Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

செவ்வாய், 20 அக்டோபர், 2020

மீண்டும் வருகிறதா ஊரடங்கு; உயர்மட்ட கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியது என்ன?

 

 

கோவிட்-19 நோய்ப்பரவல் தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. தற்போது வரை வைரஸ் தொற்று நீங்காமல் தொடர்ந்து பரவிக் கொண்டிருக்கிறது. இந்த சூழலில் பிரதமர் மோடி தலைமையில் கோவிட்-19 தொடர்பான உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர், பிரதமரின் முதன்மை செயலாளர், நிதி ஆயோக் உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். அதில், இந்தியாவில் கொரோனா பாதிப்பின் நிலை, தடுப்பூசி தயாரிப்பு, விநியோகம் உள்ளிட்டவை குறித்து பிரதமர் எடுத்துரைத்துள்ளார்.

இதையடுத்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சர்வதேச சமூகத்திற்கு உதவும் வகையில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி, மருந்துகள், தொழில்நுட்ப வசதிகள் உள்ளிட்டவற்றில் நமது நாடு அதிக முக்கியத்துவம் செலுத்த வேண்டும். தடுப்பூசி விரைவாக பயன்பாட்டிற்கு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்க வேண்டும்.

இந்தியாவில் மூன்று தடுப்பூசிகள் இறுதிக்கட்ட பரிசோதனையில் இருக்கின்றன. அதாவது இரண்டு தடுப்பூசிகள் இரண்டாம் கட்ட பரிசோதனையிலும், ஒரு தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையிலும் உள்ளன. இந்த விவகாரத்தில் இந்திய விஞ்ஞானிகள் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த விஞ்ஞானிகளுடன் இணைந்து ஆராய்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.


இதில் ஆப்கானிஸ்தான், பூடான், வங்கதேசம், மாலத்தீவுகள், மொரிசியஸ், நேபாளம், இலங்கை ஆகிய நாடுகள் அடங்கும்.இந்த சூழலில் வங்கதேசம், மியான்மர், கத்தார், பூடான் ஆகிய நாடுகள் மருத்துவ பரிசோதனைகளை இந்தியாவில் மேற்கொள்ள அனுமதி கேட்டுள்ளனர். இவை ஆரோக்கியமான விஷயமாகும். சர்வதேச சமூகத்திற்கு பயனளிக்கும் வகையில் நமது செயல்பாடுகள் இருக்க வேண்டும்.

எனவே நமது எல்லைக்குள் குறுகிய வட்டத்திற்குள் அமைத்துக் கொள்ளக் கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிப்பது தொடர்பாக ஆலோசிக்கப்படவில்லை என்று தெரிகிறது. எனவே பொதுமக்கள் உரிய சுகாதார கட்டுப்பாடுகளுடன் வாழப் பழகி கொள்வதே சரியான வழி. இந்நிலையில் வருடாந்திர கிராண்ட் சேலஞ்சஸ் மீட் (Grand Challenges Annual Meeting 2020) இன்று நடைபெறவுள்ளது.

இதில் வீடியோ கான்பரன்சிங் மூலம் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். அதில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டம் கொரோனா பரவலுக்கு பிறகு உலகம் சந்திக்கும் சவால்கள், செய்ய வேண்டிய விஷயங்கள் உள்ளிட்டவற்றிற்கு தீர்வு காணும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு: படங்கள் அனைத்தும்  மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே

இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!