Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

திங்கள், 25 பிப்ரவரி, 2019

பாஸ் (எ) பச்சோந்தி உயர் அதிகாரி.





சாமி வரம் கொடுத்தாலும் அத பூசாரி நமக்கு கொடுக்காது என்பது 
பழமொழி இத கிட்டத்தட்ட, வேலை பார்க்கும் அனைவரும் அனுபவித்து 
இருப்போம். சாமிங்குறது முதலாளி, பூசாரி என்பது உயரதிகாரி. 
இந்த வருசம்தான் நமக்கு நல்ல லாபம் கிடச்சிருக்கே, நம்ம 
ஊழியர்களுக்கு ஏதாவது, ஊக்கத்தொகை கொடுக்கலாமான்னு நம்ம 
மேலதிகாரிங்ககிட்ட முதலாளி கேட்டா, “அய்யய்யோ 
அப்படியெல்லாம் முடிவெடுக்காதீங்க முதலாளி, பிறகு,  வருசம் 
வருசம் அதை எதிர்பார்ப்பாங்க என்று தன்னுடைய செக்கை கையில் 
வாங்கியவுடன் கடைமையுணர்வை கண்டெய்னர் கண்டெய்னராக காட்டும் 
கயவர்கள்.


அதுவும் இந்த MNC   வேல பாக்குறது இருக்கே, அப்பப்பா.......... நாக்கு 
தள்ளிரும், அரை மணி நேரம் பேசுவானுங்க, ஆனா ஒன்னுமே விளங்காது. 
கடைசியா அங்க அங்க ஒன்னு, ரெண்டு வார்த்தைகளை வச்சு, 
ஓ இதத்தான் தடியன் சொல்லவருகிறான்னு ஒரு முடிவுக்கு வரனும். 
எதுவும் புரியல என்றாலும் புரிஞ்ச மாதிரி தலை ஆட்டவேண்டும்  
ஆர் யு காட் மை பாய்ண்ட்னு சொன்னவுடனே”, “எஸ் சார் காட் 
யுவர் பாய்ண்ட் ஸார்னுபோஸ் பட ஹீரோ ஸ்ரீகாந்த் மாதிரி வெரப்பா 
நின்னுசொல்லனும் இல்லன்னா, புரியவைக்கிறேன்னு சொல்லி, 
பக்கத்துல உட்கார வச்சு, மூஞ்சில பூரா எச்சி துப்பி வச்சிருவானுங்க.


ரெண்டு  இந்திய டாக்டரும் சேர்ந்து ஒரு மூளை சம்பந்தமான 
ஆராய்ச்சியில் ஈடுபட்டு, கிடைத்த ரிசல்டை ஒரு மனிதனுக்கு பொருத்தி, 
சோதனை செய்து பார்க்க அவங்க இரண்டு பேரும் கெஞ்சாத ஆள் 
இல்லை, எவனும் பரிசோதனைக்கு ஒத்துக் கொள்ளவேயில்லை. ஒரு 
இந்திய  டாக்டருக்கு ரொம்ப கோவம் வந்து, என்னுடைய மூளையை எ
டுத்துக் கொண்டு நீ சோதனையை ஆரம்பம் செய். வெற்றி நமக்கே, வீர 
வேல், வெற்றி வேல் என கூறிக்கொண்டே, ஆபரேசன் தியேட்டருல போயி 
படுத்துக்கிட்டார். இன்னொரு  இந்திய டாக்டர், அறுவை  சிகிச்சை 
மூலமாக மூளைய வெளியில் எடுத்து, ஆராய்ச்சு கூடத்தில் வைத்துவிட்டு 
திரும்பி வந்து பார்த்த போது, இன்னொரு இந்திய  டாக்டரை 
காணவில்லை!!!!!!!!!!!!!!!. இந்திய டாக்டருக்கு ஒரே படபடப்பாகி, 
ஊர் முழுக்க தேடிப்பார்த்தார், கண்டே பிடிக்கமுடியவில்லை.


ஒரு வாரம் ஒரு மாதம் ஆனது ஒரு மாதம் ஒரு வருடம் ஆனது, 
டாக்டரால் அவரது நண்பனை கண்டுபிடிக்க இயலவில்லை. ஒரு நாள்
பஸ்ஸுக்காக, பஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கும் போது, தெய்வ 
அதிஷ்டமாக அவரது நண்பரை கண்டுபிடித்துவிட்டார். ஆனால் இந்திய 
டாக்டரால் நம்ப முடியாத மாற்றம். மூளையோட இருக்கும் போதே, பரதேசி மாதிரி 
இருப்பான். இப்ப என்னடான்னா, கோர்ட், சூட் எல்லாம் போட்டு 
அஜித்துக்கு போட்டியா வந்து நிக்கிறானேன்னு ஒரே ஆச்சர்யம்.


இதுக்கு மேல நாம கேக்கலன்னா அவ்வளவுதான் மண்டயே 
வெடிச்சுடும் என்று எண்ணி, தன் நண்பனிடம் கேட்டான் ஆமா நண்பா, 
நான் தான் உன் மூளையை எடுத்துவிட்டேன், ஆனாலும் நீ, 
எப்படி? அதுவும் இப்படி?........... என்று இழுக்க. அது ஒன்னு இல்ல நண்பா, 
நீ மூளையை எடுத்த உடனே நான் ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனிக்குள்ள 
போனேன். ஹிந்தி ல பேசினேன். உடனே 
என்ன புராஜக்ட் மேனஜராக்கிவிட்டார்கள் என்றாராம்.


இது ஒரு நகைச்சுவைக்கு சொல்லப்பட்டாலும், கிட்டத்தட்ட இங்க 
இருக்கும் புராஜக்ட் மேனஜர்களுக்கு அப்படியே அச்சு அசலா செஞ்சு 
வச்சமாதிரியே பொருந்தும். மீட்டிங்னு சொல்லி கூட்டிகொண்டு 
போவானுங்க, இந்த வாரம் அத முடிக்கனும், இத ஆரம்பிக்கனும்னு, மீட்டர், 
மீட்டரா பேசுவானுங்க. ஆனா, அந்த வாரம் மைக்ரோ மீட்டர் அளவுக்கு 
கூட வேலை ஆகியிருக்காது. மினிட்ஸ் ஆப் மீட்டிங்கில் பத்து வாரமும் 
ஒரே மேட்டர்தான் இருக்கும், தேதி மட்டும் மாற்றம் ஆகியிருக்கும் 
அவ்வளவுதான்.



போன ஜென்மம் செஞ்ச புண்ணியத்துல எப்போதாவது ஒரு நாள் லீவு 
கிடைக்கும், அன்னைக்கும் அரை நாள் வேலை வச்சு, ஆறு வருச 
புராஜெக்டைஅந்த அரை நாளில் முடிப்பானுங்க. அதுவும் அந்த 
லீவு ஞாயிற்றுக் கிழமை வந்து இப்படி ஒரு சம்பவம் நடந்துச்சுன்னா,
நாங்க கேக்குற கேள்விய யாராச்சும் அவங்க வீடு ஆளுங்க கிட்ட 
சொன்னாங்க அவன் பொண்டாட்டி, அம்மா, பாட்டி, கொள்ளுப்பாடி, 
எள்ளுப்பாட்டிக்கிட்ட ......தொங்கிருவாளுங்க!!!!!!, ................தொங்கிருவாளுங்க!!!!! 
அப்படி இருக்கும் வார்த்தைகளின் வீரியம்.


முதலாளியே, லீவுக்கு கையெழுத்து போட்டு மெமோ அனுப்பிய பின்னாடி, 
இந்த உயர் அதிகாரிகள் இந்த மாதிரி செஞ்சா, நாங்க அவன் ஒன்னுக்கு 
போகுற இட த்துல கட்டிவர,.......ன்னு காசுவெட்டி போடுறோமே, நாங்க 
செய்யுறது தப்பா? நீங்க சொல்லுங்க தப்பா?. அதுவும் பாதி நாள் வேலை 
வச்சுட்டு, அவன் மட்டும் வீட்டுல இருப்பான்.


அது ஒரு கன்ஸ்ட்ரக்சன் ஆபீஸ், புதுசா சைட் இஞ்சினியர் வேலைக்கு 
வந்த டிரைனி பசங்க மூணு பேரு, மேனஜரை பார்க்க வெளியில் நின்று 
கொண்டிருந்தார்கள். ஆனால், அங்கு வேலை செய்யும் மற்றவர்கள் 
எல்லோரும்ஏதோ குசு, குசுவென பேசிக்கொண்டிருந்தார்கள். சிலர் காலில்
வெந்நீர் ஊற்றியவாரு ஒரு இடத்தில் நிற்காமல், அங்கு ஓடுவது இங்கு
ஓடுவதுமாக இருந்தார்கள். ஒருத்தன் போனில் யாரிடமோ பேசிய படி 
அச்சச்சோ, இப்ப எப்படி இருக்குது நிலைமை?, “ஸ்ஸ்ஸ்ஸ் 
ஓஹோ”. பார்த்தால் ஏதோ அசம்பாவிதம் நடந்துவிட்டது என்பதை 
உணர முடிந்தது.


மூணு பேருக்கும் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் 
கொண்டிருந்தார்கள். டேய் ரவி எல்லோரிடமும் கலெக்ட் பண்ணு, 
முதல்லபிளானிங்க் டிப்பார்ட்மெண்டுல இருந்து ஆரம்பி என
கட்டளையிட்டுக் கொண்டே, டெண்சனோடு, கையை பிசைந்து 
கொண்டிருந்த அவரிடம், அந்த மூன்று 
பேரும் தங்களை அறிமுகப்படுத்திக்  கொண்டபின்பு,“என்ன சார் என்ன 
ஆச்சு?, ஆபிஸே பூகம்பம் வந்த பீலிங்ல இருக்கு? என்று ஒருவன் கேட்க.
ஒன்னுமில்ல தம்பி, நம்ம புராஜக் மேனஜரை கடத்திட்டானுங்க, 
நம்ம குவாண்டிட்டி சர்வேயர் நியாயமா போட்ட பில்ல, அந்த 
காண்ராக்ட்காரனுக்கு கொடுக்காம, கமிஷன் பேசினாரு, 
அதுதான் சமயம் பார்த்து தூக்கிட்டானுங்கஓ காட், என்ன சார் 
சொல்லுறீங்க? இப்படியெல்லாமா நடக்கும்? 
சரி இப்ப கடத்துனவங்க என்னதான்சொல்லுறாங்க?


என்ன செய்யுறதுன்னே புரியல, அத பத்தின டிஸ்கசன்லதான் 
நாங்க இருக்கோம். கடத்துனவங்க அவர விடுவிக்க 5 கோடி ரூபாய் 
கேட்குறாங்க, அப்படி கொடுக்கலன்னா, உடம்பு பூரா பெட்ரோலை 
ஊற்றி, தீ வைத்து கொளுத்திடுவானுங்களாம்?. அதனால எங்களால 
முடிஞ்ச அளவுக்கு நாங்க இங்க இருக்குறவங்ககிட்ட கலெக்ட் 
பண்ணிக் கொண்டு இருக்கோம். உங்களால முடிஞ்சதை நீங்களும் 
கொடுங்க”.


ம்ம்ம் நாங்க புதுசு சார். எங்களுக்கு எவ்வளவு கொடுக்கனும்னு 
தெரியலை. எல்லோரும் எவ்வளவு கொடுக்குறாங்கன்னு சொன்னீங்கன்னா 
நாங்களும்,அதே அளவு கொடுக்கிறோம். ஆவரேஜா எல்லோரும் எவ்வளவு 
கொடுகுறாங்க சார்?.


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


*


ஒரு லிட்டர் பெட்ரோல்.


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக