Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 5 நவம்பர், 2019

என்னென்ன சிறப்புகள் இதில்? முதல்வர் தொடங்கி வைத்த கால்நடை ஆம்புலன்ஸ் சேவை!



இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

Follow Us:

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com


அவசர சிகிச்சை அளிக்க உதவும் வகையில் விரிவுபடுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் சேவையை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார்.
கடந்த 2016ஆம் ஆண்டு திருச்சி, தஞ்சாவூர், காஞ்சிபுரம், நாமக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் கால்நடைகளுக்கு அவசர சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸ் சேவை தமிழக அரசால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்த திட்டத்தை பிற மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தும் வகையில், 22 இலவச கால்நடை ஆம்புலன்ஸ்களை முதலமைச்சர் பழனிசாமி இன்று தொடங்கி வைத்தார். இதற்காக ரூ.2.40 கோடி செலவிடப்பட்டுள்ளது.

 
சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த காணொலி நிகழ்ச்சியில் முதலமைச்சர் கலந்து கொண்டார். பின்னர் கால்நடை ஆம்புலன்ஸில் இருக்கும் அம்சங்கள் குறித்து கேட்டறிந்தார்.

அதற்கு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இந்த சேவையை பெற வேண்டுமெனில், கால்நடை வளர்ப்போர் 1962 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ள வேண்டும்.


இதற்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படாது. இந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஒரு கால்நடை மருத்துவர், கால்நடை உதவியாளர், ஓட்டுநர் ஆகியோர் இருப்பர்.

இந்த வாகனத்தில் குளிர்சாதன வசதி, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனர், ஜெனரேட்டர், ஹைட்ராலிக் லிப்ட், மருத்துவ உபகரணங்கள், மருந்துகள் இடம்பெற்றுள்ளன.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக