>>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    வெள்ளி, 23 ஆகஸ்ட், 2019

    திருமணம் நடக்கும் போது மழை பெய்வது நல்ல சகுனமா?

     Image result for திருமணம் நடக்கும் போது மழை பெய்வது நல்ல சகுனமா?

    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


    ஐந்து அறிவு வரை உள்ள ஜீவன்கள், தாவரங்கள் போன்ற இயற்கையின் அங்கங்களாய் திகழும் ஜீவன்களின் அசைவை வைத்து நல்லது கெட்டதை அனுமானிப்பதே சகுனம் பார்ப்பது ஆகும்.

    ஒவ்வொரு நல்ல செயல்களை தொடங்கும்போதும் நாம் சகுணம் பார்க்கின்றோம். அதேபோல் திருமண விழாவின்போதும் அதிக அளவில் நாம் சகுணங்கள் பார்கின்றோம். திருமணம் நடக்கும்போது மழை பெய்வது நல்ல சகுனமா? அல்லது கெட்ட சகுனமா? என்பதைப் பற்றி பார்ப்போம்.

    திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்று அனைவரும் கூறக் கேட்டிருப்போம். அத்தகைய திருமணமானது அன்றைய காலத்தில் பிரம்ம முகூர்த்தமான காலை நேரத்தில் மட்டுமே நடத்தப்பட்டது. ஆனால் இன்றைய காலக் கட்டத்தில் இரவிலும் நடக்கின்றது.

    மழை பெய்வது ஒரு இயற்கை நிகழ்வாகும். மழை பொழிவானது அனைவரின் மனதிலும் ஓர் மகிழ்வைக் கொடுக்கும். அந்த மழையானது, வறண்ட நிலத்தில் உள்ள பயிர்களை உயிர்ப்பிக்கிறது. அந்த வகையில் வைத்து பார்க்கும் போது, திருமண நாளன்று மழை பெய்வது அந்த மணமக்களின் அதிர்ஷ்டமாக கருதப்படுகிறது.

    மழையானது ஆசீர்வாதம், தூய்மை, ஒற்றுமை மற்றும் வளமை ஆகியவற்றைக் குறிக்கிறது. எனவே நமது வாழ்க்கையின் முக்கிய நாட்களில் மழை பெய்வது நல்ல சகுனமாக கருதப்படுகிறது. மழை என்பது ஆசீர்வாதத்தை குறிக்கிறது. எனவே திருமண நாளன்று மழை பெய்தால் அந்த மணமக்கள் மழையினால் ஆசிர்வதிக்கப்படுவார்கள்.

    மழை பெய்ததும் நமக்கு தேவையான நீர் மற்றும் வளமை கிடைக்கும். அதேபோல் திருமணம் நடக்கும்போது திருமணம் நடைபெறும் போது, மழை பெய்தால், அந்த மணமக்கள் ஒற்றுமையாகவும், அவர்களின் எதிர்காலத்திற்கு தேவையான நிறைந்த செல்வத்தை பெற்று நல்ல வளமுடன் வாழ்க்கையை தொடங்குவார்கள் என்று கருதப்படுகிறது.

    மழை பெய்து முடிந்ததும் ஒரு புதிய ஆரம்பத்திற்கான வழி கிடைத்து விட்டது என்று அர்த்தமாகும். எனவே திருமணம் நாளில் மழை பெய்வதால், திருமணம் முடிந்த புதிய தம்பதிகள், தங்களின் புதிய வாழ்க்கையில் தெளிவான மனநிலையுடன் இருப்பார்கள் என்று பொருள்படும்.

    எனவே திருமணத்தின் போது மழை பெய்வது மிகவும் நல்ல சகுனமாகும். தம்பதிகளின் மேன்மேலும் வளர்ச்சியையும், மகிழ்ச்சிக்கு குறைவில்லை என்பதையும் குறிக்கிறது.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக