Turn Your Memories into Beautiful Gifts 🎁 – Order Now

Click here to join our WhatsApp channel

புதன், 28 ஆகஸ்ட், 2019

இனி சானிடரி நாப்கின் ₹.1 மட்டும்: இன்று முதல் ஜான் ஆஷாதி கடைகளில் விற்பனை

இனி சானிடரி நாப்கின் ₹.1 மட்டும்: இன்று முதல் ஜான் ஆஷாதி கடைகளில் விற்பனை!

இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

 Join Our Telegram Channel

Join Our Whatsapp Group

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com

மக்கள் மலிவுவிலை மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் சானிட்டரி நாப்கின்களின் விலையை ஒரு ரூபாயாக குறைத்து மத்திய அரசு உத்தரவு!!
மக்கள் மருந்தகங்களில் விற்பனை செய்யப்படும் சானிடரி நாப்கின்களின் விலையை ரூ. 2.50-இல் இருந்து ரூ.1-ஆக மத்திய அரசு குறைத்துள்ளது. மகளிர் நலத்தை மேம்படுத்தும் முயற்சியாக இந்த விலைக் குறைப்பு நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது.
இதுகுறித்து, உரம் மற்றும் ரசாயனத் துறை இணையமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில்; 4 சானிடரி நாப்கின்களைக் கொண்ட பாக்கெட் தற்போது 10 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த பாக்கெட், ஆகஸ்ட் 27 ஆம் தேதி முதல் 4 ரூபாய்க்கு கிடைக்கும். நாடு முழுவதும் உள்ள மக்கள் மருந்தகங்களில் (ஜன் ஒளஷதி கேந்திரா) சுவிதா என்ற பிராண்ட் பெயரில் இந்த நாப்கின்கள் கிடைக்கும். நாப்கின்களின் விலையை 60 சதவீதம் அளவுக்கு குறைத்தன் மூலம், நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலின்போது மக்களுக்கு அளித்த வாக்குறுதியை பாஜக நிறைவேற்றியுள்ளது.
இதுவரை உற்பத்தி விலைக்கே சானிடரி நாப்கின்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இந்த விலையை மேலும் குறைப்பதற்காக, மத்திய அரசு சார்பில் மானியம் வழங்கப்படும். மக்கள் மருந்தகங்களில் கடந்த ஓராண்டில் 2.2 கோடி சானிடரி நாப்கின் விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Light
Dark
!

🔔 Subscribe to ஊர்க்கோடாங்கி

Get instant updates for new posts, panchangam & rasi palan!