>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 23 மே, 2019

    கோவில் புளிசாதம் செய்வது இத்தனை ஈசியா?


     Image result for கோவில் புளி சாதம்


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

    எங்கள் வாட்ஸ்சாப் குழுவில் இணைந்து கொள்ள இங்கே சொடுக்கவும்..
    இப்பொழுதே இணைந்துகொள்


    உணவில் புளிப்பு சுவை கூட்ட தக்காளி, எலுமிச்சைன்னு பயன்படுத்தினாலும் புளியம்பழத்தைதான் அதிகம் பயன்படுத்துறோம். அதிலும் தென்னிந்திய சமையலில் புளியம்பழம் அதிகம் இடம்பெறுது. இந்த புளியம்பழம் பேபேசி இனத்து முடிச்சு மரமாகும்.    நம்மூர்ல தேவை அதிகமிருக்குறதால அதிகமா பயிரிடப்படுதா இல்ல அதிகம் பயிரிடப்படுறதால நாம அதிகமா பயன்படுத்துறோமான்னு தெரில. தமிழகத்துல பரவலா இது விளையுது. அதிகம் நீரும், கவனமும் தேவை இல்லை. 

    புளியமரத்தின்கீழ் எந்த தாவரமும் வளராது. இரவில் புளிய மரத்தின்கீழ் உறங்கக்கூடாது. ஆடு, மாடுகளைக்கூட கிராமங்களில் கட்டமாட்டாங்க. ஏன்னா, புளியமரம் தன் சுற்றுப்புறத்தை சூடாக்கும் தன்மைக்கொண்டது.   பொங்கும் காலம் புளி, மங்கும் காலம் மாங்காய்ன்னு சொல்வாங்க. புளி அதிகம் விளைந்தால் அந்த வருடம் மாங்காய் விளைச்சல் குறைச்சலா இருக்கும். புளி விளைச்சல் குறைவா இருந்தா மாங்காய் விளைச்சல் அதிகமாய் இருக்கும்.  புளி அதிகம் விளைஞ்சா அந்த வருசம் சுபிட்ஷமா இருக்கும். 


    ஒன்னா இருந்தாலும் ஒட்டாத உறவை புளியம்பழமும் ஓடும்... போலன்னு உதாரணம் சொல்வாங்க.  என்னதான் பிசுபிசுப்பா இருந்தாலும் புளி அதன் ஓட்டோடு ஒட்டுவதில்லை, அதுப்போல என்னதான் அன்பா இருந்தாலும் சில உறவுகள் நம்மோடு ஒட்டாமயே இருக்கும். 



    புளியிலிருக்கும் சத்துகள்..
    இதில் அதிகளவு இரும்பு சத்தும்,  கால்சியம், வைட்டமின் பி, சி, பாஸ்பரஸ், நார்ச்சத்து, கார்போஹைட்ரேட்,   தாது உப்புகளும் இருக்குபுளியங்கொட்டையில் மாவுச்சத்தும், ஆல்புமினும், கொழுப்பு சத்தும் உண்டு.  புளியங்கொட்டையை வறுத்து தோல் நீக்கி உப்பு தண்ணில ஊற வெச்சு சாப்பிடுவோம். சின்ன வயசு ஸ்னாக்ஸ்ல இதும் ஒன்னு.



    புளிய இலையின் பயன்கள்...
    இது வயிற்றை சுத்தப்படுத்தும் கிருமிநாசினியா செயல்படுது. புளிய இலை சித்த மருத்துவத்தில் மருத்துவ பயன்பாட்டுக்கு பயன்படுது. இரைப்பை பிரச்சனை, செரிமான பிரச்சனைக்கும் இதயத்துடிப்பை பாதுகாக்கவும் இவ்விலை பயன்படுது. புளிய இலையை தேனீராக்கி குடித்தால் மலேரியா காய்ச்சலை குணப்படுத்தலாம்.  புளிய இலைகளை காஃபி கொட்டையோடு சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க மஞ்சள் காமாலை குணமாகும். இந்த காபி குழந்தைகளின் வயிற்றிலுள்ள பூச்சியை அழிக்கும். புளியங்கொழுந்துடன் துவரம்பருப்பு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டால் உடல் பலம் பெறும்.



    புளியின் பயன்பாடு...
    உணவுக்கு ருசியூட்டும் அதேவேளையில்  மலமிலக்கியாகவும் பயன்படுது.  கெட்டியாக கரைத்த புளிதண்ணியில் உப்பு, செம்மண் சேர்த்து பற்றுப்போட ரத்தக்கட்டு கரையும். புளித்தண்ணியோடு சுண்ணாம்பு கலந்து குழப்பி இளம்சூடாய் பற்றுப்போட தேள் விசம் இறங்கும்.  புளியம்பூக்களை துவையல் செய்து சாப்பிட்டால் மயக்கம், தலைச்சுற்றல் தீரும்


    நல்லதுலயும் ஒரு கெட்டது...
    அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சு என்பதைப்போல என்னதான் மருத்துவ குணம் அதிகமிருந்தாலும் வயிற்றில் அமிலத்தன்மையை சுரக்க வைக்கும் கெட்ட குணமும் இதற்குண்டு.  ரத்தத்தை சுண்ட வச்சிடும்ன்னு எங்கூர் பக்கம் சொல்வாக. அதனால புளிப்பு தூக்கலா இல்லாம பார்த்துக்கோங்க.   இப்ப நாம யூஸ் பண்ணுற புளிய விட குடம் புளி நல்லது. இதைதான் கேரள மக்கள் அதிகம் யூஸ் பண்ணுவாங்க.

    முன்னலாம் எங்காவது ஊர்பயணம் போகும்போது எடுத்துக்குற சோத்துமூட்டைல புளிசாதம்தான் முதல்ல இருக்கும். இதுக்கு மிக்சர், சிப்ஸ், அப்பளம்லாம் தொட்டுக்கிட்டா செம.  இது எதுமே இல்லாட்டி புளிசாதத்துல இருக்கும் மிளகாயை கடிச்சுக்கிட்டாலும் செமயா இருக்கும். மூணுவேளை தின்னாலும் உடம்புக்கு ஒன்னும் பண்ணாது


    என்னதான் நம்ம வீட்டுல  புளிசாதம் செஞ்சு சாப்பிட்டாலும் கோவில்ல கொடுக்கும் புளிசாதத்துக்கு தனி ருசி அதிகம். அது சாமி பிரசாதம்ங்குறதாலன்னு நினைச்சிட்டிருந்தேன். அப்புறம்தான் இதன் செய்முறைய தெரிஞ்சு செஞ்சபோது கோவில் டேஸ்ட் வீட்டுலயே.... 

    இனி கோவில் புளிசாதம் செய்யும் முறையை பார்க்கலாம்...

    தேவையான பொருட்கள்..
    புளி,
    எண்ணெய்,
    கடுகு,
    கடலைப்பருப்பு,
    உளுத்தம்பருப்பு
    தனியா,
    மிளகு,
    வெந்தயம்,
    எள்,
    காய்ந்த மிளகாய்,
    உப்பு,
    பெருங்காயம்,
    மஞ்சப்பொடி,
    வெல்லம்.
    உப்பு சேர்த்து உதிர் உதிரா வடிச்சு ஆற வெச்ச சாதம்.


    புளியை ஊற வச்சுக்கோங்க... புதுப்புளியா இல்லாம பழைய புளியா இருந்தா நல்லது.  புளி ஊறினதும் கரைச்சு ஓடு, நார் இல்லாம வடிகட்டிக்கோங்க..



    வெறும் வாணலி சூடானதும் எண்ணெய் இல்லாம ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு, ஒரு டேபிள்ஸ்பூன் உளுத்தம்பருப்பை வறுத்து எடுத்துக்கோங்க



    அடுத்து தனியாவையும் வறுத்து எடுத்துக்கோங்க.



    அடுத்து மிளகை வறுத்துக்கோங்க....



    அடுத்து மிளகாயை வறுத்து எடுத்துக்கோங்க..  அப்படியே எள்ளையும் வறுத்தெடுத்துக்கொங்க. நான் படமெடுக்க மறந்துட்டேன். நீங்க மறந்துடாதீக.


    வறுத்த பொருட்கள்லாம் ஆறினதும் பெருங்காயம் சேர்த்து கொஞ்சம் கொரகொரப்பா தூளாக்கிக்கோங்க...



    வாணலில எண்ணெய் ஊத்தி காய்ஞ்சதும் கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, வேர்க்கடலையை வறுத்துக்கோங்க. வசதி இருக்கவங்க முந்திரிப்பருப்பு சேர்த்துக்கலாம்.



    வாணலி சூடானதும் எண்ணெய் ஊத்திக்கோங்க. 


    கடுகு போட்டு வெடிக்க விடுங்க...

    கடுகு வெடிஞ்சதும் காய்ஞ்ச மிளகாயை போடுங்க...

    மிளகாய் சிவந்ததும் கறிவேப்பிலை போடுங்க... 

    கரைச்சு வெச்ச புளியை ஊத்துங்க...

    மஞ்சப்பொடி சேருங்க.. 

    உப்பு சேருங்க... 


    பெருங்காயம் சேர்த்து நல்லா கொதிக்க விடுங்க...


    மாமியார் மாமனார்க்கிட்ட கோவிச்சுக்கிட்டு தனிக்குடித்தனம் போகும் பொண்ணுபோல எண்ணெய் பிரிஞ்சு வரும் நேரத்துல வெல்லத்தை சேர்த்து இறக்கிடுங்க. வெளில இருந்தாலும் பத்து நாள் வரை இந்த குழம்பு தாங்கும். பொடி ரெண்டு மூணு மாசம் வரை தாங்கும்



    ஆறின சாதத்துல முதல்ல வறுத்த பருப்புகளை சேர்த்து எல்லா இடத்துலயும் இருக்குற மாதிரி கிளறுங்க.  அடுத்து பொடி சேர்த்து எல்லா இடத்துயும் இருக்குற மாதிரி கிளறி கடைசியா புளிக்குழம்பை ஊத்தி கிளறுங்க.. தேவைப்பட்டா கொஞ்சம் . எண்ணெய் சேர்த்துக்கலாம். எண்ணெயை சூடு செய்யனும்ன்னு அவசியமில்ல



    கமகமக்கும் கோவில் புளிசாதம் ரெடி. இந்த வாசத்துக்கு கடவுளே நம்ம வீட்டுக்கு வருவார்.
     என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும் உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


    வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..

    1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

    2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

    3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

    4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


    5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக