Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

வியாழன், 6 ஜூன், 2019

தைவானிலிருந்து 200க்கும் அதிகமான சட்டவிரோத குடியேறிகள் நாடுகடத்தப்பட்டனர்


 Image result for taiwan


இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..

Follow Us:
Contact us : oorkodangi@gmail.com



தைவானிலிருந்து பல்வேறு நாடுகளை சேர்ந்த 268 சட்டவிரோத குடியேறிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தைவானின் தேசிய குடிவரவு முகமை தெரிவித்திருக்கின்றது. இவர்கள அனைவரும் மே 1 முதல் 31 வரையிலான காலத்தில் நாடுகடத்தப்பட்டிருக்கின்றனர். 
 தற்போது வெளியேற்றப்பட்ட குடியேறிகள் இந்தோனேசியா, வியாட்நாம், தாய்லாந்து, பிலிப்பைன்ஸ், வங்கதேசம், மற்றும் மலேசியாவை சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டுள்ளது. 
சமீபத்தில், அறிவிக்கப்பட்ட மன்னிப்பு திட்டத்தின் கீழ் இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர். 
இது தொடர்பாக குடிவரவு முகமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  குடியேறிகள் ஈகை பெருநாளுக்குள் வீடு திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த ஏப்ரல் முதல் நாடுகடத்தல் பணியை தீவிரப்படுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 
வரும் ஜூன் 30 வரை நடைமுறையில் இருக்கும் மன்னிப்பு திட்டத்தின் கீழ் வெளியேறுகிறவர்கள், அதிகபட்சமாக 63 அமெரிக்க டாலர்கள் (சுமார் 4000 ரூபாய்) அபராதம் கட்டினால் போதுமானது. தைவானில் மீண்டும் நுழைவதற்கு விதிக்கப்படும் தடைக்கான காலயளவும் குறைக்கப்படும். தைவானில் உள்ள சட்டவிரோத குடியேறிகளை கட்டுப்படுத்தும் எண்ணத்தில் இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
மன்னிப்பு காலம் நிறைவடைந்த பின்னர் வெளியேற்றப்படுகிறவர்களுக்கு 20,000 ரூபாய் வரை அபராதமும் மீண்டும் தைவானுக்குள் நுழைவதற்கு நீண்டகால தடையும் விதிக்கப்படும் என குடிவரவு முகமை எச்சரித்திருக்கின்றது. 


என்னுடைய வலைத்தளத்தில் வெளிவரும் அனைத்து பதிவுகளுக்கும்  

உங்களின் மேலானகருத்துக்கள் வரவேற்கபடுகின்றன 

மேலும் இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை உடனுக்குடன் 

உங்கள் மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள். 


வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்..


1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.

2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ இணைவோம் தமிழால்  குழுவிற்கு   முழு உரிமை உண்டு.

3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.

4. இணையதள முகவரிகள், வலைப்பக்கங்களின் சுட்டிகளை இங்கே பதிவிட வேண்டாம் என வேண்டுகிறோம்.


5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்-இணைவோம் தமிழால்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக