Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

சனி, 7 மார்ச், 2020

ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகளை கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாப்பாக வைத்திருங்கள்!!


ஸ்மார்ட்போன்கள், மடிக்கணினிகளை கொரோனா வைரஸிடம் இருந்து பாதுகாப்பாக வைத்திருங்கள்!!
ங்கள் தொலைபேசி அல்லது மடிக்கணினியில் பாக்டீரியா இருந்தால், நீங்கள் கைகளை கழுவினாலும் கூட உங்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியாது. அதனால்தான் உங்கள் கேஜெட்களை பாதுகாப்பது முக்கியம்.
கொரோனா வைரஸின் (Coronavirus) ஆபத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 1 லட்சத்தை எட்டியுள்ளது. அதேபோல இறப்பு எண்ணிக்கையும் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இருப்பினும், கொரோனா வைரஸ் (Coronavirus) தாக்குதலில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்து தொடர்ந்து பல உதவிக்குறிப்புகள் பகிரப்படுகின்றன. 
இந்திய அரசாங்கமும் ஆலோசனைகளை வழங்கி வருகிறது. குடிமக்கள் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது. COVID-19 பற்றி அனைவருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் பாதுகாப்பிற்காக தனிப்பட்ட சுகாதாரத்தையும் நீங்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். 
இதில், முகமூடிகள், கையுறைகள், கைகளை சுத்தமாக வைத்திருப்பது போன்ற தேவையான நடவடிக்கைகளை நீங்கள் எடுப்பீர்கள். ஆனால், உங்கள் ஸ்மார்ட்போன், லேப்டாப்பை அதே வழியில் கவனித்துக்கொள்கிறீர்களா? உங்கள் தொலைபேசி, மடிக்கணினி மற்றும் அனைத்து தனிப்பட்ட கேஜெட்களையும் கவனமாக பார்த்துக்கொள்வது மிகவும் முக்கியமாகும்.
அதாவது உங்கள் மொபைல் போன்கள் பாக்டீரியா மற்றும் வைரஸ்கள் பரவுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம் என உலகளாவிய சுகாதார ஆராய்ச்சி (Global Health Research) அறிக்கைகள் பலமுறை எச்சரித்துள்ளன. உங்கள் தொலைபேசி அல்லது மடிக்கணினியில் பாக்டீரியா இருந்தால், நீங்கள் கைகளை கழுவினாலும் கூட உங்களை தொற்றுநோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள முடியாது. அதனால்தான் உங்கள் கேஜெட்களை பாதுகாப்பது முக்கியம்.
10 முக்கிய உதவிக்குறிப்புகள்:
கால்சட்டையின் ஒரே பாக்கெட்டில் ஸ்மார்ட்போனையும், அதனுடன் கைக்குட்டையையும் வைக்க வேண்டாம்.
தொலைபேசி அழைப்புகளைச் செய்ய எப்போதும் ஹெட்போன்களை பயன்படுத்துங்கள். இது தொலைபேசியிலிருந்து உங்கள் முகத்திற்கு வைரஸ் வருவதற்கான வாய்ப்புகளை குறைக்கும்.
இணைய கஃபேக்கள் அல்லது அலுவலகங்களில் பொது கணினிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும். அவசர வேலைக்கு நீங்கள் பொது கணினிகளைப் பயன்படுத்த விரும்பினால், கிருமி நாசினிகள் பயன்படுத்துங்கள்.
உங்கள் ஸ்மார்ட்போன் வாட்டர் ப்ரூப் (IP68) இருந்தால், சோப்பு மற்றும் தண்ணீரை மூலம் சுத்தப்படுத்த வேண்டும்.
சுத்தம் செய்வதற்கு முன் உங்கள் ஸ்மார்ட்போனை அணைக்க மறக்காதீர்கள். ஸ்மார்ட்போனை சுத்தம் செய்ய கிருமி நாசினிகள் (Sanitizer), அல்ஹோகல் போன்ற கிளீனர்களை பயன்படுத்தக்கூடாது. இருப்பினும், நீங்கள் கால் செய்யும் போது SARS-CoV-2 வைரஸைக் கொல்ல, உங்களுக்கு குறைந்தபட்சம் 60% ஆல்கஹால் அடிப்படையிலான தீர்வு தேவை.
மடிக்கணினியில் கிருமி நாசினிகள் (Sanitizer) வைத்து ஒவ்வொரு மூலையையும் சுத்தம் செய்ய பஞ்சு அல்லது திசு பேப்பர் (Tissue Paper)
பயன்படுத்துங்கள். அந்த சமயத்தில் மடிக்கணினியை அணைக்க மறக்காதீர்கள். கேஜெட்களை சுத்தம் செய்ய கிருமி நாசினிகள் அல்லது ஆல்கஹால் சார்ந்த பொருட்களை பயன்படுத்தக்கூடாது.
உங்கள் ஹெட்ஃபோன்களையும் (Headphones) சுத்தம் செய்ய மறக்காதீர்கள். அதை சுத்தம் செய்ய நீங்கள் எந்த கிருமி நாசினிகளையும் பயன்படுத்தலாம்.
கேஜெட்டை சுத்தம் செய்ய எந்த வகையான திரவ கிளீனரையும் பயன்படுத்த வேண்டாம். ஏனெனில் இது கேஜெட்டின் அசல் நிறத்தை கெடுக்கக்கூடும்.
உங்கள் தொலைபேசி அல்லது மடிக்கணினியை சுத்தம் செய்தபின், எப்போதும் உங்கள் கைகளை சோப்பு மற்றும் தண்ணீரில் சுத்தம் செய்யுங்கள்.
உங்கள் தனிப்பட்ட கேஜெட்களை ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தவறாமல் சுத்தம் செய்யும் பழக்கத்தை உருவாக்குங்கள்.
வேறொருவரின் தொலைபேசி அல்லது மடிக்கணினியைத் தொடாதீர்கள் மற்றும் உங்கள் கேஜெட்டை மற்றவர்களுக்கு வழங்குவதைத் தவிர்க்கவும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!