![]()
பெயர் அறியப்படாத நபர் ஒருவர் சாதாரணமாக 35 டாலருக்கு (ரூ.2500 மதிப்பு) ஒரு கிண்ணம் வாங்கினார். அது உலகிலேயே மிகவும் அரிதான சீன கலைப்பொருள் என பின்னாளில் அறியவந்தது. உலகில் இப்போது இந்த வகை கிண்ணம் சிலவன தான் இருக்கிறதாம். 14ம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட இதன் முழு மதிப்பு 3.6 கோடி என அறியப்படுகிறது.ரூ.2500க்கு வாங்கப்பட்டக் கிண்ணத்தின் மதிப்பு ரூ.4 கோடி ஆனது, அப்படி என்ன இருக்கு அதுல?
நாம் எல்லாம் கீழே கிடந்து காசு எடுத்தாலே
அதை அதிர்ஷ்டம் என்போம். ஆனால் இங்கு ஒருவருக்கு சீன கலை பொருளே அதிர்ஷ்டமாக கிடைத்துள்ளது.
அமெரிக்காவில் ஒரு மனிதர் கடைக்கு சென்று அங்கு ஒரு அழகிய கிண்ணத்தை 35 டாலர் கொடுத்து
வாங்கியுள்ளார். பிறகுதான் தெரிந்தது அந்த பீங்கான் கிண்ணம் 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது. அதன் மதிப்பு
சுமார் 3 முதல் 5 லட்சம் டாலர்கள் வரை இருக்கும் என கூறப்படுகிறது. இது ஒரு அரிய வகை
சீன பொருளாகும்.
6 அங்குலமுள்ள அந்த வெள்ளை கிண்ணத்தில் நீல நிற பூக்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன.
இந்த கிண்ணம் சோதேபிஸில் ஏலத்திற்கு விடப்பட உள்ளது.
ஒரு பழங்கால ஆர்வலர் நியூ ஹேவன் பகுதியில் உலாவி கொண்டிருக்கும்போது அந்த கிண்ணத்தை
கண்டார். அப்போது அதில் ஏதோ ஒரு சிறப்பு இருப்பதாக அவர் நினைத்தார். எனவே அந்த கிண்ணத்தை
அவர் சோதனை செய்து பார்த்தார். பிறகுதான் விலை மதிப்பற்ற ஒரு சீன பொக்கிஷம் அது என்பதை
அந்த ஆய்வாளர் கண்டறிந்தார்.
உலகில் அறியப்பட்ட கிண்ணங்களில் இது போல ஏழு துண்டுகள் மட்டுமே உள்ளன. சேத்தோபியின்
முக்கியமான சீன கலை ஏலத்தின் ஒரு பகுதியாக மார்ச் 17 அன்று இது நியூயார்க்கில் ஏலத்திற்கு
விடப்பட உள்ளது. இதன் உரிமையாளர் இதை 35 டாலருக்கு வாங்கியுள்ளார். அதன் பின்னர் இதன்
மதிப்பீட்டை அறிந்த பிறகு அவர் இதன் புகைப்படம் மற்றும் விவரங்களை ஏல வல்லுநர்களுக்கு
மின்னஞ்சல் செய்துள்ளார்.
ஏல இல்ல வல்லுநர்களான ஏஞ்சலா மெக்டீர் மற்றும் ஹேங் யின் இருவரும் இது போல பல மின்னஞ்சல்களை
பெறுகின்றனர். ஆனால் அவையெல்லாம் உண்மையாக இருப்பதில்லை. ஆனால் இந்த கிண்ணத்தை நேரில்
பார்த்த போது அது உண்மை என அவர்கள் உறுதி செய்தார்கள்.
இதுக்குறித்து அவர்கள் கூறும்போது ”நாங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு பொருளை பார்க்கிறோம்
என்பது எங்கள் இருவருக்குமே உடனடியாக இது முக்கியமான பொருள் என தெரிந்தது” என்று சோதேபியின்
மூத்த துணை தலைவரும் சீன கலை துறையின் தலைவருமான மெக்டீர் கூறியுள்ளார். “அந்த ஓவியத்தின்
பாணி, கிண்ணத்தின் வடிவம், நீல நிறம் ஆகியவை அனைத்தும் 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை
எனும் போது அந்த கிண்ணம் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது”
அந்த கிண்ணம் விஞ்ஞான சோதனை எதுவும் செய்யப்படவில்லை. பயிற்சி பெற்ற நிபுணர்கள் தங்கள்
கண்கள் மற்றும் கைகளை பயன்படுத்தியே அதை உண்மை தன்மையை கண்டறிந்தனர். அந்த கிண்ணம்
தொடுவதற்கு மிகவும் மென்மையாக இருந்தது. அதன் மெருகூட்டல்கள் கூட மென்மையாக இருந்தது.
அதன் வண்ணம் மற்றும் வடிவமைப்புகள் அந்த காலத்தின் தனித்துவத்தை காட்டுவதாய் இருந்தது.
”சீனாவின் ஆரம்பக்கால மிங் கால தயாரிப்பாக இது உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதற்கான
அனைத்து அம்சங்களும் அந்த கிண்ணத்தில் உள்ளது” என்று மெக்டீர் கூறினார்.
1400 களின் முற்பகுதியில் மிங் வம்சத்தின் மூன்றாவது அரசரான யோங்கிள் பேரரசின் ஆட்சி
காலத்தில் இந்த கிண்ணம் செய்யப்பட்டுள்ளது என மெக்டீரும் ஈனும் தீர்மானித்தனர். மேலும்
இது யோங்கிள் அரசின் நீதிமன்றத்திற்காக செய்யப்பட்ட கிண்ணம். இது ஜிங்டெஷன் நகரில்
உள்ள பீங்கான் சூளையில் யோங்கிள் நீதிமன்றத்திற்காக புதிய பாணியில் இது செய்யப்பட்டுள்ளது.
இது ஒரு மிகச்சிறந்த யோங்கிள் தயாரிப்பு என சோதேபிஸ் கூறுகிறது.
இந்த கிண்ணமானது தாமரை மொட்டு வடிவத்தில் செய்யபட்டுள்ளது. அதன் கீழே மெடாலியன் மற்றும்
மலர்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அதன் வெளிப்புறத்தில் தாமரை, பியோனி, மற்றும் மாதுளை
பூ ஆகிய மலர்கள் உள்ளன. வெளிப்புறமும் உட்புறமும் சில சிக்கலான வடிவங்களை கொண்டுள்ளன.
உலக அளவில் இது போல இது வரை ஆறு கிண்ணங்கள் மட்டுமே உள்ளதாக அறியப்படுகிறது. மேலும்
அவற்றில் பெரும்பாலானவை அருங்காட்சியகத்தில் உள்ளன என்று மெக்டீர் கூறியுள்ளார். அவற்றில்
எந்த கிண்ணமும் அமெரிக்காவில் இல்லை. அவை தைவானில் உள்ள தைப்பேயில் தேசிய அரண்மனை அருங்காட்சியகத்தில்
இரண்டு கிண்ணங்கள், லண்டனில் உள்ள அருங்காட்சியகத்தில் இரண்டு கிண்ணங்கள் மற்றும் ஈரானின்
தேசிய அருங்காட்சியகத்தில் ஒன்று என உள்ளன.
இந்த கிண்ணத்தின் தனித்துவம் அறியாத ஒரு குடும்பத்தின் வழியாகவே இது அமெரிக்காவிற்கு
வந்திருக்க வேண்டும் என மெக்டீர் கூறுகிறார். இந்த விஷயம் இன்னும் வியப்பாகவே உள்ளது.
இப்படி கூட பொக்கிஷங்கள் கிடைக்கும் என நாங்கள் நினைக்கவில்லை என மெக்டீர் கூறுகிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக