கம்பு
அடை!
தேவையான பொருட்கள்
கம்பு ஒரு கிண்ணம்
இட்லி அரிசி+பச்சரிசி இரண்டும் சேர்ந்து அரைக்கிண்ணம்
துவரம்பருப்பு+கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து முக்கால் கிண்ணம். துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை மொறுமொறுவென்றும் நிறமாவும் வரும். என்றாலும் கம்பு சேர்ப்பதால் கொஞ்சம் நிறம் கம்மி தான்.
4 மி.வத்தல்+பச்சை மிளகாய் 2
உப்பு, பெருங்காயத் தூள், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) அல்லது சின்ன வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். அவரவர் விருப்பம் போல்.
கருகப்பிலை, கொத்துமல்லி. வேறு ஏதேனும் கீரையைக் கூடப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். நான் ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்தேன்.. காலை சுமார் பத்து மணி அளவுக்கு ஊற வைத்தேன். மாலை நாலு மணி சுமாருக்கு அரைத்தேன். இரவுக்கான உணவு தயார். எந்தச் சிறு தானியம் போட்டாலும் கொஞ்சம் போல் இட்லிப் புழுங்கல் அரிசியும், பச்சரிசியும் சேர்த்தால் செய்வதற்கு எளிது.
இதே போல் கம்பில் தோசையும் வார்க்கலாம்.
கம்பு+புழுங்கல் அரிசி+பச்சரிசி இரண்டு பங்கு கம்புக்கு புழுங்கலரிசியும், பச்சரிசியுமாய்க் கலந்து ஒரு பங்கு. முக்கால் கிண்ணம் உளுத்தம்பருப்பு, இரண்டு டீஸ்பூன் வெந்தயம். கம்பைத் தனியாக ஊற வைக்க வேண்டும். புழுங்கலரிசி+பச்சரிசியை ஒன்றாக ஊற வைத்துக் கொண்டு வெந்தயத்தையும் உளுத்தம்பருப்பையும் சேர்த்து ஊற வைக்கவேண்டும். கம்பை முதலில் அரைத்துக் கொண்டு பின்னர் அரிசிகளைச் சேர்த்து அரைக்க வேண்டும். நல்ல நைஸாகவே அரைக்கலாம். பின்னர் உளுத்தம்பருப்பு+வெந்தயம் போட்டதை அரைக்க வேண்டும். இட்லி, தோசைக்கூ அரைப்பது போல் உளுத்தம்பருப்பை அரைக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உப்புப் போட்டுக் கரைத்து வைத்துப் புளிக்க விட வேண்டும். இட்லி அல்லது தோசை எது வேண்டுமானாலும் செய்யலாம். சட்னி, சாம்பார், கொத்சு என எதுவேண்டுமானாலும் தொட்டுக்கலாம்.
தேவையான பொருட்கள்
கம்பு ஒரு கிண்ணம்
இட்லி அரிசி+பச்சரிசி இரண்டும் சேர்ந்து அரைக்கிண்ணம்
துவரம்பருப்பு+கடலைப்பருப்பு+உளுத்தம்பருப்பு மூன்றும் சேர்ந்து முக்கால் கிண்ணம். துவரம்பருப்புக் கூட இருந்தால் அடை மொறுமொறுவென்றும் நிறமாவும் வரும். என்றாலும் கம்பு சேர்ப்பதால் கொஞ்சம் நிறம் கம்மி தான்.
4 மி.வத்தல்+பச்சை மிளகாய் 2
உப்பு, பெருங்காயத் தூள், தேங்காய்த் துருவல் (விரும்பினால்) அல்லது சின்ன வெங்காயம் பொடிப்பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். அவரவர் விருப்பம் போல்.
கருகப்பிலை, கொத்துமல்லி. வேறு ஏதேனும் கீரையைக் கூடப் பொடியாக நறுக்கிச் சேர்க்கலாம். நான் ஒரு கைப்பிடி சின்ன வெங்காயம் நறுக்கிச் சேர்த்தேன்.. காலை சுமார் பத்து மணி அளவுக்கு ஊற வைத்தேன். மாலை நாலு மணி சுமாருக்கு அரைத்தேன். இரவுக்கான உணவு தயார். எந்தச் சிறு தானியம் போட்டாலும் கொஞ்சம் போல் இட்லிப் புழுங்கல் அரிசியும், பச்சரிசியும் சேர்த்தால் செய்வதற்கு எளிது.
இதே போல் கம்பில் தோசையும் வார்க்கலாம்.
கம்பு+புழுங்கல் அரிசி+பச்சரிசி இரண்டு பங்கு கம்புக்கு புழுங்கலரிசியும், பச்சரிசியுமாய்க் கலந்து ஒரு பங்கு. முக்கால் கிண்ணம் உளுத்தம்பருப்பு, இரண்டு டீஸ்பூன் வெந்தயம். கம்பைத் தனியாக ஊற வைக்க வேண்டும். புழுங்கலரிசி+பச்சரிசியை ஒன்றாக ஊற வைத்துக் கொண்டு வெந்தயத்தையும் உளுத்தம்பருப்பையும் சேர்த்து ஊற வைக்கவேண்டும். கம்பை முதலில் அரைத்துக் கொண்டு பின்னர் அரிசிகளைச் சேர்த்து அரைக்க வேண்டும். நல்ல நைஸாகவே அரைக்கலாம். பின்னர் உளுத்தம்பருப்பு+வெந்தயம் போட்டதை அரைக்க வேண்டும். இட்லி, தோசைக்கூ அரைப்பது போல் உளுத்தம்பருப்பை அரைக்க வேண்டும். எல்லாவற்றையும் ஒன்றாகக் கலந்து உப்புப் போட்டுக் கரைத்து வைத்துப் புளிக்க விட வேண்டும். இட்லி அல்லது தோசை எது வேண்டுமானாலும் செய்யலாம். சட்னி, சாம்பார், கொத்சு என எதுவேண்டுமானாலும் தொட்டுக்கலாம்.
என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில் பெற பதிவு செய்து கொள்ளுங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக