைகளில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் முருகனை கைது செய்ய காவல்துறையினர் தீவிரம் காட்டிவருகின்றனர்.

    இருப்பினும் நகைகளோடு குற்றவாளி சிக்கியும் இதன்பின்னால் உள்ள நபர்களை அடுத்தடுத்து கைது செய்யமுடியாமல் காவல் துறையினர் திணறிவருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக