>>
  • சக்கரப்பள்ளி சக்ரவாகேஸ்வரர் திருக்கோயில் – தேவாரம் முழங்கும் தஞ்சாவூர் மாமணிதலம்!
  • >>
  • 16-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • கிரெடிட் கார்டு மற்றும் அமேசான் கிப்ட் கார்டு - எதை தேர்வு செய்வது? முழுமையான ஒப்பீடு!
  • >>
  • 14-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • 07-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • Karma – கொரியன் வெப் சீரிஸ் விமர்சனம்
  • >>
  • மகிழ்ச்சியின் பின்னால் ஒளிந்திருக்கும் ஆபத்து… டோபமைனின் இருண்ட பக்கம்!
  • >>
  • வேம்பத்தூர் கைலாசநாதர் திருக்கோயில் – புனிதத்தையும் புதுமையும் சொல்லும் ஒரு ஆன்மிகப் பயணம்
  • >>
  • 06-04-2025 இன்றைய தின சிறப்புகள் மற்றும் இன்றைய ராசிபலன்கள்
  • >>
  • வெஜ் ரொட்டி ரோல் செய்வது எப்படி?
  • Learn Carnatic Music in Online

    Click here to join our WhatsApp channel

    Click here to join our Telegram Channel

    புதன், 18 செப்டம்பர், 2019

    கிள்ளுப்பிராண்டி..!

     Image result for கிள்ளுப்பிராண்டி..!
    இந்த செய்தியை படித்துவிட்டு உங்கள் எண்ணங்களை கீழே பதிவு செய்யுங்கள்.. இந்த செய்தி பிடித்திருந்தால் உங்கள் நட்பு வட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்..
    இதுபோன்ற எங்களின் பல்வேறு பதிவுகளை  உடனுக்குடன் உங்கள்
    மின்னஞ்சலில்  பெற  பதிவு  செய்து கொள்ளுங்கள்.

     

    Follow Us:

     Join Our Telegram Channel

    Join Our Whatsapp Group

    Twitter: www.twitter.com/Pudhiyapodiyan

    Facebook:https://www.facebook.com/Pudhiyapodiayan

    Instagram: pudhiya.podiyan

    Contact us : oorkodangi@gmail.com


     குழந்தைகள் விளையாடுவதன் மூலம் உடல்நலம், சமூக நலம், மன நலம் ஆகிய மூன்றையும் பெறலாம். குழந்தைகள் மற்றவர்களுடன் சேர்ந்து விளையாடும்போது அவர்களிடம் இருக்கும் கவலைகளை மறந்து உற்சாகத்தில் இருப்பார்கள்.

     அந்த வகையில் நாம் இன்று குழந்தைகளுக்கு உற்சாகத்தை தரும் விளையாட்டுகளில் ஒன்றான கிள்ளாப் பறண்டி விளையாட்டை பற்றி பார்க்கலாம்.

    எத்தனை பேர் விளையாடலாம்?

    குழந்தைகள் ஒரு குழுவாக சேர்ந்து விளையாடலாம்.

    எப்படி விளையாடுவது?

     முதலில் இந்த விளையாட்டை விளையாடுவதற்கு முன்பு அம்மாவாக ஒரு நபரைத் தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

     பிறகு விளையாடும் குழந்தைகள் அனைவரும் தரையில் கைகளை விரித்து வட்டமாக உட்கார்ந்துக்கொள்ள வேண்டும்.

     அதன்பின் அம்மாவாக இருக்கும் நபர் குழந்தைகள் விரித்து வைத்திருக்கும் கையில் கிள்ளாமல் கிள்ளி பறண்டுவர்.

    அப்படி பறண்டும்போது,

    கிள்ளாக் கிள்ளாப் பறண்டி

    கீச்சு மூச்சுப் பறண்டி

    உங்க அப்பன் பேரு என்ன?

    என்று பாடிக்கொண்டே குழந்தைகளின் கைகளை கிள்ளுவாள்.

     பிறகு அந்த குழந்தை முருங்கைப்பூ என்று ஏதாவது ஒரு பூவின் பெயரைச் சொல்ல வேண்டும். அவ்வாறு அடுத்தடுத்து வரும் குழந்தைகள் பூவின் பெயரைச் சொல்லாமல், காயின் பெயர் மற்றும் பழத்தின் பெயரை சொல்ல வேண்டும்.

     அம்மாவாக இருக்கும் நபர் முருங்கைப்பூ என்று சொல்லும் குழந்தையிடம் 'முருங்கைப் பூ தின்றவரை முடிச்சுப்போட்டு வச்சிக்கோ" என்றுச் சொல்லி அந்த குழந்தையின் கையில் ஒரு சிறு கல்லைத் தர வேண்டும்.

     பிறகு சிறு கல்லை வாங்கும் குழந்தை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்துக் கொள்ள வேண்டும். அதன்பின் எல்லா குழந்தைகளிடமும் அம்மாவாக இருக்கும் நபர் இதே போல் செய்து கொண்டே போக வேண்டும்.

     கல் இல்லாத குழந்தைகளும் அவர்களிடம் கல் இருப்பதுபோல் மற்றவர்களிடம் நடித்துக் காட்ட வேண்டும்.

    கடைசியில் யார் கையில் கல் உள்ளது என்பதை யார் சரியாக சொல்கிறார்களோ அவர் பழம் பெற்றுவிடுவார். அவர் வெளியே சென்று விடலாம். இதேபோல் மீதமுள்ள நபர்கள் ஆட்டத்தை தொடர்ந்து விளையாட வேண்டும்.


    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக