>>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • >>
  • மாத்தூர் ஔஷதபுரீஸ்வரர்: நோய் நிவாரணம் தரும் தெய்வம்
  • >>
  • 31-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெற்றிகள் தாமாக வருவதில்லை, நாம்தான் உருவாக்குகிறோம்!
  • >>
  • தூத்துக்குடி சங்கரராமேசுவரர் திருக்கோவில்
  • >>
  • 30-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • ரிஷபத்தின் முன் நின்ற தட்சிணாமூர்த்தியின் அபூர்வ உருவம்
  • >>
  • 28-03-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • பணிவு vs. முன்னேற்றம் – உங்கள் வாழ்க்கையின் பாதையை தீர்மானியுங்கள்!
  • >>
  • திருக்கோஷ்டியூர் அருள்மிகு சௌமிய நாராயண பெருமாள் திருக்கோவில்
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வியாழன், 8 ஆகஸ்ட், 2019

    தற்பெருமை...!

    Image result for தற்பெருமை


    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com

    குரு ஒருவர் தன் சீடர்கள் சிலருடன் பேசிக்கொண்டே ஆற்றின் கரையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார்.

    திடீரென குரு கால் வழுக்கி, நிலைதடுமாறி ஆற்றில் விழப்போனார். அப்போது அருகிலிருந்த ஒரு சீடன், சட்டென்று குருவின் கையைப் பிடித்து இழுத்து, அவரை ஆற்றில் விழாமல் காப்பாற்றினான்.

    அவன் அவரைக் காப்பாற்றாமல் இருந்திருந்தால், ஆற்றில் விழுந்த அவர், பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டிருப்பார். குருவும் மற்ற சீடர்களும் காப்பாற்றிய சீடனுக்கு, நன்றி தெரிவித்தனர்.

    இதனால் அந்த சீடனுக்குத் தற்பெருமை அதிகமாகி விட்டது. பார்ப்பவர்களிடமெல்லாம், ஆற்றில் விழ இருந்த குருவை நான்தான் காப்பாற்றினேன். இல்லாவிட்டால், இந்நேரம் குரு ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டு இறந்திருப்பார் என்று கூறத் தொடங்கினான்.

    இந்த விஷயம் குருவின் காதுக்கு எட்டியது. அதன்பிறகு அதே சீடர்களை மறுநாள் அழைத்துக் கொண்டு, அதே ஆற்றின் கரையோரம் நடந்து சென்றார்.

    அன்று சம்பவம் நடந்த இடம் வந்ததும், முன்பு தன்னைக் காப்பாற்றிய சீடனிடம், என்னை ஆற்றில் தள்ளிவிடு! என்றார். அந்த சீடன் திகைத்து நின்றான். மீண்டும்... தள்ளு! என்றார் குரு.

    வேண்டாம் குருவே! என்று சீடன் கூறினான். இது குருவின் உத்தரவு. கேட்டு நடப்பது உன் கடமை. என்னை ஆற்றில் தள்ளு! என்றார். மிரண்டுபோன சீடன் அவரை ஆற்றில் தள்ளி விட்டான்.

    மற்ற சீடர்கள் என்ன நடக்கப்போகிறதோ? என்று திகைத்துப் பார்த்தனர். ஆற்றில் விழுந்த குரு, எந்தவித பதற்றமும் இல்லாமல், அமைதியாக நீந்திச் சென்று மறுகரையைத் தொட்டுவிட்டுத் திரும்பி வந்தார். அதைப் பார்த்த சீடர்கள் அனைவரும் திகைத்தனர்.

    குரு கரை மேலே ஏறி வந்ததும், தள்ளிவிட்ட சீடனைப் பார்த்து, இப்போதும் நீதான் என்னைக் காப்பாற்றினாயா? என்று கேட்டார். உடனே அந்த சீடன் தலை குனிந்தான்.

    ஆபத்து நேரத்தில் ஒருவரைக் காப்பாற்றுவது, ஒருவருக்கு உதவுவது என்பது மனிதாபிமானமுள்ள செயலாகும். ஆனால், அதை விளம்பரப்படுத்தி பெருமையடித்துக் கொள்வது அந்த மனிதாபிமான குணத்திற்கே இழுக்கைத் தேடித் தரும். அந்த மனிதன் ஒருநாளும் சான்றோனாக முடியாது! என்று குரு கூறினார்.

    தன் தவறை உணர்ந்த தற்பெருமை கொண்ட சீடன், குருவிடம் மன்னிப்புக் கேட்டு, தற்பெருமை எண்ணத்தைக் கைவிட்டான்.

    நீதி :

    எனக்குத் தெரியும் என்பதற்கும், எனக்கு மட்டும்தான் தெரியும் என்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. எல்லாம் தெரிந்த மனிதனும் இல்லை, எதுவும் தெரியாத மனிதனும் இல்லை என்ற உலக உண்மையை மறந்த மனிதன்தான், இந்த தற்பெருமை வலையில் விழுந்து அவமானப்படுகிறான்.

    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக