தேவையான பொருட்கள்:
- சேனைக்கிழங்கு – 100 கிராம்
- அரிசி – ஒரு டீஸ்பூன்
- மிளகு – 20
- கடுகு, வெந்தயம் – தலா அரை டீஸ்பூன்
- மோர் – 250 மில்லி
- எண்ணெய் – ஒரு டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
- வாணலியில் எண்ணெய் விட்டு மிளகை வறுத்துக்கொள்ளவும். மிளகுடன் அரிசி சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். சேனைக்கிழங்கை தோல் சீவி, பொடியாக நறுக்கி வேகவிடவும்.
- மோருடன் உப்பு, அரைத்த மிளகு – அரிசி கலவை, வேகவைத்த சேனையையும் சேர்த்து, லேசாக கொதிக்க விட்டு… கடுகு, வெந்தயத்தை எண்ணெயில் தாளித்துச் சேர்த்து இறக்கவும்.
நன்மைகள்:
- மிளகில் உள்ள வேதிப் பொருட்கள் அனைத்தும் நம்மை நோயிலிருந்து காக்கும் வேலையைச் செய்கிறது மேலும் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
- மோரில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், புரோட்டீன் மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. அதில் வைட்டமின் பி, அதாவது ரிபோப்ளேவின் தான் உணவை எனர்ஜியாக மாற்றவும், செரிமானத்தை அதிகரிக்கவும், ஹார்மோனை சீராக சுரக்கவும் உதவி புரிகிறது.
- மருத்துவம் நிறைந்த பொருளாகும்.
- மிளகு நாம் அன்றாட வாழ்வில் சேர்த்துக் கொள்ளக் கூடிய ஓர் மருத்துவம் நிறைந்த பொருளாகும் இதை அண்டிபயோட்டிக் என்றும் சொல்லலாம்.
- ஞாபக சக்தி – நரம்புத்தளர்ச்சி, கை கால் நடுக்கம், உதறல், ஞாபக சக்தி குறைபாடு, முதுமையில் உண்டாகும் மாறாட்டம், இவற்றிற்கு நல்ல மிளகு சிறந்த மருந்தாகும்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக