மாலை வேளையில் காபி, டீ குடிக்கும் போது, ஸ்நாக்ஸ் ஏதாவது சாப்பிட பலருக்கும் தோன்றும். அப்போது நாம் பெரும்பாலும் பஜ்ஜி, வடை, போண்டா, பக்கோடா என்று தான் செய்து சாப்பிடுவோம். ஆனால் நீங்கள் சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட விரும்புகிறீர்களா? அப்படியானால் கேரளா ஸ்பெஷல் பழம்பொரியை செய்து சுவையுங்கள். இது ஒரு இனிப்பு பலகாரம். முக்கியமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் இருக்கும்.
உங்களுக்கு கேரளாவில் மிகவும் பிரபலமான பழம்பொரி ரெசிபியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே பழம்பொரி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* நேந்திரம் பழம் - 2 (நன்கு கனிந்தது)
* மைதா - 1 கப்
* அரிசி மாவு - 1/4 கப்
* பேக்கிங் சோடா - 1 சிட்டிகை
* உப்பு - 1 சிட்டிகை
* மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
* ஏலக்காய் - 2 (பொடி செய்து கொள்ளவும்)
* சர்க்கரை - 3 டேபிள் ஸ்பூன்
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, அரிசி மாவு, பேக்கிங் சோடா, உப்பு, மஞ்சள் தூள், ஏலக்காய் பொடி, சர்க்கரை போட்டு, சிறிது நீர் சேர்த்து, சற்று கெட்டியாக பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் நேந்திரம் பழத்தை நீள நீளமாக சீவிக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.
* எண்ணெய் சூடானதும், வாழைப்பழ துண்டுகளை மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பழம்பொரி தயார்!
குறிப்பு: படங்கள் அனைத்தும் மாதிரிக்காக / உதாரணத்திற்காக வழங்கப்படுபவையே
இது போன்ற பல்வேறு செய்திகள், கதைகள் ,பொழுதுபோக்கு துணுக்குகள்,மின்னணு புத்தகங்கள் போன்றவற்றை பெற எங்கள் டெலிகிராம் சேனல்-லில் இணைந்து கொள்ளவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக