Learn Carnatic Music in Online

Click here to join our WhatsApp channel

Click here to join our Telegram Channel

புதன், 21 ஆகஸ்ட், 2019

ஏழை மீனவன்...!

 Image result for ஏழை மீனவன்...!
இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

 

Follow Us:

Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

Instagram: pudhiya.podiyan

Contact us : oorkodangi@gmail.com



ஏழை மீனவன் ஒருவர் கடற்கரையில் அவரது கட்டுமரத்தின்மேல் படுத்து பானகம் பருகிக் கொண்டும், பாட்டுப் பாடிக் கொண்டும் கவலையில்லாமல் மகிழ்ச்சியாகப் பொழுதை கழித்துக் கொண்டிருந்தார். அப்போது கடற்கரைக்கு வந்த இளைஞன் ஒருவன் அவர் செய்வதை கவனித்துக் கொண்டிருந்தான்.

கடற்கரையிலிருந்து சென்ற இளைஞன் சில மணி நேரம் கழித்து மீண்டும் கடற்கரைக்கு வந்த போதும் அவர் அதே நிலையில் தான் இருந்தார். அதைப் பார்த்த இளைஞனுக்குப் பொறுக்கவில்லை.

அதனால், மீனவனிடம் சென்று, ஐயா! இப்படி வேலை செய்ய வேண்டிய காலத்தில் படுத்துப் பொழுதை வீணடிக்கிறீர்களே. இப்படி படுத்துக்கிடக்கும் நேரத்தில் கடலுக்குள் சென்று மீன் பிடித்தால் நாலு காசாவது கிடைக்குமே! என்றான்.

அதற்கு மீனவன் காசு கிடைச்சா...? என்று ரஜினி பாணியில் கேட்டான். இளைஞன் காசு சேர்த்தால் நீங்கள் இந்தக் கட்டுமரத்தை விற்றுவிட்டு ஒரு படகு வாங்கலாம். அதை எடுத்துக்கொண்டு கடலுக்குள் போனால் இன்னும் நிறைய மீன் பிடித்து வரலாம். ஒவ்வொரு நாளும் பணம் அதிகமாக சம்பாதிக்கலாம் என்று கூறினான்.

அதற்கு மீனவன், அதிகம் சம்பாதிச்சா...? என்று கேட்டான். அதற்கும் இளைஞன் பொறுமையாக ஐயா, நீங்கள் உங்களுக்கு நல்லதொரு வீடு கட்டிக் கொள்ளலாம். சிறிது சிறிதாகப் பொருள் சேர்த்து மீன்பிடிக்கும் கப்பல் ஒன்றை வாங்கலாம். ஆழ்கடலுக்குள் சென்று பலவகை மீன்களைப் பிடித்து வரலாம். உள்நாட்டுச் சந்தை தவிர வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் நீங்கள் அவற்றை ஏற்றுமதி செய்யலாம் என்று கூறினான்.

அதற்கும் மீனவன் ஏற்றுமதி செஞ்சா...? என்று திருப்பிக் கேட்டான். இளைஞனுக்கு மீனவனின் அறியாமை குறித்து சிறிது அதிருப்தி ஏற்பட்டாலும் பொறுமையை தக்க வைத்துக்கொண்டு ஏற்றுமதி செய்தால் உங்களுக்கு அந்நியச் செலாவணி கிடைக்கும். அதை வைத்து நீங்கள் பெரிய மாளிகை போன்ற வீட்டைக் கட்டிக் கொள்ளலாம். படகு போன்ற கார் வாங்கலாம் என்றான்.

அதற்கு மீனவன் மறுபடியும், இதெல்லாம் கிடைச்சா... என்றான். இளைஞன் உங்களுக்கு அதற்குப் பின்னால் வேலை செய்ய வேண்டிய தேவையே இருக்காது. மகிழ்ச்சியாக நாளெல்லாம் கடற்கரைகளில் மணலில் படுத்து பானகம் பருகி பாட்டுப் பாடிக் கொண்டே வாழ்க்கையை அனுபவிக்கலாம் என்றான்.

அதற்கு மீனவன் நான் இப்பவே அதைத்தானே நண்பா செய்து கொண்டிருக்கிறேன் என்றார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக